27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்விபத்து செய்திகள்

யக்கல – கம்பஹா வீதியில் வேன் மோதி பெண் பலி ! – சந்தேகநபர் தப்பியோட்டம்

யக்கல – கம்பஹா வீதியில் யக்கல பகுதியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹாவிலிருந்து யக்கல நோக்கி பயணித்த வேன் வண்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (01)  பெண் ஒருவர் மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் யக்கல பகுதியைச் சேர்ந்த  48 வயதுடைய  பெண்ணொருவராவார்.

குறித்த வேனின் சாரதி வண்டியை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேக நபரை கைதுசெய்வதற்கான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Related posts

மிகப்பெரிய கப்பலான ‘EVER ARM’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

User1

தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம்-10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு துடிதுடிக்க கொலை..!{படங்கள்}

sumi

சஜித்தைக் கொல்ல சதி!

sumi

Leave a Comment