• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 31, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பலவீனமான பொருளாதாரக் கையாளுமைகளால் நாடு பாரிய பொருளாதார ஆபத்தை நோக்கி நகர்கிறது – ரணில் எச்சரிக்கை!

selvan by selvan
May 31, 2026
in இலங்கை செய்திகள்.
0
பலவீனமான பொருளாதாரக் கையாளுமைகளால் நாடு பாரிய பொருளாதார ஆபத்தை நோக்கி நகர்கிறது – ரணில் எச்சரிக்கை!
Share on FacebookShare on Twitter

தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற மற்றும் பலவீனமான பொருளாதாரக் கையாளுமைகளால் நாடு மீண்டும் ஒருமுறை பாரிய பொருளாதார ஆபத்தை நோக்கி மிக வேகமாக நகர்கிறது” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் டொலர் நெருக்கடி குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் தற்போதைய ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை ரூபாவை நிலையான முறையில் வலுப்படுத்துவதே எனது கடந்தகால பொருளாதாரக் கொள்கையின் முதன்மையான நோக்கமாக இருந்தது. தற்போதைய ஆட்சியாளர்கள் ஆரம்பத்திலேயே டொலரின் கட்டுப்பாட்டைத் தவறவிட்டுள்ளனர்.

அரசு ஆரம்பத்திலிருந்தே டொலரின் மதிப்பை 280 ரூபா மட்டத்தில் தக்கவைப்பதற்கான முறையான முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டனர். இன்று டொலர் 320 ரூபா வரை சென்றுவிட்டது. அதாவது 30 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இப்போது இந்த டொலர் பற்றாக்குறையை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்வது என்று தெரியாமல் நிதி அமைச்சும் மத்திய வங்கியும் திண்டாடுகின்றன.

வெளிநாட்டு கையிருப்புப் பற்றாக்குறை என்பது ஒரு நாட்டுக்கு ஏற்படும் மிகப்பெரிய வருமானப் பற்றாக்குறையாகும்.

இந்த நெருக்கடிக்கு மிக விரைவாகத் தீர்வு காணாவிட்டால் நாடு மீள முடியாத பேரழிவைச் சந்திக்கும்.

நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பின்னடைவானது, கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனுக்குக் கால் உடைந்ததைப் போன்றது.

அவன் நடந்து சென்று சிகிச்சை பெறுவதற்காக எனது ஆட்சிக்காலத்தில் அவனது உடைந்த காலைக் குணப்படுத்திக் கொடுத்தேன்.

மருத்துவமனைக்குச் சென்ற பின்னர், 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவனுக்குரிய பிரதான அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் அதைச் செய்யவில்லை. இப்போது ஆபத்தான நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

நான் ஆட்சியில் இருந்தபோது இலங்கையை உலகப் பொருளாதாரத்துடன் இணைக்க எடுத்த தொலைநோக்கு முயற்சிகள் அனைத்தும் குறுகிய அரசியல் மற்றும் உள்நாட்டு எதிர்ப்புகளால் முறியடிக்கப்பட்டன.

இந்தியாவுடன் இணைந்து சேதுசமுத்திரம் திட்டத்தையும், இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்வழிப் பாலத்தையும் அமைக்க முழு முயற்சி எடுத்தேன்.

அந்தத் திட்டங்கள் மட்டும் தொடங்கப்பட்டிருந்தால், சுமார் பத்து வருடங்களுக்கு நாட்டில் கட்டுமானப் பணிகள் தொடர்ச்சியாக நடந்திருக்கும்.

அதன் மூலம் 5 டிரில்லியன் ரூபா பெறுமதியான பொருளாதாரம் நமது நாட்டுடன் இணைந்திருக்கும்.

அதேபோல், இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் தரைவழியாக எரிபொருள் குழாய் இணைப்பை ஏற்படுத்துவதற்கும் திட்டமிட்டிருந்தேன். போலி காரணங்களைக் கூறி அதற்கும் இடம் கொடுக்கவில்லை.

அதைச் செய்திருந்தால், இந்தியாவுக்குக் கிடைக்கும் அதே குறைந்த சர்வதேச விலையிலேயே நமக்கும் தங்குதடையின்றி எரிபொருளைப் பெற்றிருக்க முடியும்.

தற்போதைய ஆட்சியாளர்கள் வர்த்தக வங்கிகளுக்குக் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்துள்ளனர். டொலரின் மதிப்பை 330 ரூபாவுக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர்.

விரைவில் சர்வதேச நிதியுதவியாக 1 பில்லியன் டொலர் நாட்டுக்கு வரவுள்ளதாகக் கூறியே இந்தத் தற்காலிக அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றார்கள்.

ஆனால், 1 பில்லியன் டொலர் சந்தைக்குள் வந்தாலும் பெரிய கட்டமைப்பு மாற்றம் எதுவும் நடந்துவிடாது.

இன்று உலகப் பொருளாதாரம் மாறிவிட்டது.

சர்வதேச யுத்தச் சூழல்

காரணமாக உலகச் சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்தியாவுக்கே பொருளாதாரத்தை நகர்த்துவது சவாலாக உள்ளது.

உலகச் சந்தையில் திடீரென கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 10 டொலரால் உயர்கின்றது.

இத்தகைய உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், இவர்கள் முழு மூச்சாக டொலரைச் செயற்கையாகக் கட்டுப்படுத்தப் பார்க்கின்றார்கள்.

டொலர் மதிப்பைச் செயற்கையாக ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.

இன்னும் சில காலம் சென்றதும் டொலரின் மதிப்பு மீண்டும் சந்தை விதிகளுக்கமைய வேகமாக உயர்ந்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை அதிகரிக்கச் செய்யும்.” – என்றார்.

Related Posts

முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு குடத்தனை செல்வா விளையாட்டு கழகம் நிதியுதவி!

முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு குடத்தனை செல்வா விளையாட்டு கழகம் நிதியுதவி!

by selvan
May 31, 2026
0

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசர சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக நிதியுதவி கோரியிருந்த சிவாஜிலிங்கம் அவர்களுக்கு, யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை செல்வா விளையாட்டு கழகத்தினர்...

மொனராகலையில் பேருந்து விபத்து – 26 பேர் படுகாயம்!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் ஐவர் பலி!

by selvan
May 31, 2026
0

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்துச் சம்பவங்களில் 22 வயது இளைஞர் ஒருவர் உட்பட ஐந்து பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் தலைமையகம்...

மகாவலி ஆற்றில் கோழிக் கழிவுகளைக் கொட்ட முயன்ற இருவர் கைது!

மகாவலி ஆற்றில் கோழிக் கழிவுகளைக் கொட்ட முயன்ற இருவர் கைது!

by selvan
May 31, 2026
0

மகாவலி ஆற்றில் கோழிக் கழிவுகளைக் கொட்ட முயன்ற இருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்..​ ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரம் மகாவலி ஆற்றின் பிரதான நீர் மூலமான...

சிறுமிக்கு மறுக்கப்பட்ட நீதிக்காக குரல் கொடுக்க வருமாறு அழைப்பு!

சிறுமிக்கு மறுக்கப்பட்ட நீதிக்காக குரல் கொடுக்க வருமாறு அழைப்பு!

by selvan
May 31, 2026
0

துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுக்க ஒன்றிணைந்து வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு மறுக்கப்பட்ட நீதிக்காக குரல் கொடுக்க எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி காலை 9 மணிக்கு...

களுத்துறை தெற்கு கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு!

களுத்துறை தெற்கு கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு!

by selvan
May 31, 2026
0

களுத்துறை தெற்கு கடற்கரைப் பகுதியில் இன்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் மற்றும் முகவரி என்பன இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ள...

யாழில் முக்கிய வீதி ஒன்றினை ஒரு வழிப்பாதையாக மாற்றுவது தொடர்பான அறிவித்தல்!

யாழில் முக்கிய வீதி ஒன்றினை ஒரு வழிப்பாதையாக மாற்றுவது தொடர்பான அறிவித்தல்!

by selvan
May 31, 2026
0

திருநெல்வேலிச் சந்தி ஆடியபாதம் வீதியின் புனரமைப்பு பணிகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் திருநெல்வேலி சந்தியிலிருந்து திருநெல்வேலி சந்தை பக்கமாக உள்ள ஆடியபாத வீதியின் ஒரு பகுதி...

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்!

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்!

by selvan
May 31, 2026
0

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் குற்றம் சுமத்தியுள்ளார். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள்...

கினிகத்தேன -ஹட்டன் பிரதான வீதி சேதம் – பொதுமக்கள் அச்சம்!

கினிகத்தேன -ஹட்டன் பிரதான வீதி சேதம் – பொதுமக்கள் அச்சம்!

by selvan
May 31, 2026
0

கினிகத்தேன -ஹட்டன் பிரதான வீதியில் உள்ள தியாகல சந்தி பகுதியில் கினிகத்தேனவை நோக்கிச் செல்லும் பேருந்து தரிப்பிடத்தில் முன்னாள் உள்ள வீதியின் ஒரு பகுதி உடைந்து புதைந்து...

தமிழர் தாயகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸ் பொலிசாரால் சுட்டுக் கொலை!

தமிழர் தாயகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸ் பொலிசாரால் சுட்டுக் கொலை!

by selvan
May 31, 2026
0

பிரான்ஸ், Bobigny பகுதியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈழத்தமிழ் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் அளிக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து...

புதிய தாதியர் நியமனங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

புதிய தாதியர் நியமனங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

by selvan
May 31, 2026
0

இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் மேலும் 2,867 புதிய தாதியர் நியமனங்கள் வழங்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி