உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வெகு விமர்சையாக நடைபெற்ற நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
26 பார்வைகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மிக விமர்சையாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.

“அலைகடல் தாண்டி இலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிட, ராஜநாகராணியாகப் பேரெழில் கொண்டு ராஜ ரதமேறி வந்தாள் எங்கள் நாகம்மாள்” என்று போற்றும் வகையில், உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடல் கடந்து நயினைப் பதியில் ஒன்றுதிரண்டிருந்தனர்.

சுப வேளையில், விசேட பூசைகள் மற்றும் அபிஷேகங்களைத் தொடர்ந்து, வசந்த மண்டபத்திலிருந்து அருள்மிகு நாகபூஷணி அம்மன் உள்வீதி வழியாக எழுந்தருளி, அலங்கரிக்கப்பட்ட கம்பீரமான ராஜ ரதத்தில் வீற்றிருந்தார். அரோகரா கோஷங்கள் விண்ணதிர, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கரகோஷங்கள் மற்றும் பக்திப் பரவசத்துக்கு மத்தியில் அம்மன் தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அம்மனின் இந்தத் தேரோட்ட நிகழ்வைக் காண்பதற்காக அதிகாலை முதலே நயினாதீவு நோக்கிப் படகுகள் மூலம் பக்தர்கள் தொடர்ச்சியாக வருகை தந்த வண்ணம் இருந்தனர். பக்தர்களுக்கான போக்குவரத்து, விசேட குடிதண்ணீர் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் ஆலய நிர்வாகத்தினராலும் சிவில் அதிகாரிகளாலும் மிகச் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

59 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

81 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

76 0 0