• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 18, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அரச காணிகளை பயன்படுத்த புதிய கொள்கை வருகின்றது.!

Mathavi by Mathavi
June 18, 2026
in இலங்கை செய்திகள்.
0
அரச காணிகளை பயன்படுத்த புதிய கொள்கை வருகின்றது.!
Share on FacebookShare on Twitter

அரச காணிக் கட்டளைச் சட்டம் மற்றும் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் என்பவற்றுக்கு அமைவாக இரத்து செய்ய வேண்டிய சுற்றறிக்கைகளை இரத்துச் செய்து புதிய சுற்றறிக்கைகளை வெளியிடவும் திருத்தத்திற்கு உட்படுத்த வேண்டிய சுற்றறிக்கைகளை தற்காலத்திற்கு உகந்தவகையில் திருத்துவதற்காக அமைச்சரவைக்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ‘சுற்றறிக்கைகள் திருத்தக் குழுவிற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

விவசாய, கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்கவின் தலைமையிலான இந்தக் குழுவில் ஜனாதிபதி அலுவலகத்தின் அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ விவகாரங்கள் பிரிவின் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்ட ஆலோசகர், சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் (காணி), தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம், மேல் மாகாண காணி ஆணையாளர், கிழக்கு நுவரகம்பலாத பிரதேச செயலாளர், மதிப்பீட்டு திணைக்களத்தின் பிரதி பிரதம மதிப்பீட்டாளர், மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் (காணி) ஆகியோர் ஏனைய அங்கத்தவர்களாகச் செயற்படுவர்.

இக்குழுவின் அழைப்பாளராக காணி ஆணையாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய சட்ட விதிகளுக்குள், அரச வருமானம் சாதகமான முறையில் அதிகரிக்கும் வகையில், குத்தகைதாரர்கள் பாதிக்கப்படாதவாறு வரி வசூலிப்பில் நம்பகமான, சீரான மற்றும் நிலையான முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்காக நீண்ட கால குத்தகைகளை வழங்கும்போதும், இலவச காணி கொடுப்பனவுப் பத்திரங்களை வழங்கும்போதும் வசூலிக்கப்படும் வருடாந்த வரிப் பணத்தை மீளாய்வு செய்தல், நீண்ட கால குத்தகைகளுடன் தொடர்புடைய ஏனைய சுற்றறிக்கைகளில் தற்காலத்திற்குப் பொருத்தமான மாற்றங்களைச் செய்தல், அச்சுற்றறிக்கைகளை தேவைகளுக்கும் சட்ட விதிகளுக்கும் இணங்குமாறு திருத்துதல், சுற்றறிக்கைகள் தொடர்பான கட்டளைகளை திருத்துவதற்கும் புதிய கட்டளைகளை தயாரிப்பதற்கும் பரிந்துரைகளை வழங்குதல் என்பன இந்தக் குழுவின் பணியாகும்.

இதற்கமைய, சுற்றறிக்கைத் திருத்தம் தொடர்பாக நிபுணர் குழுவினால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறைந்த பயன்பாட்டிலுள்ள அரச காணிகளை தற்காலத்திற்கு உகந்த வகையில் பயன்படுத்துவதற்காக புதிய கொள்கையொன்றை வகுக்க வேண்டும் எனவும் இங்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இந்த சந்திப்பில், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, விவசாய, கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ரவீந்திர பத்திரணகே, காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீரஆரச்சி உள்ளிட்ட குழுவின் ஏனைய உறுப்பினர்களும், நிதி அமைச்சு மற்றும் விவசாய, கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related Posts

யாழ். பல்கலைக்கழக விவசாயபீடத்தின் உலர்வலய விவசாயம் பற்றிய ஆராய்ச்சி மாநாடு தொடர்பான தெளிவூட்டல்.!

யாழ். பல்கலைக்கழக விவசாயபீடத்தின் உலர்வலய விவசாயம் பற்றிய ஆராய்ச்சி மாநாடு தொடர்பான தெளிவூட்டல்.!

by Mathavi
June 18, 2026
0

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாயபீடத்தின் பன்னிரெண்டாவது உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு விவசாயபீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் தலைமையில்...

சுகீஸ்வர பண்டார கைது.!

சுகீஸ்வர பண்டார கைது.!

by Mathavi
June 18, 2026
0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அரச நிறுவனங்கள் இரண்டில் ஒரே நேரத்தில்...

ஹட்டன் அரச பேருந்து டிப்போ நவீனமயமாக்கல்.!

ஹட்டன் அரச பேருந்து டிப்போ நவீனமயமாக்கல்.!

by Mathavi
June 18, 2026
0

667 மில்லியன் ரூபா செலவில் காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ள ஹட்டன் பேருந்து டிப்போவை நேற்று (17) ஆம் திகதி மாலை நேரில் பார்வையிட்ட நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்...

மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்.!

மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்.!

by Mathavi
June 18, 2026
0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை சுதந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தியும் குற்றவாளிகளுக்கு சட்டத்தினால் சரியான தீர்ப்புகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தக்கோரியும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்ப...

காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்; பொலிஸார் தீவிர விசாரணை.!

காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்; பொலிஸார் தீவிர விசாரணை.!

by Mathavi
June 18, 2026
0

நுவரெலியா நகரில் உள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரிலிருந்து சடலமாக நேற்று புதன்கிழமை (17) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...

விபத்தில் சிக்கி ஆசிரியை உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி ஆசிரியை உயிரிழப்பு.!

by Mathavi
June 18, 2026
0

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் இன்று (18) காலை பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி, பூனாவை பொலிஸார்...

தங்கம் கடத்த முயன்ற பயணிகள் மருத்துவ பரிசோதனையில் சிக்கினர்.!

தங்கம் கடத்த முயன்ற பயணிகள் மருத்துவ பரிசோதனையில் சிக்கினர்.!

by Mathavi
June 18, 2026
0

காங்கேசன்துறை ஊடாக நாகைப்பட்டினம் செல்லத் தயாரான சமயம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட 26 பயணிகளில் 17 பேருக்கு நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட ஸ்கானிங் பரிசோதனையில் நால்வர் உடம்புக்குள்...

தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட இனப் படுகொ*லையின் அசைக்க முடியாத சாட்சி செம்மணி.!

தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட இனப் படுகொ*லையின் அசைக்க முடியாத சாட்சி செம்மணி.!

by Mathavi
June 18, 2026
0

இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சியாகவும், இந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பெரும் அவமானத்தின் அடையாளமாகவும் செம்மணி மனிதப் புதைகுழி உருவெடுத்துள்ளது...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

வீடுகளில் கைவரிசை காட்டிய நபர் கைது.!

by Mathavi
June 18, 2026
0

மொரட்டுமுல்ல மற்றும் பிலியந்தலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளினுள் நுழைந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ...

பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலம் மீட்பு.!

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
June 18, 2026
0

கொழும்பு, கிராண்ட்பாஸ் சேதவத்தை களனி பாலத்துக்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (17) புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி