• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 4, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இனவாதிகள், மோசடியாளர்கள் எதிரணியுடன் இணைவார்கள் என்பதை தயாசிறி எம்.பி ஏற்றுக்கொண்டுள்ளார்!

selvan by selvan
July 4, 2026
in இலங்கை செய்திகள்.
0
இனவாதிகள், மோசடியாளர்கள் எதிரணியுடன் இணைவார்கள் என்பதை தயாசிறி எம்.பி ஏற்றுக்கொண்டுள்ளார்!
Share on FacebookShare on Twitter

“தேர்தல் காலத்தில் இனவாதிகள், படுகொலையாளர்கள் மற்றும் அரச நிதி மோசடியாளர்கள் அனைவரும் தங்களது அணியுடன் ஒன்றிணைவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளமையானது எதிர்க்கட்சியின் உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், இதுவே அவர்களின் கீழ்த்தரமான அரசியல் கலாசாரமாகும்.” – என்று தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு பிரதி அமைச்சர் மேலும் கூறியதாவது:-

“வெளியகக் காரணிகளினால் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன என்பதையும், மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளன என்பதையும் எமது அரசு ஒருபோதும் மறுக்கவில்லை. எனினும், மக்களின் வாழ்க்கைச் செலவுகளைக் குறைத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான முறையான பல நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் படிப்படியாகக் குறையும்.

ராஜபக்ஷக்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதால், பொருளாதார மீட்சிக்கு வேறு வழியின்றி இறுதித் தீர்வாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டது. நிலையான பொருளாதார மீட்சியை அடைவதற்காகச் சில கடுமையான தீர்மானங்களை நாம் செயற்படுத்த வேண்டியுள்ளது.

பொருளாதார ரீதியில் இலங்கை தற்போது சிறந்த முன்னேற்றமடைந்துள்ளது என்பதை சர்வதேச நாணய நிதியமே உறுதிப்படுத்தியுள்ளது. ராஜபக்ஷக்களின் வங்குரோத்தான பொருளாதாரக் கொள்கையினால் 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை ‘குறைந்த – நடுத்தர வருமானம்’ பெறும் நாடாக வீழ்ச்சியடைந்திருந்தது. ஆனால், தற்போதைய எமது நிதி ஸ்திரத்தன்மையின் காரணமாக, இலங்கை மீண்டும் ‘உயர் – நடுத்தர வருமானம்’ பெறும் நாடாக உலக வங்கியினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டைப் படுகுழியில் தள்ளிய ராஜபக்ஷக்கள் இன்று பொருளாதார மீட்சியைப் பற்றிப் பேசுவது வேடிக்கையானது. நாட்டு மக்கள் உண்மையை நன்கு அறிவார்கள்.

அரச நிதியை மோசடி செய்தவர்கள் மற்றும் படுகொலைகளுடன் தொடர்புடையவர்களைச் சட்டம் தன் கடமையைச் செய்து கைது செய்யும்போது, எதிர்க்கட்சியினர் கடும் கலக்கமடைகின்றார்கள். அதன் காரணமாகவே அவர்கள் புதிய கூட்டணிகளை அமைக்க ஓடுகின்றார்கள்.

இனவாதிகள், படுகொலையாளர்கள் என அனைவரும் தம்முடன் இணைவார்கள் எனத் தயாசிறி ஜயசேகரவே ஒப்புக்கொண்டுள்ளார். இத்தகைய ஊழல்வாதிகளின் சுயநல அரசியல் கூட்டணியை நாட்டின் விவேகமான பொதுமக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.” – என்றார்.

Related Posts

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 47 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 47 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

by selvan
July 4, 2026
0

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 47 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,டெங்கு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது என மன்னார் மாவட்ட பிராந்திய...

திடீரென பற்றியெரிந்த மானிப்பாய் பிரதேச சபையின் குப்பை மேட்டால் பதற்றம்!

திடீரென பற்றியெரிந்த மானிப்பாய் பிரதேச சபையின் குப்பை மேட்டால் பதற்றம்!

by selvan
July 4, 2026
0

மானிப்பாய் பிரதேச சபையின் குப்பை மேடானது நேற்றிரவு திடீரென பற்றியெரிந்ததால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,மானிப்பாய் பிரதேச சபையின் கழிவு சேகரிப்பு மற்றும்...

நெடுந்தீவின் குடிநீருக்கு அநுர அரசிடம் ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

நெடுந்தீவின் குடிநீருக்கு அநுர அரசிடம் ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

by selvan
July 4, 2026
0

நெடுந்தீவில் வாழுகின்ற மக்கள் குடிநீரரைப் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அங்கு முன்னெடுக்கப்படும் கடல்நீரை நன்னீராக்கும் செயற்பாகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினை முழுமையாக...

கிழக்கு மாகாணத்தில் “eAyurvedic” செயலி அறிமுகம்!

கிழக்கு மாகாணத்தில் “eAyurvedic” செயலி அறிமுகம்!

by selvan
July 4, 2026
0

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு அமைவாக, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை "eAyurvedic" எனும் செயலி மூலமாக டிஜிட்டல் மயப்படுத்தி...

அம்பாறையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு!

அம்பாறையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு!

by selvan
July 4, 2026
0

அம்பாறையில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பழைய வளத்தாப்பிட்டி மற்றும் இஸ்மாயில்புரம் ஆகிய இடங்களை இணைக்கும் பிரதான வீதிக்கு...

தமிழ்த் தேசியப் பேரவை சென்னையில் திருமாவளவனுடன் சந்திப்பு!

தமிழ்த் தேசியப் பேரவை சென்னையில் திருமாவளவனுடன் சந்திப்பு!

by selvan
July 4, 2026
0

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட விசேட தூதுக்குழுவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்...

சிறைச்சாலைகளைக் காட்டி நாமலின்அரசியல் பயணத்தை ஒடுக்க முடியாது!

சிறைச்சாலைகளைக் காட்டி நாமலின் அரசியல் பயணத்தை ஒடுக்க முடியாது!

by selvan
July 4, 2026
0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ என்பவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர். எனவே சிறைச்சாலைகளைக் காண்பித்து அவரது அரசியல் பயணத்தை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது என...

12 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் அனுராதபுரத்தில் நபர் ஒருவர் கைது!

12 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் அனுராதபுரத்தில் நபர் ஒருவர் கைது!

by selvan
July 4, 2026
0

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையின் கீழ், அனுராதபுரம் மற்றும் ஹொரண ஆகிய பகுதிகளில் பொலிஸாரால் நடத்தப்பட்ட இரு வேறு முற்றுகைகளின் போது,...

அமைச்சர்களைப் பாதுகாப்பின்றி விவசாயிகளிடம்அனுப்பினால் உண்மை நிலை தெரியவரும் – சீலரத்ன தேரர் சவால்!

அமைச்சர்களைப் பாதுகாப்பின்றி விவசாயிகளிடம் அனுப்பினால் உண்மை நிலை தெரியவரும் – சீலரத்ன தேரர் சவால்!

by selvan
July 4, 2026
0

தேர்தலுக்கு முன்னர் மக்களே தங்களது பாதுகாப்பு என்றும், தமக்கு பாதுகாப்புப் படையினர் தேவையில்லை என்றும் கூறிய தற்போதைய அரசின் அமைச்சர்களை, எவ்வித பாதுகாப்பும் இன்றி விவசாய மக்களிடம்...

சிலாபத்தில் கடலில் மூழ்கி மீனவர் பலி!

சிலாபத்தில் கடலில் மூழ்கி மீனவர் பலி!

by selvan
July 4, 2026
0

சிலாபம் கடற்பரப்பில் மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 41 வயதுடைய மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிலாபம், ரிதீவெல்ல பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார் என்றும்,...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி