இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களின் கரிநாள் என குறிப்பிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று, யாழ்ப்பாபத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான போராட்டம், பதாகைகளைத் தாங்கிய ஊர்வலமாக யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலை வந்தடைந்தது.
இதன்போது சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள், அடக்குமுறைக்கு உள்ளாக்கும் சட்ட மூலங்களை நீக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தவாறு கருப்புப் பட்டியணிந்து, கைகளிலே பதாதைகளைத் தாங்கியவாறு கோஷங்களும் எழுப்பப்பட்டன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.