27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

கோர விபத்து : மட்டக்களப்பு – காத்தான்குடி வீதியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி !

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் நேற்று (13) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் இருபது வயது இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் திருப்பதிகாரி ஜி கஜநாயக தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதான வீதி மீரா பாலிகா மகளிர் கல்லூரிக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை தலைக்கவசமின்றி செலுத்தி வந்த இரு இளைஞர்கள் முன்னாள் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 20 வயதுடைய சஹ்ரான் முஹம்மது சமல்கான் என்பவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். பின்னால் அமர்ந்திருந்த நபர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம் முன்னால் வந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து சம்பவங்களால் மோட்டார் சைக்கிள்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மரணமானவரின் சடலம் காத்தான்குடி ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

டொக்டரின் மனைவியுடன் 27 வருட இணைபிரியா கள்ளக் காதல் கொலையில் முடிந்தது ஏன்? கொலையாளி பகீர் வாக்குமூலம்

sumi

கொடூரமாக கொலை செய்யப்பட்ட சாரதி! விசாரணையில் வெளியான காரணம்

User1

காதலர் தினத்தில் சிறுவர்கள் தொடர்பில் சற்றும் வெளியான எச்சரிக்கை தகவல்..!

sumi

Leave a Comment