28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் குகதாசன் முக்கிய அறிவிப்பு

தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு (P. Ariyanethran) ஆதரவு வழங்குவது என தமிழரசுக் கட்சியின் திருகோணமலை (Trincomalee) மாவட்டக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் (29.08.2024) ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடலில் எட்டப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை அலுவலகத்தில் இன்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் நீண்ட விவாதம் நடத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கலந்துரையாடலின் இறுதியில் ஒருமித்த முடிவாக தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

User1

பருத்தித்துறை பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள ஆபத்தை ஏற்படுத்தும் பாதை தடை தொடர்பான கலந்துரையாடல்!

User1

போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

sumi

Leave a Comment