Browsing: செய்திகள்

சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில் அதிகரித்துவரும் மணப்பெண் விலைக்கு எதிராக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், ஜியாங்சி மாநிலத்தில் உள்ள கொள்கை ஆலோசகர் ஒருவர் அதற்கான தீர்வு ஒன்றைப் பரிந்துரைத்துள்ளார். ஜியாங்சி மாநிலக் குழு உறுப்பினரான லான் வென், கிராமப்புறத் திருமணத் தரகர்களுக்குப் புதிய சான்றிதழ் முறையை அறிமுகப்படுத்தும் யோசனையை முன்வைத்தார். இணையத்தில் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க உதவும் செயலிகள் பிரபலமாக உள்ளபோதும், சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில் திருமணமாகாத பல இளையர்கள் தொடர்ந்து பாரம்பரிய திருமணத் தரகர்களையே சார்ந்திருப்பதாக அவர் […]

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.இதனால் அவர் மீது விரைவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது/கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ”நாட்டின் அதியுயர் சட்டத்தை மீறி இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டுள்ளார். அதற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. தற்போதைய அரசாங்கம் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியுள்ளதுடன், சர்வாதிகார ஆட்சியை நோக்கி […]

ஏற்றுமதி நோக்கங்களுக்காக கஞ்சா பயிரிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவினால் அமைச்சரவையில் இந்தப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சரவையின் அனுமதி கிடைத்தமையால் மகிழ்ச்சியடைகின்றேன் என்று டயனா கமகே தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மன்னர் சார்ள்ஸ் ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெர்க்கிங்ஹம் அரண்மனை தெரிவித்துள்ளது. அவரின் புற்றுநோயின் வகை வெளிப்படுத்தப்படாததுடன் குறித்த விடயமானது அவரது சமீபத்திய சிகிச்சையின் போதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மன்னர் திங்களன்று ’வழக்கமான சிகிச்சையை’ தொடங்கினார் எனவும், மேலும் சிகிச்சையின் போது பொதுக் கடமைகளை ஒத்திவைப்பார் என்றும் அரண்மனை தெரிவித்துள்ளது. புற்றுநோயின் நிலை அல்லது முன்கணிப்பு பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் பகிரப்படவில்லை.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தாயாரான அமிர்தநாதன் செபமாலை நேற்று தனது 84 ஆவது வயதில் காலமானார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று காலை காலமானார். அன்னாரது இறுதிக் கிரியைகள் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளதுடன் விடத்தல் தீவு – சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யயப்படவுள்ளது

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் நேற்று இரவு படகுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த புதுமடம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மரைன் பொலிசார் பெரிய பட்டினம் கடற்கரையில் வைத்து ஒரு நாட்டுப் படையும் அதிலிருந்து சுமார் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் […]

இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக கருதப்படும் வகையில், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைவர் பேச்சுவார்த்தைக்காக புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸநாயக்க தலைமையிலான குழுவொன்று இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளமான எக்ஸ் இல் பதிவிட்டுள்ள கலாநிதி ஜெய்சங்கர், அநுர குமார திஸநாயக்கவை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவாதாக கூறியுள்ளார். […]

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் 14 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி – இத்தியடி பகுதியை சேர்ந்த ரகுராம் சாந்திரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை இரண்டு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குழந்தை இன்றையதினம் காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று பி.ப 1 மணியளவில் குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை […]

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பேரூந்துசாலைக்கு அண்மித்த மருதடி பகுதியில் சற்றுமுன் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த வைத்தியர் ஒருவர் பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் . சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வைத்தியரும், எதிரே வந்த சிறிய ரக வாகனமும் எதிரெதிரே மோதியே குறித்த விபத்து இடம்பெற்றிருந்ததாகவும், பலத்த காயமடைந்த மருத்துவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் […]

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார்க் கடையினுள் புகுந்தது ஏ-35 பிரதான விதியின் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் ஒன்று இன்றைய தினம் மாலை 5.40 மணியளவில் விசுவமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகிலே இருந்த கடையின் முன்பகுதியில் நிறுத்தி பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு வந்த வாடிக்கையாளர்கள் நிறுத்தி வைத்திருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் , ஒரு துவிச்சக்கரவண்டி மற்றும் முச்சக்கரவண்டி என்பனவற்றை மோதி […]