• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 13, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சொல்லிசை பாடகர் சங்கீத்ஷன் பிணையில் விடுதலை.!

Mathavi by Mathavi
June 12, 2026
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
சொல்லிசை பாடகர் சங்கீத்ஷன் பிணையில் விடுதலை.!
Share on FacebookShare on Twitter

பாடகர் சங்கீத்ஷனுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விலக்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார் என்று பொலிஸார் இன்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இவ்விவகாரத்தை ஒட்டிய வழக்கு இன்று மூன்று தடவைகள் நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட பின்னர் இறுதியாக சங்கீத்ஷனுக்கு சாவகச்சேரி நீதிவான் பிணையாளிகள் தொடர்பாக மூன்று நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல இன்று மாலையில் அனுமதி வழங்கினார்.

இன்று காலை பொலிஸார் இந்த விடயம் தொடர்பாக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். பாடகர் சங்கீத்ஷனுக்கு எதிராக சுமத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டை விலக்கிக்கொள்ள சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார் என்றும், சங்கீத்ஷனுக்கு எதிராக சாதாரண தண்டனைச் சட்டக் கோவையின் 120 ஆம் பிரிவின் கீழ் அரசின் மீது வெறுப்புணர்வைத் தூண்டுதல் அல்லது அதிருப்தியை ஏற்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டைத் தொடர தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் அந்த மனுவில் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிஸார் தரப்புக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தை பொலிஸார் மன்றில் சமர்ப்பித்தனர். அந்தக் கடிதத்தில் அதன் பிரதி சாவகச்சேரி நீதிவானுக்கும் அனுப்பப்பட்டு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனை அடுத்து அவரை உடனடியாக விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுவிக்கக் கோரி இதுவரை அவரது சட்டத்தரணியாகச் செயற்பட்ட கேசவன் சயந்தன் பிணை மனு ஒன்றைத் தாக்கல் செய்து வாதிட்டார்.

”பொலிஸார் சங்கீத்ஷனுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டை விலக்கிக்கொள்வதால் அவரை உடனடியாக பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும். இந்த விவகாரத்துக்காக சங்கீத்ஷனுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்த முடியாது என்பதுதான் ஆரம்பம் தொட்டு எங்களது நிலைப்பாடும் வாதமும்” என்று சுட்டிக் காட்டிய சட்டத்தரணி சயந்தன் சாதாரண தண்டனைச் சட்டக் கோவையின் 120 ஆவது பிரிவின் கீழான குற்றச்சாட்டு என்றால் அது தொடர்பில் பிணை வழங்க முடியும் என்பதையும் சமர்ப்பணம் செய்தார்.

இந்தக் கட்டத்தில் இது குறித்து தீர்ப்பு வழங்குவது சற்று நேரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிவான் அறிவித்தார்.

மீண்டும் நீதிமன்றம் கூடும் சமயத்தில் நீதிமன்றத்துக்குச் சங்கீத்ஷனின் தாயார், ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுடன் பிரசன்னமானார். தாம் தமது மகனுக்காக சயந்தன் அல்லாத இன்னொரு சட்டத்தரணியை மன்றில் முன்னிலைப்படுத்துகின்றார் என்று அவர் தெரியப்படுத்தினார்.

தாம் பிணை மனு தொடர்பாக சமர்ப்பணம் செய்து விசாரணை முடிந்து விட்டது, நீதிமன்றம் முடிவை வழங்கும் என்று சயந்தன் தெரிவித்த நிலையில் மன்று மீண்டும் கூடியது.

இரண்டாவது தடவை வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த விடயத்தில் சட்டமா அதிபர் அனுப்பியதாகக் கூறப்படும் கடிதத்தின் பிரதி தமக்குக் கிடைக்கவில்லை என்றும், அதனால் வழக்கின் மேற்படி விவகாரத்தை ஒட்டிய தீர்மானத்தை 17ஆம் திகதி புதன்கிழமை வழங்குவதாகத் தெரிவித்து விடயத்தை ஒத்திவைத்தார் நீதிவான்.

ஆயினும் பின்னர் சங்கீத்ஷனின் தாயார் அழைத்து வந்த சட்டத்தரணி மேற்படி சட்டமா அதிபரின் கடிதத்தின் நீதிமன்றத்துக்கான பிரதியை மன்றில் கிடைக்கச் செய்து, சம்பந்தப்பட்ட பொலிஸ் தரப்பினரும் மன்றில் பிரசன்னமாகச் செய்த நிலையில் மூன்றாவது தடவையாக வழக்கு மன்றில் அழைக்கப்பட்டது. வழக்கு மீண்டும் இன்று மாலையில் எடுக்கப்பட்ட போது சங்கீத்ஷனுக்கு நீதிமன்றம் பிணை அனுமதி வழங்கியது.

Related Posts

மஸ்கெலியாவில் முன்பள்ளியை பூட்டி வைத்து தோட்ட நிர்வாகம் அராஜகம்!

மஸ்கெலியாவில் முன்பள்ளியை பூட்டி வைத்து தோட்ட நிர்வாகம் அராஜகம்!

by selvan
June 12, 2026
0

மஸ்கெலியா சாமிமலை பகுதியில் உள்ள கவிரவிலை தோட்டத்தின் பெரிய சோலங்கத்தை பிரிவில் உள்ள முன் பள்ளியை தோட்ட அதிகாரி கடந்த 11ஆம் திகதி தன்னிச்சையாக இழுத்துப்பூட்டி உள்ளதாக...

சிறைக்கூடத்தில் கைதி உயிரிழந்த விவகாரம் – இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடை நீக்கம்!

சிறைக்கூடத்தில் கைதி உயிரிழந்த விவகாரம் – இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடை நீக்கம்!

by selvan
June 12, 2026
0

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ்...

கிளிநொச்சியில் நடமாடும் சேவையூடாக காணிப் பிணக்குகளுக்குத் தீர்வு!

கிளிநொச்சியில் நடமாடும் சேவையூடாக காணிப் பிணக்குகளுக்குத் தீர்வு!

by selvan
June 12, 2026
0

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு கிளிநொச்சி மாவட்டத்தின்கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு. கண்டாவளை பிரதேச...

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகள் வெளிவரும் வரை பிள்ளையான் மற்றும் சலேயை விடுதலை செய்யக்கூடாது!

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகள் வெளிவரும் வரை பிள்ளையான் மற்றும் சலேயை விடுதலை செய்யக்கூடாது!

by selvan
June 12, 2026
0

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் என்றும், அதுவரை இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலே...

குருந்தூர் மலையில் சைவக் கோயில் இருந்ததற்கான சான்று இல்லை – தொல்லியல் திணைக்களம் திட்டவட்டம்!

குருந்தூர் மலையில் சைவக் கோயில் இருந்ததற்கான சான்று இல்லை – தொல்லியல் திணைக்களம் திட்டவட்டம்!

by selvan
June 12, 2026
0

முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் வரலாற்று ரீதியாகச் சைவக் கோயில் ஒன்று இருந்ததற்கான எவ்வித சான்றுகளும் இல்லை எனத் தொல்லியல் திணைக்களம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள்...

சர்வதேச அளவில் மனக்கணிதத்தில் சாதிக்கும் முல்லைத்தீவு சிறார்கள்.

சர்வதேச அளவில் மனக்கணிதத்தில் சாதிக்கும் முல்லைத்தீவு சிறார்கள்.

by selvan
June 12, 2026
0

சர்வதேச அளவில் நடைபெற்ற மனக்கணிதப் போட்டியில் முல்லைத்தீவு சிறார்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். ICAM Abacus இன் சர்வதேச அளவிலான மனக்கணிதப் போட்டி 04.06.2026 அன்று...

ஆரம்பப் பாடசாலைகளுக்கு பொதுவான மாதிரித் திட்டம் – பிரதமர் அறிவிப்பு

ஆரம்பப் பாடசாலைகளுக்கு பொதுவான மாதிரித் திட்டம் – பிரதமர் அறிவிப்பு

by selvan
June 12, 2026
0

மாணவர் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் செயல்வழிக் கல்வி ஆகிய முக்கிய துறைகளை உள்ளடக்கிய பொதுவான மாதிரி ஒன்றின் அடிப்படையில், நாட்டின் ஆரம்பப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்...

நீதியரசர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புங்கள் – சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கூட்டு மகஜர்!

நீதியரசர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புங்கள் – சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கூட்டு மகஜர்!

by selvan
June 12, 2026
0

உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் நீதியரசர்களின் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட விசேட கடிதமொன்று இன்று சபாநாயகர் ஜகத்...

வலிகாமம் வடக்கில் இராணுவ கொமாண்டோ பங்களா முன் 8 ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு!

வலிகாமம் வடக்கில் இராணுவ கொமாண்டோ பங்களா முன் 8 ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு!

by selvan
June 12, 2026
0

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக...

வருண ஜயசுந்தரவைக் கைது செய்யும் எண்ணம் இல்லை! – சட்டமா அதிபர் அறிவிப்பு

வருண ஜயசுந்தரவைக் கைது செய்யும் எண்ணம் இல்லை! – சட்டமா அதிபர் அறிவிப்பு

by selvan
June 12, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவைக் கைது செய்யவோ அல்லது தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவோ எவ்வித...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி