• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 23, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையில் வெடி விபத்து – 18 பேர் மாயம்!

selvan by selvan
June 23, 2026
in உலக செய்திகள்
0
உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையில் வெடி விபத்து – 18 பேர் மாயம்!
Share on FacebookShare on Twitter

கட்டாரின் பிரதான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 54 பேர் காயமடைந்துள்ளதுடன், மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்டாரின் ‘ராஸ் லஃபான்’ தொழிற்துறை நகரில் உள்ள ‘பர்சான்’ தொழிற்சாலையிலேயே இந்த “உள்வெடிப்பு” திங்கட்கிழமை நிகழ்ந்துள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளுக்காகக் கட்டாரின் சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கத்தார் உள்நாட்டு விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்திற்கு “தொழில்நுட்பக் கோளாறு” ஒன்றே காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கட்டார் உள்நாட்டு விவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களின் தற்போதைய மருத்துவ நிலைமைகள் குறித்த விபரங்களை அமைச்சு இன்னும் வெளியிடவில்லை.

எனினும், இந்த வெடிப்பு காரணமாக ஆலைக்கு வெளியே பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான நச்சு வாயு அல்லது எரிவாயுக் கசிவுகள் எதுவும் ஏற்படவில்லை என அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

தொழிற்துறை மையத்தை நிர்வகிக்கும் ‘கத்தார் எனர்ஜி’ நிறுவனம், வெடிப்புச் சம்பவத்தை அடுத்து அவசரகால மீட்புக் குழுவினர் உடனடியாகச் செயற்பட்டு, ஆலையில் பரவிய தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தலைநகர் தோஹாவிற்கு வடக்கே சுமார் 80 கிலோமீட்டர் (50 மைல்) தொலைவில் அமைந்துள்ள இந்த ராஸ் லஃபான் தொழிற்துறை நகர், உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி ஏற்றுமதி மையமாகும். இது உலகளாவிய இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியை உற்பத்தி செய்கிறது.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதத்தில், இந்த தொழிற்துறை மையம் ஈரான் நாட்டின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு இலக்காகி “பாரிய சேதங்களை” சந்தித்திருந்ததாகக் கட்டார் அரசாங்கம் அறிவித்திருந்தது.

அத்தாக்குதல்களின் தொடர்ச்சியாக, தனது விநியோகக் கடமைகளிலிருந்து தற்காலிகமாக விலகிக்கொள்வதற்காகக் கத்தார் எனர்ஜி நிறுவனம் சில ஒப்பந்தங்களில் ‘ஃபோர்ஸ் மஜூர்’ (Force Majeure – தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கான விதிவிலக்கு) பிரிவைப் பயன்படுத்தியிருந்தது.

இதனால் இத்தாலி, பெல்ஜியம், தென்கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய வெடிப்புச் சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

Related Posts

கட்டார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஐ கடந்தது!

கட்டார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஐ கடந்தது!

by selvan
June 23, 2026
0

கட்டாரின் மிகப்பெரிய எரிவாயு ஆலை வளாகத்தில் ஏற்பட்ட வெடி சம்பவத்தில் சிக்குண்டு குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 66 பேர் காயமடைந்துள்ளனர்.ராஸ் லஃப்பான் தொழிற்துறை வளாகத்தில் அமைந்துள்ள,...

பிரித்தானிய பிரதமர் இராஜினாமா.!

பிரித்தானிய பிரதமர் இராஜினாமா.!

by Mathavi
June 22, 2026
0

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பிரதமர் பதவியையும், ஆளும் கட்சியின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆளும் தொழிலாளர் கட்சியில் உட்கட்சிப்...

கட்டாரில் உள்ள மிகப்பெரிய எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் வெடிப்பு சம்பவம்; பலர் காயம்.!

கட்டாரில் உள்ள மிகப்பெரிய எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் வெடிப்பு சம்பவம்; பலர் காயம்.!

by Mathavi
June 22, 2026
0

கட்டாரின் பிரதான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று (22) ஏற்பட்ட பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 54 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், மேலும் 18 பேரை தேடும்...

பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 3 மாணவர்கள் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 3 மாணவர்கள் உயிரிழப்பு!

by Mathavi
June 22, 2026
0

பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். பாடசாலை வழமைபோல் இயங்கி வந்த...

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை!

by selvan
June 21, 2026
0

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும் முதன்மை பேச்சுவார்த்தையாளருமான மொஹமட் பாகர் கலிபாப் பதிலளித்துள்ளார்.தேவைப்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்க ஈரானும் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து...

வீட்டுக்குள் பாய்ந்த டெஸ்லா நிறுவனத்தின் ஓட்டோ பைலட் சிற்றூந்து – வயோதிபப் பெண் பலி!

வீட்டுக்குள் பாய்ந்த டெஸ்லா நிறுவனத்தின் ஓட்டோ பைலட் சிற்றூந்து – வயோதிபப் பெண் பலி!

by selvan
June 21, 2026
0

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் அதிவேகமாக வந்த டெஸ்லா நிறுவனத்தின் ஓட்டோ பைலட் சிற்றூந்து ஒன்று, அங்குள்ள வீடு ஒன்றின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்தக் கோர விபத்து...

சுவிட்சர்லாந்தை சென்றடைந்தார் அமெரிக்க துணை ஜனாதிபதி!

சுவிட்சர்லாந்தை சென்றடைந்தார் அமெரிக்க துணை ஜனாதிபதி!

by selvan
June 21, 2026
0

ஈரானுடன் நிலுவையிலுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் ஏதுவான முதற்கட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த...

ஐரோப்பாவை தாக்கும் வெப்ப அலை!

ஐரோப்பாவை தாக்கும் வெப்ப அலை!

by selvan
June 21, 2026
0

ஐரோப்பாவில் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால், வரலாற்றின் மோசமான அளவை நோக்கி வெப்பநிலை அதிகரித்து வருகின்றது. இதனால் பிரான்சில் அவசரநிலை ஆலோசனைக் கூட்டங்கள்...

ஹோர்முஸ் நீரிணையில் அடுத்த 60 நாட்களுக்கு எந்தவிதமான கட்டணங்களும் வசூலிக்கப்படாது –  ட்ரம்ப் அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணையில் அடுத்த 60 நாட்களுக்கு எந்தவிதமான கட்டணங்களும் வசூலிக்கப்படாது –  ட்ரம்ப் அறிவிப்பு!

by selvan
June 21, 2026
0

லெபனான் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்தக் காலப்பகுதியில், சர்வதேச எரிபொருள் போக்குவரத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையில் அடுத்த 60 நாட்களுக்கு எந்தவிதமான கட்டணங்களும் வசூலிக்கப்பட மாட்டாது என...

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை – அமெரிக்கா அறிவிப்பு!

by selvan
June 21, 2026
0

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை என அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் ஊடக பேச்சாளர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.உலகளாவிய கடல்சார் வணிகப் போக்குவரத்திற்கு மிக முக்கியப்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி