கொழும்பு, முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனிமுல்ல சந்திக்கு அருகில் களனி கங்கையில் மிதந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை (17) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
40 முதல் 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் சடலமானது கொழும்பு ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.