உண்மையிலேயே தமிழர்கள் பாடுவதற்கு கூட சுதந்திரம் இல்லாத ஒரு நாடாக எமது நாடு மாறிக்கொண்டு வருகிறது என மன்னார் நகர சபையின் முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்.
மன்னார் நகர சபையில் இன்று (05) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் நகரசபை தலைவர் என்ற ரீதியிலே, ஒரு தமிழன் என்ற ரீதியிலே, உண்மையிலேயே வன்மையான கண்டனங்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கையிலே பாடுவதற்கு கூட தமிழர்களுக்கு உரிமை இல்லை என்று நினைக்கும் போது, இந்த அரசாங்கம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றன என்று பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
தமிழர்களுக்கான உரிமையைக் கொடுப்போம், சமூக உரிமையை வழங்குவோம் என்று சொல்லி வந்த இந்த அரசாங்கம், இன்று பாட்டு பாடியதற்கு எமது இளைஞர் ஒருவரை கைது செய்திருக்கிறார்கள்.
உடனடியாக இந்த அரசாங்கத்திடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன், எந்தவிதமான நிபந்தனையுமின்றி உடனடியாக அந்த இளம் பாடகரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இதேவேளை மண்ணின் விலையை குறைப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் பல வழிகளிலே முயற்சி எடுத்ததாகவும்
தானும் அந்த முயற்சியிலே இணைந்ததாகவும் குறிப்பிட்ட அவர்
அந்த முயற்சியின் பலனாக 51,500 ஆயிரம் ரூபாய்க்கு மண் வழங்கப்படும் என மக்களுக்கு தாங்கள் சொல்லியிருந்ததாகவும் தெரிவித்தார்.
எனினும் ஒரு சிலருக்கு மட்டும் அந்த மண் இப்பொழுது கிடைக்க பெற்றிருக்கின்றது என சுட்டிக்காட்டிய முதல்வர்ஏதோ ஒரு காரணங்களால், காரணங்களால் மீண்டும் குழப்பம் ஏற்படுத்தப்பட்டு மன்னார் மாவட்டத்தில் 70,000ஆயிரம்முதல் , 80,000ஆயிரம் வரை விற்க்கப்படுவதாகவும் கூறினார்.
எனவே, இந்த அதிக விலையில் மண்ணை பறிப்பவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.










