• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 18, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்.!

Mathavi by Mathavi
June 18, 2026
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள், முக்கிய செய்திகள்
0
மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்.!
Share on FacebookShare on Twitter

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை சுதந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தியும் குற்றவாளிகளுக்கு சட்டத்தினால் சரியான தீர்ப்புகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தக்கோரியும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை கண்டித்தும் இன்று மட்டக்களப்பில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் இணைப்பாளர் புஹாரி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள், தாக்குதலின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,மதத்தலைவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் வகையிலும் மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அரசாங்கத்தின் விசாரணைகள் எந்தவித அரசியல் தலையீடுகளும் இன்றி, சுதந்திரமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

விசாரணைகளை திசைதிருப்பும் முயற்சிகளுக்கு இதன்போது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் பல்வேறு கோரிக்கைகளும் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டன.

இந்த பயங்கரவாதச் செயலுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். அத்துடன் நீதிமன்றத்தின் ஊடாக இந்த விசாரணை நடைமுறைகள் துரிதப்படுத்தப்பட்டு, தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட வேண்டும்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சிகளாகக் கருதப்படும் சுரேஷ் சாலி மற்றும் பிள்ளையான் போன்றவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்கள் மூலமாக உண்மைகளும் ஆதாரங்களும் சட்டப்பூர்வமாகத் திரட்டப்பட வேண்டும்.
இந்தத் தாக்குதலினால் உடல் மற்றும் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்குத் தேவையான வாழ்வாதார, பொருளாதார மற்றும் சமூக ரீதியான உதவிகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் எந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டு, தற்போது விடுதலையாகியுள்ள அப்பாவி முஸ்லிம் மக்கள் மீதான புலனாய்வுப் பிரிவினரின் தொடர் கண்காணிப்புகள், விசாரணைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

குற்றம் செய்தவர்கள் எந்தவொரு இனத்தைச் சேர்ந்தவர்களாக அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்பட்டு தண்டிப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

Related Posts

யாழ். பல்கலைக்கழக விவசாயபீடத்தின் உலர்வலய விவசாயம் பற்றிய ஆராய்ச்சி மாநாடு தொடர்பான தெளிவூட்டல்.!

யாழ். பல்கலைக்கழக விவசாயபீடத்தின் உலர்வலய விவசாயம் பற்றிய ஆராய்ச்சி மாநாடு தொடர்பான தெளிவூட்டல்.!

by Mathavi
June 18, 2026
0

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாயபீடத்தின் பன்னிரெண்டாவது உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு விவசாயபீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் தலைமையில்...

சுகீஸ்வர பண்டார கைது.!

சுகீஸ்வர பண்டார கைது.!

by Mathavi
June 18, 2026
0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அரச நிறுவனங்கள் இரண்டில் ஒரே நேரத்தில்...

ஹட்டன் அரச பேருந்து டிப்போ நவீனமயமாக்கல்.!

ஹட்டன் அரச பேருந்து டிப்போ நவீனமயமாக்கல்.!

by Mathavi
June 18, 2026
0

667 மில்லியன் ரூபா செலவில் காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ள ஹட்டன் பேருந்து டிப்போவை நேற்று (17) ஆம் திகதி மாலை நேரில் பார்வையிட்ட நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்...

காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்; பொலிஸார் தீவிர விசாரணை.!

காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்; பொலிஸார் தீவிர விசாரணை.!

by Mathavi
June 18, 2026
0

நுவரெலியா நகரில் உள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரிலிருந்து சடலமாக நேற்று புதன்கிழமை (17) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...

அரச காணிகளை பயன்படுத்த புதிய கொள்கை வருகின்றது.!

அரச காணிகளை பயன்படுத்த புதிய கொள்கை வருகின்றது.!

by Mathavi
June 18, 2026
0

அரச காணிக் கட்டளைச் சட்டம் மற்றும் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் என்பவற்றுக்கு அமைவாக இரத்து செய்ய வேண்டிய சுற்றறிக்கைகளை இரத்துச் செய்து புதிய சுற்றறிக்கைகளை வெளியிடவும்...

விபத்தில் சிக்கி ஆசிரியை உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி ஆசிரியை உயிரிழப்பு.!

by Mathavi
June 18, 2026
0

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் இன்று (18) காலை பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி, பூனாவை பொலிஸார்...

தங்கம் கடத்த முயன்ற பயணிகள் மருத்துவ பரிசோதனையில் சிக்கினர்.!

தங்கம் கடத்த முயன்ற பயணிகள் மருத்துவ பரிசோதனையில் சிக்கினர்.!

by Mathavi
June 18, 2026
0

காங்கேசன்துறை ஊடாக நாகைப்பட்டினம் செல்லத் தயாரான சமயம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட 26 பயணிகளில் 17 பேருக்கு நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட ஸ்கானிங் பரிசோதனையில் நால்வர் உடம்புக்குள்...

தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட இனப் படுகொ*லையின் அசைக்க முடியாத சாட்சி செம்மணி.!

தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட இனப் படுகொ*லையின் அசைக்க முடியாத சாட்சி செம்மணி.!

by Mathavi
June 18, 2026
0

இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சியாகவும், இந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பெரும் அவமானத்தின் அடையாளமாகவும் செம்மணி மனிதப் புதைகுழி உருவெடுத்துள்ளது...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

வீடுகளில் கைவரிசை காட்டிய நபர் கைது.!

by Mathavi
June 18, 2026
0

மொரட்டுமுல்ல மற்றும் பிலியந்தலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளினுள் நுழைந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ...

பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலம் மீட்பு.!

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
June 18, 2026
0

கொழும்பு, கிராண்ட்பாஸ் சேதவத்தை களனி பாலத்துக்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (17) புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி