இரத்தினபுரி, எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் நேற்று (27) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மாமியார் கொ லை செய்யப்பட்டுள்ள நிலையில் மருமகன் தப்பியோடியுள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் புலத்கொஹுபிட்டிய , எஹெலியகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடையவர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குடும்பத் தகராறு காரணமாக, கொ லை செய்யப்பட்டவரின் மருமகனால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தையடுத்து, சந்தேக நபரான மருமகன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை எஹெலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.