• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 6, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகள் நடும் விசேட நிகழ்வு.!

Mathavi by Mathavi
June 5, 2026
in இலங்கை செய்திகள்., கிளிநொச்சி செய்திகள்
0
உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகள் நடும் விசேட நிகழ்வு.!
Share on FacebookShare on Twitter

மரங்களை நடுகை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போது மக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டிருக்கின்றது. அவ்வாறு நடுகை செய்யப்படும் மரங்களைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும் எம்மிடையே ஏற்பட வேண்டும். அந்தப் பொறுப்புணர்வு ஏற்படுமாக இருந்தால் மாத்திரமே, உலக சுற்றாடல் தினத்தை நாம் கடைப்பிடிப்பதன் நோக்கத்தை ஓரளவாவது அடைந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகளை நடும் விசேட நிகழ்வு இன்று (05.06.2026) வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக இடம்பெற்றது. இந்த மாபெரும் மர நடுகைத் திட்டத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

கண்டாவளை பிரதேச செயலகம் மற்றும் உமையாள்புரம் கிராம மக்கள் இணைந்து இந்தச் சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்வை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்ததுடன், ‘நிலா இம்பக்ட்’ நிறுவனத்தினர் இதற்கு அனுசரணை வழங்கியிருந்தனர். ‘மரங்களை அழிப்பது மனிதன் தன் சொந்தக் கைகளால் தன் சுவாசப் பையைச் சுருக்குவதற்குச் சமம்’ என்ற ஆழமான கருப்பொருளுடனும், ‘ஒரு மரம் ஆயிரம் நன்மைகள்’, ‘இன்று ஒரு மரம் நடுவோம், நாளை ஒரு உலகம் காப்போம்’ போன்ற விழிப்புணர்வுச் சிந்தனைகளை மையப்படுத்தியும் இந்த மர நடுகைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள், ‘இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் ‘இயற்கையிலிருந்து உத்வேகம் பெறுவோம்: பருவநிலைக்காக, நமது எதிர்காலத்திற்காக’ என்பதாகும்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் பசுமைச் சூழலை உருவாக்கல் என்பதே இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றது.

நாம் இயற்கை வளங்களை அழிப்பதாலேயே இன்று மிகப் பெரிய காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. எதிர்வுகூற முடியாத காலநிலைச் சூழலுக்குள் நாம் அனைவரும் சிக்கியுள்ளோம். எனவே, இயற்கை வளங்களைப் பேணிப் பாதுகாப்பதும், பசுமைப் புரட்சியை ஏற்படுத்துவதும் எதிர்கால சந்ததியினருக்கு இந்தப் பூமியை வளமுள்ளதாக ஒப்படைப்பதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும்,’ எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் அவர்கள், ‘எமது மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் காடழிப்பு என்பன தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. இவை எமது சூழலை அழிக்கும் பாரதூரமான செயற்பாடுகளாகும். எமது முன்னோர்கள் இந்த மண்ணைக் காக்கத் தமது உயிரையே அர்ப்பணித்தார்கள்; இந்த வளங்களைப் பாதுகாப்பதற்கு அரும்பாடுபட்டார்கள். நாம் இப்போது இந்த இயற்கை வளங்களைப் பாதுகாக்காவிட்டால், எமது எதிர்கால சந்ததிக்கு எதுவுமே மிஞ்சாது,’ எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் ஓர் அங்கமாகப் பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஏ-9 பிரதான வீதியின் கரையோரங்களில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. மேலும், பரந்தன் நகரப் பகுதியில் சுற்றாடலைத் துப்புரவு செய்யும் மாபெரும் சிரமதான நடவடிக்கையும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த விசேட நிகழ்வில் கௌரவ ஆளுநருடன் இணைந்து, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், கரைச்சி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அ.வேளமாலிகிதன், கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவனருள்ராஜா, கிளிநொச்சி 553 பிரிகேட்டின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் முதுநாயக, ‘நிலா இம்பக்ட்’ நிறுவனத்தின் தலைவர் ஜெ.சிறிசங்கர் ஆகியோரும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் உன்னத நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட இந்தச் செயற்றிட்டத்தில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் உமையாள்புரம் கிராம மக்கள் எனப் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

மன்னார் மாவட்டத்தின் மூன்றாவது நீதிபதியாக சட்டத்தரணி  அன்ரனி சர்மிலன் டயஸ்   தெரிவு

மன்னார் மாவட்டத்தின் மூன்றாவது நீதிபதியாக சட்டத்தரணி அன்ரனி சர்மிலன் டயஸ் தெரிவு

by selvan
June 6, 2026
0

மன்னார் மாவட்டத்தின் மூன்றாவது நீதிபதியாக சட்டத்தரணி அன்ரனி சர்மிலன் டயஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை முழுவதும் நீதிபதிகளை தெரிவு செய்வதற்காக நீதி சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்த பட்ட...

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

by selvan
June 5, 2026
0

நேற்றிரவு வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது. முகங்களை மூடி, கறுப்பு உடை அணிந்து, வாளுடன் வந்த குழுவினர் வீட்டின்...

கற்பனைக் கதைகளால் தீர்வு காணவே முடியாது! – ஜனாதிபதியைச் சாடும் முஜிபுர்

கற்பனைக் கதைகளால் தீர்வு காணவே முடியாது! – ஜனாதிபதியைச் சாடும் முஜிபுர்

by selvan
June 5, 2026
0

தற்போதைய அரசுக்கு முறையான பொருளாதார தொலைநோக்கு பார்வை இல்லாததன் காரணமாக, டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

by selvan
June 5, 2026
0

பொத்துவில் பசரிச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல்க்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக சென்ற 9 வயதுடைய அறூஸ்...

முத்தரிப்புத்துறையில் அருவி ஆற்றின் கரை அரிப்பைத் தடுக்க விசேட தலையீட்டைக் கோருகிறார் ரவிகரன் எம்.பி!

முத்தரிப்புத்துறையில் அருவி ஆற்றின் கரை அரிப்பைத் தடுக்க விசேட தலையீட்டைக் கோருகிறார் ரவிகரன் எம்.பி!

by selvan
June 5, 2026
0

மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தில், அருவி ஆற்றின் நீரோட்டத்தினால் ஏற்பட்டு வரும் கடுமையான ஆற்றங்கரை அரிப்பைத் தடுப்பதற்கு உடனடியாக விசேட தலையீட்டை...

மன்னாரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல்த் தாவர நடுகை

மன்னாரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல்த் தாவர நடுகை

by selvan
June 5, 2026
0

பூமி மற்றும் அதன் இயற்கை வளங்களின் நிலைத்தன்மையை உறுதி படுத்தும் நோக்கில், உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு...

தேசிய மக்கள் சக்தியை யாராலும்  அசைத்துவிட முடியாது! – அமைச்சர் சுசில் ரணசிங்க முழக்கம்

தேசிய மக்கள் சக்தியை யாராலும் அசைத்துவிட முடியாது! – அமைச்சர் சுசில் ரணசிங்க முழக்கம்

by selvan
June 5, 2026
0

தேசிய மக்கள் சக்தி என்பது வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்லாமல், அதுவொரு முறையான ஒழுக்கமும், பலமான கட்டமைப்பும் கொண்ட மக்கள் சக்தி என்பதால் தங்களை யாராலும் எளிதாக...

சுரேஷ் சலேவுக்குக் கடுமையான சித்திரவதை! – மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

சுரேஷ் சலேவுக்குக் கடுமையான சித்திரவதை! – மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

by selvan
June 5, 2026
0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, நாட்டுக்குச் சேவையாற்றிய முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேயை அதே சட்டத்தின் கீழ்...

தமிழர்கள் பாடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாத நாடு இலங்கை – மன்னார் நகர சபையின் முதல்வர் தெரிவிப்பு!

தமிழர்கள் பாடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாத நாடு இலங்கை – மன்னார் நகர சபையின் முதல்வர் தெரிவிப்பு!

by selvan
June 5, 2026
0

உண்மையிலேயே தமிழர்கள் பாடுவதற்கு கூட சுதந்திரம் இல்லாத ஒரு நாடாக எமது  நாடு மாறிக்கொண்டு வருகிறது என மன்னார் நகர சபையின் முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்....

பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் யாழில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் யாழில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

by selvan
June 5, 2026
0

தமிழின விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட முதல் தியாகியான பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை யாழ். உரும்பிராயில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி