28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் மீ்ட்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம்

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மது போதையில் இருந்த நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.

மருதநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஜெயராம் டினேஸ் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில் நீதவான் விசாரணைகள் மற்றும் குற்றதடுப்பு பொலிசாரின் விசாரணையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

பசறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது !

User1

கெஹலியவுக்கு விளக்கமறியல்.!

sumi

ஜனாதிபதித் தேர்தலே முதலில்.!

sumi

Leave a Comment