• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 12, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

குருந்தூர் மலையில் சைவக் கோயில் இருந்ததற்கான சான்று இல்லை – தொல்லியல் திணைக்களம் திட்டவட்டம்!

selvan by selvan
June 12, 2026
in இலங்கை செய்திகள்.
0
குருந்தூர் மலையில் சைவக் கோயில் இருந்ததற்கான சான்று இல்லை – தொல்லியல் திணைக்களம் திட்டவட்டம்!
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் வரலாற்று ரீதியாகச் சைவக் கோயில் ஒன்று இருந்ததற்கான எவ்வித சான்றுகளும் இல்லை எனத் தொல்லியல் திணைக்களம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

அத்துடன், குறித்த நிலப்பரப்பானது வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த மதத் தலத்துக்கான சான்றுகளைக் கொண்ட இடம் எனவும், அங்கு பௌத்த எச்சங்களைச் சேதமாக்கி புதிய வழிபாட்டுத் தலங்களை உருவாக்க முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அக் கடிதத்தில் தொல்லியல் திணைக்களம் பதிவு செய்துள்ளது.

எனினும், குருந்தூர்மலை என்பது தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்பு என்றும், அங்குள்ள ஆதி ஐயனார் மற்றும் சிவன் ஆலயங்களை அப்பகுதி மக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்தனர் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அங்குள்ள வரலாற்றுச் சிதைவுகள் மற்றும் தமிழ் வரிவடிவ எழுத்துக்களைக் கொண்டு, குறித்த நிலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 2,300 ஆண்டுகாலம் பழமையானது எனப் பேராசிரியர் பத்மநாதன் உள்ளிட்ட வரலாற்றுத்துறை நிபுணர்கள் பதிவு செய்துள்ளனர்.

மேலும், அங்கு கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் காலத்து ‘எட்டுமுக தாரலிங்கம்’ என வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ். திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆங்கிலேய ஆய்வாளர்களின் பதிவுகளிலும் குருந்தூர் மலையில் ஆவுடையார் (லிங்கத்தின் அடிப்பாகம்), உடைந்த நந்தி சிலை, பழங்காலக் கிணறு என்பன இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, வீரசைவத்தை வழிபட்ட கலிங்க மாகோன் மன்னனின் ஆட்சிக் காலத்தில் குருந்தூர் மலை ஒரு படைத்தளமாக இருந்ததாகவும், அங்கு சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும் என்றும் மகாவம்சத்தின் ஒரு பகுதியான சூளவம்சம் குறிப்பிடுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறான பின்னணியில், கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்பகுதிக்குள் நுழைந்த கல்கமூவ சாந்தபோதி தேரர், 2020 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றக் கட்டளைகளை மீறி, இராணுவத்தின் துணையுடன் சட்டவிரோதமாகக் ‘குருந்தி ராஜமஹா விகாரை’ என்ற பௌத்த விகாரையை அங்கு நிர்மாணித்துள்ளதாகத் தமிழ்த் தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

அத்துடன், விகாரையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான 229 ஏக்கர் வளமான விவசாய நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிண்றது.

இவ்விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அழுத்தங்கள், மரண அச்சுறுத்தல்கள் மற்றும் இராணுவப் புலனாய்வுத்துறையினரின் தீவிர கண்காணிப்பு காரணமாகவே முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி. சரவணராஜா தனது பதவியைத் துறந்து நாட்டை விட்டே வெளியேறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில், தமது சொந்த நிலத்தில் விவசாயம் செய்ய முயன்ற தமிழ் பொதுமக்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமும் இங்கு அரங்கேறியிருந்தது.

வெடுக்குநாறி மலையைப் பௌத்த மத நிலமாக வர்த்தமானி மூலம் அரசு அறிவித்துள்ள தொடர்ச்சியிலேயே, தற்போது தொல்லியல் திணைக்களத்தின் ஊடாகக் குருந்தூர்மலையையும் முழுமையான பௌத்த நிலமாக அடையாளப்படுத்த முயற்சிகள் நடப்பதாகத் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைப்பது இன நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு எனக் கூறும் தற்போதைய அரசு, தொல்லியல் திணைக்களத்தை முன்னிறுத்திச் சைவ ஆலயங்களின் வரலாற்றுத் தொன்மையை மூடிமறைக்கப் பார்ப்பதாகப் பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Related Posts

சிறைக்கூடத்தில் கைதி உயிரிழந்த விவகாரம் – இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடை நீக்கம்!

சிறைக்கூடத்தில் கைதி உயிரிழந்த விவகாரம் – இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடை நீக்கம்!

by selvan
June 12, 2026
0

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ்...

கிளிநொச்சியில் நடமாடும் சேவையூடாக காணிப் பிணக்குகளுக்குத் தீர்வு!

கிளிநொச்சியில் நடமாடும் சேவையூடாக காணிப் பிணக்குகளுக்குத் தீர்வு!

by selvan
June 12, 2026
0

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு கிளிநொச்சி மாவட்டத்தின்கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு. கண்டாவளை பிரதேச...

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகள் வெளிவரும் வரை பிள்ளையான் மற்றும் சலேயை விடுதலை செய்யக்கூடாது!

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகள் வெளிவரும் வரை பிள்ளையான் மற்றும் சலேயை விடுதலை செய்யக்கூடாது!

by selvan
June 12, 2026
0

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் என்றும், அதுவரை இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலே...

சர்வதேச அளவில் மனக்கணிதத்தில் சாதிக்கும் முல்லைத்தீவு சிறார்கள்.

சர்வதேச அளவில் மனக்கணிதத்தில் சாதிக்கும் முல்லைத்தீவு சிறார்கள்.

by selvan
June 12, 2026
0

சர்வதேச அளவில் நடைபெற்ற மனக்கணிதப் போட்டியில் முல்லைத்தீவு சிறார்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். ICAM Abacus இன் சர்வதேச அளவிலான மனக்கணிதப் போட்டி 04.06.2026 அன்று...

ஆரம்பப் பாடசாலைகளுக்கு பொதுவான மாதிரித் திட்டம் – பிரதமர் அறிவிப்பு

ஆரம்பப் பாடசாலைகளுக்கு பொதுவான மாதிரித் திட்டம் – பிரதமர் அறிவிப்பு

by selvan
June 12, 2026
0

மாணவர் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் செயல்வழிக் கல்வி ஆகிய முக்கிய துறைகளை உள்ளடக்கிய பொதுவான மாதிரி ஒன்றின் அடிப்படையில், நாட்டின் ஆரம்பப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்...

நீதியரசர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புங்கள் – சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கூட்டு மகஜர்!

நீதியரசர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புங்கள் – சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கூட்டு மகஜர்!

by selvan
June 12, 2026
0

உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் நீதியரசர்களின் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட விசேட கடிதமொன்று இன்று சபாநாயகர் ஜகத்...

வலிகாமம் வடக்கில் இராணுவ கொமாண்டோ பங்களா முன் 8 ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு!

வலிகாமம் வடக்கில் இராணுவ கொமாண்டோ பங்களா முன் 8 ஆவது வாரமாகவும் போராட்டம் முன்னெடுப்பு!

by selvan
June 12, 2026
0

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக...

வருண ஜயசுந்தரவைக் கைது செய்யும் எண்ணம் இல்லை! – சட்டமா அதிபர் அறிவிப்பு

வருண ஜயசுந்தரவைக் கைது செய்யும் எண்ணம் இல்லை! – சட்டமா அதிபர் அறிவிப்பு

by selvan
June 12, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவைக் கைது செய்யவோ அல்லது தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவோ எவ்வித...

நாவலப்பிட்டியவில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் நால்வர் காயம்!

நாவலப்பிட்டியவில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் நால்வர் காயம்!

by selvan
June 12, 2026
0

கண்டி நாவலப்பிட்டிய பிரதேசத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக இம்புல்பிட்டிய உச்சியில் உள்ள வீடொன்றின் மீது பாரிய மரம் விழுந்ததில் நால்வர் காயமடைந்துள்ளனர். இன்று...

வர்த்தக நிலையத்தின் மீது முறிந்து வீழ்ந்த மரம்.!

வர்த்தக நிலையத்தின் மீது முறிந்து வீழ்ந்த மரம்.!

by Mathavi
June 12, 2026
0

கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் காற்று காரணமாக இன்று 12.06.2026 கிளிநொச்சி பரந்தன் பொதுச்சந்தையில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது பாலை மரம் முறிந்து வீழ்ந்தமையால் வர்த்தக நிலையம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி