• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 4, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அமைச்சர்களைப் பாதுகாப்பின்றி விவசாயிகளிடம் அனுப்பினால் உண்மை நிலை தெரியவரும் – சீலரத்ன தேரர் சவால்!

selvan by selvan
July 4, 2026
in இலங்கை செய்திகள்.
0
அமைச்சர்களைப் பாதுகாப்பின்றி விவசாயிகளிடம்அனுப்பினால் உண்மை நிலை தெரியவரும் – சீலரத்ன தேரர் சவால்!
Share on FacebookShare on Twitter


தேர்தலுக்கு முன்னர் மக்களே தங்களது பாதுகாப்பு என்றும், தமக்கு பாதுகாப்புப் படையினர் தேவையில்லை என்றும் கூறிய தற்போதைய அரசின் அமைச்சர்களை, எவ்வித பாதுகாப்பும் இன்றி விவசாய மக்களிடம் அனுப்பினால் அவர்கள் மீதான மக்களின் உண்மையான மனநிலையையும், விவசாயிகளின் அதிருப்தியையும் நேரடியாக அறிந்துகொள்ள முடியும் என்று ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார்.

ஜனசேத பெரமுன கட்சியின் தலைமைப் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:-

“தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் தேர்தலுக்கு முன்னர் விவசாயிகளின் பிரச்சினைகளை முன்னிறுத்தி வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாய மக்களின் துயரங்களைத் தங்களுடைய துயரங்களாகக் காட்டி அரசியல் செய்த அவர்கள், இன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் அதே விவசாய மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று நாட்டின் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். ஒரு கிலோ நெல்லை விற்றுப் பெற்ற பணத்தில் ஒரு சவர்க்காரத் துண்டைக் கூட வாங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. சந்தையில் ஒரு சவர்க்காரத் துண்டின் விலை சுமார் 200 ரூபாவாக உள்ளது. ஆனால், விவசாயிகளின் உற்பத்திகளுக்கு அதற்கு நிகரான நியாயமான விலை கிடைப்பதில்லை. இத்தகைய நிலையில் விவசாயக் குடும்பங்கள் எவ்வாறு தங்களது அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்க முடியும்?

ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு 650 கிராம் அரிசி போதுமானது என்ற வகையில் அரச தரப்பால் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. மூன்று அல்லது நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பம் 650 கிராம் அரிசியை மட்டும் கொண்டு எவ்வாறு உயிர் வாழ முடியும்? இந்தக் கருத்துக்கள் நடைமுறைச் சாத்தியமற்றவை என்பதுடன் முற்றிலும் முரணானவை ஆகும். இத்தகைய கருத்துக்களைக் கூறும் அமைச்சர்கள், தங்களது வீடுகளில் அந்த அளவு அரிசியைக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியுமா என்பதை முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அமைச்சர்களான வசந்த சமரசிங்க, கே.டி. லால் காந்த மற்றும் நாமல் கருணாரத்ன உள்ளிட்டோர் விவசாய மக்களின் கடுமையான எதிர்ப்பை தற்போது நாடு முழுவதும் எதிர்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியை முறையாகப் பொதியிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்துத் திறன்களும் நமக்குள்ளன. இருப்பினும் அதற்கான முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. மாறாக, வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கே தற்போதைய அரசு முன்னுரிமை வழங்கி வருகின்றது. இதன் பின்னணியில் இலாப நோக்குடைய அரசியல் சூழ்ச்சி இருப்பதாக மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் நிலவுகின்றது.

தேர்தலுக்கு முன்னர் தங்களுக்கு எந்தவித பாதுகாப்பும் தேவையில்லை, பொதுமக்களே தங்களது பாதுகாப்பு என்று மேடைகளில் முழங்கிய அமைச்சர்கள், இன்று பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களுக்குள் சொகுசாகச் செயற்படுகின்றனர். ஜனாதிபதி இந்த அமைச்சர்களைப் பாதுகாப்பின்றி நேரடியாக விவசாய மக்களிடம் அனுப்பிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் மக்களின் உண்மையான அதிருப்தியின் அளவை அவர்கள் தெளிவாக உணர்ந்துகொள்வார்கள்.” – என்றார்.

Related Posts

திடீரென பற்றியெரிந்த மானிப்பாய் பிரதேச சபையின் குப்பை மேட்டால் பதற்றம்!

திடீரென பற்றியெரிந்த மானிப்பாய் பிரதேச சபையின் குப்பை மேட்டால் பதற்றம்!

by selvan
July 4, 2026
0

மானிப்பாய் பிரதேச சபையின் குப்பை மேடானது நேற்றிரவு திடீரென பற்றியெரிந்ததால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,மானிப்பாய் பிரதேச சபையின் கழிவு சேகரிப்பு மற்றும்...

நெடுந்தீவின் குடிநீருக்கு அநுர அரசிடம் ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

by selvan
July 4, 2026
0

நெடுந்தீவில் வாழுகின்ற மக்கள் குடிநீரரைப் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அங்கு முன்னெடுக்கப்படும் கடல்நீரை நன்னீராக்கும் செயற்பாகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினை முழுமையாக...

நெடுந்தீவின் குடிநீருக்கு அநுர அரசிடம் ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

by selvan
July 4, 2026
0

நெடுந்தீவில் வாழுகின்ற மக்கள் குடிநீரரைப் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அங்கு முன்னெடுக்கப்படும் கடல்நீரை நன்னீராக்கும் செயற்பாகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினை முழுமையாக...

கிழக்கு மாகாணத்தில் “eAyurvedic” செயலி அறிமுகம்!

கிழக்கு மாகாணத்தில் “eAyurvedic” செயலி அறிமுகம்!

by selvan
July 4, 2026
0

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு அமைவாக, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை "eAyurvedic" எனும் செயலி மூலமாக டிஜிட்டல் மயப்படுத்தி...

அம்பாறையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு!

அம்பாறையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு!

by selvan
July 4, 2026
0

அம்பாறையில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பழைய வளத்தாப்பிட்டி மற்றும் இஸ்மாயில்புரம் ஆகிய இடங்களை இணைக்கும் பிரதான வீதிக்கு...

தமிழ்த் தேசியப் பேரவை சென்னையில் திருமாவளவனுடன் சந்திப்பு!

தமிழ்த் தேசியப் பேரவை சென்னையில் திருமாவளவனுடன் சந்திப்பு!

by selvan
July 4, 2026
0

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட விசேட தூதுக்குழுவினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்...

சிறைச்சாலைகளைக் காட்டி நாமலின்அரசியல் பயணத்தை ஒடுக்க முடியாது!

சிறைச்சாலைகளைக் காட்டி நாமலின் அரசியல் பயணத்தை ஒடுக்க முடியாது!

by selvan
July 4, 2026
0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ என்பவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர். எனவே சிறைச்சாலைகளைக் காண்பித்து அவரது அரசியல் பயணத்தை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது என...

12 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் அனுராதபுரத்தில் நபர் ஒருவர் கைது!

12 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் அனுராதபுரத்தில் நபர் ஒருவர் கைது!

by selvan
July 4, 2026
0

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையின் கீழ், அனுராதபுரம் மற்றும் ஹொரண ஆகிய பகுதிகளில் பொலிஸாரால் நடத்தப்பட்ட இரு வேறு முற்றுகைகளின் போது,...

சிலாபத்தில் கடலில் மூழ்கி மீனவர் பலி!

சிலாபத்தில் கடலில் மூழ்கி மீனவர் பலி!

by selvan
July 4, 2026
0

சிலாபம் கடற்பரப்பில் மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 41 வயதுடைய மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிலாபம், ரிதீவெல்ல பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார் என்றும்,...

கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்கள் கராத்தேயில் தேசிய ரீதியிலான போட்டிக்குத் தகுதி!

கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்கள் கராத்தேயில் தேசிய ரீதியிலான போட்டிக்குத் தகுதி!

by selvan
July 4, 2026
0

கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்கள் மாகாண மட்ட கராத்தே போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.திருகோணமலை Mc Heyzer உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி