• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 18, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

யாழ். பல்கலைக்கழக விவசாயபீடத்தின் உலர்வலய விவசாயம் பற்றிய ஆராய்ச்சி மாநாடு தொடர்பான தெளிவூட்டல்.!

Mathavi by Mathavi
June 18, 2026
in இலங்கை செய்திகள்.
0
யாழ். பல்கலைக்கழக விவசாயபீடத்தின் உலர்வலய விவசாயம் பற்றிய ஆராய்ச்சி மாநாடு தொடர்பான தெளிவூட்டல்.!
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாயபீடத்தின் பன்னிரெண்டாவது உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு விவசாயபீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பேராசிரியர் கந்தையா பகீரதன்,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள விவசாயபீடமானது பிரதேசத்தை மையப்படுத்தி உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு ஒன்றினை 2015ஆம் ஆண்டு தொடக்கம் வருடம் தோறும் நடாத்துகிறது. இம்முறை பன்னிரெண்டாவது உலர்வலய விவசாயத்திற்கான சர்வதேச ஆராய்ச்சி மாநாடு 2026 ஆம் ஆண்டு ஆனி மாதம் 24 ஆம் திகதி கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் அமைந்துள்ள விவசாயபீட மாநாட்டு அரங்கில் வர்த்தக விவசாயத்திற்கான புத்திசாலித்தனமான தீர்வுகள் என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது. “Smart Solutions for Commercial Agriculture” நடைபெறவுள்ளது.

இவ்வாராய்ச்சி மாநாட்டின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய துணைவேந்தர் பேராசிரியர் தி.வேல்நம்பி கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இம்மாநாட்டின் நிறை அமர்வுப் பேச்சாளராக (Plenary Speaker) கனடா மனிட்டோபா பல்கலைக்கழகத்தின் மண் நுண்ணுயிரியல் பேராசிரியர் Ivan Oresnik, கலந்து சிறப்பிப்பதோடு. ஜப்பான் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் வனவியல் பேராசிரியர் Toshiaki Owari திறவுகோல் உரையையும் ஆற்றவுள்ளனர்.

மேலும், இவ்வாராய்ச்சி மாநாட்டில் இலங்கை மற்றும் சர்வதேச ஆய்வாளர்களால் பயிராக்கவியல், விலங்கு விஞ்ஞானம் மற்றும் நீருயிரின வளர்ப்பு, பயிர் பாதுகாப்பு மற்றும் உயிர் தொழில்நுட்பவியல், மண், சூழல் மற்றும் நீர் விஞ்ஞானம், உணவு விஞ்ஞானம் மற்றும் போசணையும், பொருளாதாரம் மற்றும் அறிவூட்டல் ஆகிய உபதொனிப்பொருள்களில் 60க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் முன்னிலைப்படுத்தப்பட்டு, மதிப்பாய்வு செய்யப்படவுள்ளன.

இம்மாநாட்டிற்கு பல்வேறு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் மற்றும் விவசாயத்துறைசார் நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் எவ்வாறான மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உலர்வலய விவசாயத்தில் புகுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளது என தெரிவித்தார்.

Related Posts

சுகீஸ்வர பண்டார கைது.!

சுகீஸ்வர பண்டார கைது.!

by Mathavi
June 18, 2026
0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அரச நிறுவனங்கள் இரண்டில் ஒரே நேரத்தில்...

ஹட்டன் அரச பேருந்து டிப்போ நவீனமயமாக்கல்.!

ஹட்டன் அரச பேருந்து டிப்போ நவீனமயமாக்கல்.!

by Mathavi
June 18, 2026
0

667 மில்லியன் ரூபா செலவில் காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ள ஹட்டன் பேருந்து டிப்போவை நேற்று (17) ஆம் திகதி மாலை நேரில் பார்வையிட்ட நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்...

மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்.!

மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்.!

by Mathavi
June 18, 2026
0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை சுதந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தியும் குற்றவாளிகளுக்கு சட்டத்தினால் சரியான தீர்ப்புகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தக்கோரியும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்ப...

காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்; பொலிஸார் தீவிர விசாரணை.!

காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்; பொலிஸார் தீவிர விசாரணை.!

by Mathavi
June 18, 2026
0

நுவரெலியா நகரில் உள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரிலிருந்து சடலமாக நேற்று புதன்கிழமை (17) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...

அரச காணிகளை பயன்படுத்த புதிய கொள்கை வருகின்றது.!

அரச காணிகளை பயன்படுத்த புதிய கொள்கை வருகின்றது.!

by Mathavi
June 18, 2026
0

அரச காணிக் கட்டளைச் சட்டம் மற்றும் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் என்பவற்றுக்கு அமைவாக இரத்து செய்ய வேண்டிய சுற்றறிக்கைகளை இரத்துச் செய்து புதிய சுற்றறிக்கைகளை வெளியிடவும்...

விபத்தில் சிக்கி ஆசிரியை உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி ஆசிரியை உயிரிழப்பு.!

by Mathavi
June 18, 2026
0

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் இன்று (18) காலை பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி, பூனாவை பொலிஸார்...

தங்கம் கடத்த முயன்ற பயணிகள் மருத்துவ பரிசோதனையில் சிக்கினர்.!

தங்கம் கடத்த முயன்ற பயணிகள் மருத்துவ பரிசோதனையில் சிக்கினர்.!

by Mathavi
June 18, 2026
0

காங்கேசன்துறை ஊடாக நாகைப்பட்டினம் செல்லத் தயாரான சமயம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட 26 பயணிகளில் 17 பேருக்கு நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட ஸ்கானிங் பரிசோதனையில் நால்வர் உடம்புக்குள்...

தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட இனப் படுகொ*லையின் அசைக்க முடியாத சாட்சி செம்மணி.!

தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட இனப் படுகொ*லையின் அசைக்க முடியாத சாட்சி செம்மணி.!

by Mathavi
June 18, 2026
0

இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சியாகவும், இந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பெரும் அவமானத்தின் அடையாளமாகவும் செம்மணி மனிதப் புதைகுழி உருவெடுத்துள்ளது...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

வீடுகளில் கைவரிசை காட்டிய நபர் கைது.!

by Mathavi
June 18, 2026
0

மொரட்டுமுல்ல மற்றும் பிலியந்தலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளினுள் நுழைந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ...

பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலம் மீட்பு.!

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
June 18, 2026
0

கொழும்பு, கிராண்ட்பாஸ் சேதவத்தை களனி பாலத்துக்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (17) புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி