• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

உலக கனிஷ்ட ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தின் அரை இறுதிக்கு முன்னேறினார் அக்கலன்க

admin by admin
August 30, 2024
in இலங்கை செய்திகள்., விளையாட்டுச் செய்திகள்
0
உலக கனிஷ்ட ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தின் அரை இறுதிக்கு முன்னேறினார் அக்கலன்க
Share on FacebookShare on Twitter

பெரு தேசத்தின் லீமா, எஸ்டாடியோ அத்லெட்டிக்கோ டி லா விடேனா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 20 வயதுக்குட்பட்ட உலக மெய்வல்லுநர் (உலக கனிஷ்ட) சம்பியன்ஷிப் ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியின் அரை இறுதிச் சுற்றில் பங்குபற்ற இலங்கையின் இளம் வீரர் அயோமல் அக்கலன்க தகுதிபெற்றுள்ளார்.

இலங்கை சார்பாக இரண்டாம் நாள் போட்டிகளில் பங்குபற்றிய ஜத்ய கிருலு, ஜித்மா விஜேதுங்க, மதுஷானி ஹேரத் ஆகியோர் பிரகாசிக்கத் தவறினர்.

புதன்கிழமை இரவு நடைபெற்ற 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிக்கான 2ஆவது தகுதிகாண் சுற்றில் பங்குபற்றிய அயோமல் அக்கலன்க அப் போட்டியை 52.04 செக்கன்களில் நிறைவு செய்து 4ஆம் இடத்தைப் பெற்றார்.

தகுதிகாண் சுற்றில் 7 போட்டிகள் நடத்தப்பட்டதுடன் அவற்றில் முதல் 3 இடங்களைப் பெற்ற 21 வீரர்கள் நேரடியாக அரை இறுதியில் பங்குபற்ற தகுதிபெற்றனர்.

அவர்களைவிட அதிசிறந்த நேரப் பெறுதிகளுடன் அடுத்த 3 இடங்களைப் பெற்றவர்களில் அக்கலன்க முன்னிலையில் இருந்ததால் அரை இறுதியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.

அரை இறுதிகளுக்கு முன்னேறிய 24 வீரர்களில் அக்கலன்க ஒட்டுமொத்த நிலையில் 12ஆம் இடத்தில் உள்ளார்.

அவர் பங்குபற்றவுள்ள அரை இறுதிச் சுற்று ஆகஸ்ட் 30ஆம் திகதி (இலங்கை நேரப்படி ஆகஸ்ட் 31ஆம் திகதி அதிகாலை 2.35 மணி) நடைபெறவுள்ளது.

அரை இறுதியுடன் ஜத்ய வெளியேறினார்

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் ஜத்ய கிருலு அரை இறுதிப் போட்டியுடன் வெளியேறினார்.

தகுதிகாண் சுற்றின் 4ஆவது போட்டியை 47.64 செக்கன்களில் நிறைவுசெய்து 3ஆம் இடத்தைப் பெற்றதன் மூலம் அரை இறுதியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.

அரை இறுதிக்கு தகுதிபெற்ற 24 பேருக்கான ஒட்டுமொத்த நிலையில் 23ஆம் இடத்தில் இருந்த ஜத்ய கிருலு அரை இறுதிக்கான 3ஆவது போட்டியில் 4ஆம் இடத்தைப் பெற்று வெளியேறினார். 

அப்போட்டியை 47.85 செக்கன்களில் நிறைவு செய்த அவர் ஒட்டுமொத்த நிலையில் 16ஆவது இடத்தைப் பெற்றார்.

ஜித்மா கடைசி இடம்

பெண்களுக்கான 400 மீற்றர் தகுதிகாண் சுற்றின் முதலாவது போட்டியில் பங்குபற்றிய ஜித்மா விஜேதுங்க கடைசி இடத்தைப் பெற்று (56.16 செக்.) வெளியேறினார்.

52 வீராங்கனைகள் 8 தகுதிகாண் சுற்றுகளில் பங்குபற்றிய அப் போட்டியில் ஒட்டுமொத்த நிலையில் ஜித்மா 47ஆவது இடத்தைப் பெற்றார்.

மதுஷானிக்கு பலத்த ஏமாற்றம்

பெண்களுக்கான முப்பாய்ச்சலில் சாதிக்கக்கூடியவர் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மதுஷானி ஹேரத், முழு இலங்கையையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கினார்.

இப்போட்டிக்கான ஏ குழுவுக்கான தகதிகாண் சுற்றில் பங்குபற்றிய 16 வீராங்கனைகளில் மதுஷானி ஹேரத் 12.23 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 14ஆம் இடத்தைப் பெற்று இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

ஏ மற்றும் பி குழுக்களில் 31 வீராங்கனைகள் பங்குபற்றி தகுதிகாண் சுற்றுக்கான ஒட்டுமொத்த நிலையில் 26ஆவது இடத்தை மதுஷானி பெற்றார்.

Related Posts

புதுக்குடியிருப்பு பாண்டியன் வீதி பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்; நேரடியாக சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி.!

புதுக்குடியிருப்பு பாண்டியன் வீதி பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்; நேரடியாக சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி.!

by Mathavi
June 16, 2026
0

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து கடந்த டித்வா பேரனர்த்தத்தின்போது உடைப்பெடுத்த முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, பாண்டியன்வீதி பாலத்தை புதிதாக அமைக்கும்...

பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கில் யோஷிதவின் மனு மீதான விசாரணைகள் நிறைவு.!

பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கில் யோஷிதவின் மனு மீதான விசாரணைகள் நிறைவு.!

by Mathavi
June 16, 2026
0

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கெதிராகச் சுமத்தப்பட்டுள்ள "சதித்திட்டம்" என்ற குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்யக் கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ தாக்கல்...

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைத் தன்மையை மூடிமறைக்காது உரிய விசாரணை நடத்துக.!

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைத் தன்மையை மூடிமறைக்காது உரிய விசாரணை நடத்துக.!

by Mathavi
June 16, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை உடனடியாகக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத்தர வலியுறுத்தி, கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு...

பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகிய மானிப்பாய் தவிசாளர்.!

பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகிய மானிப்பாய் தவிசாளர்.!

by Mathavi
June 16, 2026
0

மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசீதன், பிரதேச சபையின் வாகனத்தில் சாரத்தியம் பழகியதாக உறுப்பினர் அச்சுதபாயன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மிகச் சிறப்பான முன்னேற்றம்.!

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மிகச் சிறப்பான முன்னேற்றம்.!

by Mathavi
June 16, 2026
0

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பான முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், எதிர்காலத்தில் பொலித்தீன் மற்றும் ஒரு நாள்...

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு.!

காணாமல் போன நபர் சடலமாக மீட்பு.!

by Mathavi
June 16, 2026
0

கடந்த 11 ஆம் திகதி முதல் காணாமல் போனவரை 5 நாட்களாக தேடி வந்த ஸ்டரஸ்பி தோட்ட தொழிலாளர்கள் இன்று 16 ஆம் திகதி மதியம் 12...

வவுனியாவில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்.!

வவுனியாவில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்.!

by Mathavi
June 16, 2026
0

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'சிசு செரிய' பேருந்து சேவையின் ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (15.06.2026) வவுனியா பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது....

றோயல்ஸ் அணி BPL போட்டியில் சம்பியன்.!

றோயல்ஸ் அணி BPL போட்டியில் சம்பியன்.!

by Mathavi
June 16, 2026
0

Manipay Bright sports Club இன் வீரர்களுக்கு இடையில் வருடம்தோறும் இடம்பெறும் BPL எனப்படும் Bright premier league போட்டியானது இவ்வருடமும் 7 ஆவது முறையாக நேற்று...

சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்க முடியாது; வீதிக்கு இறங்கிய தோட்ட மக்கள்.!

சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்க முடியாது; வீதிக்கு இறங்கிய தோட்ட மக்கள்.!

by Mathavi
June 16, 2026
0

இன்று புஸ்சலாவ பிளான்டேஷன் பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான ரொத்ஸ்சைல்ட் தோட்டத்தில் உள்ள சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பொதுமக்களும் ஒன்றிணைந்து நீதிக்கான போராட்டத்தில் கலந்துகொண்டனர். கடந்த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; கைது செய்வதை தடுக்கக் கோரி கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; கைது செய்வதை தடுக்கக் கோரி கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு.!

by Mathavi
June 16, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி