• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 18, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட இனப் படுகொ*லையின் அசைக்க முடியாத சாட்சி செம்மணி.!

Mathavi by Mathavi
June 18, 2026
in இலங்கை செய்திகள்.
0
தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட இனப் படுகொ*லையின் அசைக்க முடியாத சாட்சி செம்மணி.!
Share on FacebookShare on Twitter

இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சியாகவும், இந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பெரும் அவமானத்தின் அடையாளமாகவும் செம்மணி மனிதப் புதைகுழி உருவெடுத்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

தமிழர்கள் மீது புரியப்பட்ட இந்த இனப்படுகொலையைச் சர்வதேச சமூகம் இனியாவது ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதையே இந்தப் புதைகுழியில் இருந்து மீட்டெடுக்கப்படும் என்புத் தொகுதிகள் உலகுக்குப் பறைசாற்றுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மற்றும் அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மனித எச்சங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
“செம்மணி மனிதப் புதைகுழியில் மிகக் குறுகிய நாட்களுக்குள் 380 மனித என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இலங்கை வரலாற்றிலேயே மிக அதிகப்படியான மனிதப் பேரவலம் அரங்கேறிய ஒரேயொரு புதைகுழியாகவும், தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான நேரடிச் சாட்சியமாகவும் இந்தச் செம்மணித் தளம் இன்று மாறியுள்ளது.

இங்கு இன்னும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் என்புத் தொகுதிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனப் பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், உலகத்தினுடைய மனச்சாட்சியையே உலுக்கிக் கிளறிவிடுகின்ற ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த களமாக இந்தச் செம்மணி மனிதப் புதைகுழி அமையப் போகிறது.

சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் உடனடியாகத் தங்களின் மேலான கரிசனையைச் செலுத்த வேண்டும். எத்தனையோ இழப்புக்களைச் சந்தித்து, இன்றுவரை ஏமாற்றப்பட்டு வரும் தமிழ் மக்களுக்கான உண்மையான நீதியைப் பெற்றுத் தருகின்ற ஓர் அணையாத சுடராகவும், தமிழ் மக்களுடைய நீதிக்கான ஒரு பிரதான திறவுகோலாகவும் இந்தச் செம்மணி அமைய வேண்டும் என்பதே எங்களின் பலத்த எதிர்பார்ப்பாகும்.” – என்றார்.

Related Posts

ஹட்டன் அரச பேருந்து டிப்போ நவீனமயமாக்கல்.!

ஹட்டன் அரச பேருந்து டிப்போ நவீனமயமாக்கல்.!

by Mathavi
June 18, 2026
0

667 மில்லியன் ரூபா செலவில் காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ள ஹட்டன் பேருந்து டிப்போவை நேற்று (17) ஆம் திகதி மாலை நேரில் பார்வையிட்ட நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்...

மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்.!

மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்.!

by Mathavi
June 18, 2026
0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை சுதந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தியும் குற்றவாளிகளுக்கு சட்டத்தினால் சரியான தீர்ப்புகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தக்கோரியும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்ப...

காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்; பொலிஸார் தீவிர விசாரணை.!

காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்; பொலிஸார் தீவிர விசாரணை.!

by Mathavi
June 18, 2026
0

நுவரெலியா நகரில் உள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரிலிருந்து சடலமாக நேற்று புதன்கிழமை (17) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...

அரச காணிகளை பயன்படுத்த புதிய கொள்கை வருகின்றது.!

அரச காணிகளை பயன்படுத்த புதிய கொள்கை வருகின்றது.!

by Mathavi
June 18, 2026
0

அரச காணிக் கட்டளைச் சட்டம் மற்றும் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் என்பவற்றுக்கு அமைவாக இரத்து செய்ய வேண்டிய சுற்றறிக்கைகளை இரத்துச் செய்து புதிய சுற்றறிக்கைகளை வெளியிடவும்...

விபத்தில் சிக்கி ஆசிரியை உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி ஆசிரியை உயிரிழப்பு.!

by Mathavi
June 18, 2026
0

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் இன்று (18) காலை பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி, பூனாவை பொலிஸார்...

தங்கம் கடத்த முயன்ற பயணிகள் மருத்துவ பரிசோதனையில் சிக்கினர்.!

தங்கம் கடத்த முயன்ற பயணிகள் மருத்துவ பரிசோதனையில் சிக்கினர்.!

by Mathavi
June 18, 2026
0

காங்கேசன்துறை ஊடாக நாகைப்பட்டினம் செல்லத் தயாரான சமயம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட 26 பயணிகளில் 17 பேருக்கு நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட ஸ்கானிங் பரிசோதனையில் நால்வர் உடம்புக்குள்...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

வீடுகளில் கைவரிசை காட்டிய நபர் கைது.!

by Mathavi
June 18, 2026
0

மொரட்டுமுல்ல மற்றும் பிலியந்தலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளினுள் நுழைந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ...

பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலம் மீட்பு.!

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
June 18, 2026
0

கொழும்பு, கிராண்ட்பாஸ் சேதவத்தை களனி பாலத்துக்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (17) புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (2026 – 2030) ஜனாதிபதியிடம் கையளிப்பு.!

தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (2026 – 2030) ஜனாதிபதியிடம் கையளிப்பு.!

by Mathavi
June 18, 2026
0

நாட்டின் ஏற்றுமதித் துறையை வலுப்படுத்தி, நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதை நோக்கமாகக் கொண்ட 'தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (2026–2030)' நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார...

கடந்த 1998 இல் மீட்கப்பட்ட செம்மணி மனித எச்சங்கள் இன்னமும் ஸ்கொட்லாந்தில் பத்திரமாக உள்ளன.!

கடந்த 1998 இல் மீட்கப்பட்ட செம்மணி மனித எச்சங்கள் இன்னமும் ஸ்கொட்லாந்தில் பத்திரமாக உள்ளன.!

by Mathavi
June 18, 2026
0

கடந்த 1998ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தற்போதும் ஸ்கொட்லாந்து பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக உள்ளன என்றும், இலங்கை அரசு நினைத்தால்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி