• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 11, 2026
Social icon element need JNews Essential plugin to be activated.
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

selvan by selvan
July 10, 2026
in இலங்கை செய்திகள்
0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை விமர்சித்ததுடன், 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,

“கிராமப்புறங்களில் மக்கள் பெரும் ஆதரவைத் தந்து வருகின்றனர். வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவருமே எமது மக்கள் தான். தற்போதைய அரசு பெரும் வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்தாலும், எதனையும் நிறைவேற்றவில்லை.

வேலைவாய்ப்பின்மை, வரியதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அல்லல்படுகின்றனர். வெறுப்பு அரசியலை விடுத்து, அபிவிருத்தி மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தலைமுறை அரசியலை உருவாக்க நாங்கள் தயாராகவுள்ளோம்.” – என்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன கருத்துத் தெரிவிக்கையில்,

“அரசு ஆட்சிக்கு வந்து மூன்றில் ஒரு பங்கு காலம் கடந்தும், கோட்டே தொகுதியில் எந்தவொரு உருப்படியான அபிவிருத்தியும் நடக்கவில்லை. சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின் மரணத்துக்கு  இந்த அரசே பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பான அமைச்சர் தனது கடமையை முறையாகச் செய்யவில்லை. 2029 இல் நாட்டின் எதிர்காலத்தை நாமல் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்க நாம் இன்று முதலே தயாராக வேண்டும்.” – என்றார்.

இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தனது உரையில்,

“மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றப்பட்ட கோட்டே, இன்று முறையற்ற நிர்வாகத்தாலும், டெங்கு அபாயத்தாலும் சீரழிந்து போயுள்ளது.

மக்கள் வரி செலுத்துவது சுகாதாரமான சூழலைப் பெறுவதற்காகவே தவிர, அபராதம் கட்டுவதற்காக அல்ல. அரசாங்கமும் உள்ளூராட்சி மன்றங்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்” என்று கவலை வெளியிட்டார்.

இறுதியாக உரையாற்றிய யூ.கே. சுமித் உடுகும்பர,

“நாட்டின் ஒவ்வொரு துறை சார்ந்து நாடாளுமன்றத்தில் தெளிவான புரிதலுடன் பேசும் நாமல் ராஜபக்ஷவே நாட்டின் எதிர்காலத் தலைவர் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

2029 இல் அவர் ஜனாதிபதியாவது உறுதி. கோட்டே தொகுதியில் மிலிந்த ராஜபக்ஷவின் வலுவான தலைமைத்துவத்துடன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நாம் ஒன்றிணைந்துள்ளோம்” என்று நம்பிக்கை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் சானக சம்பத் மதுகொட உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

[yourchannel user="Thinakaran"]
Previous Post

சிறைச்சாலை மோதலுக்குப் பொறுப்பேற்ற நீதி அமைச்சருக்கு ரஞ்சன் ராமநாயக்க பாராட்டு

Next Post

நீதி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டும் பணியைத் தொடங்கியது எதிர்க்கட்சி

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி