• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 31, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் ஐவர் பலி!

selvan by selvan
May 31, 2026
in இலங்கை செய்திகள்.
0
மொனராகலையில் பேருந்து விபத்து – 26 பேர் படுகாயம்!
Share on FacebookShare on Twitter

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்துச் சம்பவங்களில் 22 வயது இளைஞர் ஒருவர் உட்பட ஐந்து பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கம்பஹா, கலிகமுவ, மஹியங்கனை, மீரிகம மற்றும் எல்பிட்டிய ஆகிய பகுதிகளிலேயே இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

இந்த விபத்துக்கள் குறித்த விரிவான விவரங்கள் வருமாறு:-

வெலிவேரிய நகரில் ஓட்டோவுடன்மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

வெலிவேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிவேரிய – தெல்கொட வீதியின் வெலிவேரிய நகர்ப் பகுதியில் தெல்கொட நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, முன்னால் பயணித்த ஓட்டோவை முந்த முற்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து அதனுடன் மோதியுள்ளது.

இதன்போது, எதிர்பாராதவிதமாக எதிர்த்திசையிலிருந்து வந்த கப் ரக வாகனத்துடனும் மோட்டார் சைக்கிள் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹேனேகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய கப் வாகனத்தின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலிகமுவ – அவிசாவளை வீதியில் பாதசாரி மீது பாய்ந்த மோ. சைக்கிள் பின்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலிகமுவ – அவிசாவளை வீதியின் கொடியாகும்புர பகுதியில் மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது.

கலிகமுவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற வயோதிபப் பாதசாரி மீது மிக வேகமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி உடனடியாகத் தொரணகஹபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அருகம்மன பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் எனத் தெரியவந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணித்த மோட்டார் சைக்கிளுடன் எதிர்த்திசையிலிருந்து வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அதிவேகமாக நேருக்கு நேர் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த ஒரு மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர், மற்றைய மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த பெண் மற்றும் அவரது மகள் ஆகிய மூவரும் உடனடியாக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓட்டுநரான ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாபாகடவெவ – மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீரிகமவில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதிய ஓட்டோ

மீரிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிஉல்ல – பஸ்யால வீதியின் டி.எஸ். சந்திக்கு அருகில், பஸ்யால நோக்கிப் பயணித்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக வீதியின் ஒரு பக்கமாக நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது பின்னால் வந்த ஓட்டோவின் ஓட்டுநருக்கு அதனை வேகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனதால், நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் ஓட்டோ பலமாக மோதி நசுங்கியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த ஓட்டோவின் ஓட்டுநர் மற்றும் அதன் பின் ஆசனத்தில் பயணித்த நபர் ஆகிய இருவரும் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பின் ஆசனத்தில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பஸ்யால பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார். அத்துடன், படுகாயமடைந்த ஓட்டோவின் ஓட்டுநர் மேலதிக அவசர சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

லொறியின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எல்பிட்டியவில் பாதசாரி மீதுலொறி மோதி விபத்து

எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்பிட்டிய – அம்பலாங்கொடை வீதியின் கதகந்தகொட சந்திக்கு அருகில் லொறி ஒன்று வீதியோரமாக நடந்து சென்ற பாதசாரி மீது அநாவசியமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி எல்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் ஹிரண, பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என்று தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஐந்து விபத்துச் சம்பவங்கள் குறித்து அந்தந்தப் பகுதிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு குடத்தனை செல்வா விளையாட்டு கழகம் நிதியுதவி!

முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு குடத்தனை செல்வா விளையாட்டு கழகம் நிதியுதவி!

by selvan
May 31, 2026
0

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசர சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக நிதியுதவி கோரியிருந்த சிவாஜிலிங்கம் அவர்களுக்கு, யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை செல்வா விளையாட்டு கழகத்தினர்...

பலவீனமான பொருளாதாரக் கையாளுமைகளால் நாடு பாரிய பொருளாதார ஆபத்தை நோக்கி நகர்கிறது – ரணில் எச்சரிக்கை!

பலவீனமான பொருளாதாரக் கையாளுமைகளால் நாடு பாரிய பொருளாதார ஆபத்தை நோக்கி நகர்கிறது – ரணில் எச்சரிக்கை!

by selvan
May 31, 2026
0

தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற மற்றும் பலவீனமான பொருளாதாரக் கையாளுமைகளால் நாடு மீண்டும் ஒருமுறை பாரிய பொருளாதார ஆபத்தை நோக்கி மிக வேகமாக நகர்கிறது" என்று முன்னாள் ஜனாதிபதி...

மகாவலி ஆற்றில் கோழிக் கழிவுகளைக் கொட்ட முயன்ற இருவர் கைது!

மகாவலி ஆற்றில் கோழிக் கழிவுகளைக் கொட்ட முயன்ற இருவர் கைது!

by selvan
May 31, 2026
0

மகாவலி ஆற்றில் கோழிக் கழிவுகளைக் கொட்ட முயன்ற இருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்..​ ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரம் மகாவலி ஆற்றின் பிரதான நீர் மூலமான...

சிறுமிக்கு மறுக்கப்பட்ட நீதிக்காக குரல் கொடுக்க வருமாறு அழைப்பு!

சிறுமிக்கு மறுக்கப்பட்ட நீதிக்காக குரல் கொடுக்க வருமாறு அழைப்பு!

by selvan
May 31, 2026
0

துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுக்க ஒன்றிணைந்து வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு மறுக்கப்பட்ட நீதிக்காக குரல் கொடுக்க எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி காலை 9 மணிக்கு...

களுத்துறை தெற்கு கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு!

களுத்துறை தெற்கு கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு!

by selvan
May 31, 2026
0

களுத்துறை தெற்கு கடற்கரைப் பகுதியில் இன்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் மற்றும் முகவரி என்பன இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ள...

யாழில் முக்கிய வீதி ஒன்றினை ஒரு வழிப்பாதையாக மாற்றுவது தொடர்பான அறிவித்தல்!

யாழில் முக்கிய வீதி ஒன்றினை ஒரு வழிப்பாதையாக மாற்றுவது தொடர்பான அறிவித்தல்!

by selvan
May 31, 2026
0

திருநெல்வேலிச் சந்தி ஆடியபாதம் வீதியின் புனரமைப்பு பணிகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் திருநெல்வேலி சந்தியிலிருந்து திருநெல்வேலி சந்தை பக்கமாக உள்ள ஆடியபாத வீதியின் ஒரு பகுதி...

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்!

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்!

by selvan
May 31, 2026
0

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் குற்றம் சுமத்தியுள்ளார். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள்...

கினிகத்தேன -ஹட்டன் பிரதான வீதி சேதம் – பொதுமக்கள் அச்சம்!

கினிகத்தேன -ஹட்டன் பிரதான வீதி சேதம் – பொதுமக்கள் அச்சம்!

by selvan
May 31, 2026
0

கினிகத்தேன -ஹட்டன் பிரதான வீதியில் உள்ள தியாகல சந்தி பகுதியில் கினிகத்தேனவை நோக்கிச் செல்லும் பேருந்து தரிப்பிடத்தில் முன்னாள் உள்ள வீதியின் ஒரு பகுதி உடைந்து புதைந்து...

தமிழர் தாயகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸ் பொலிசாரால் சுட்டுக் கொலை!

தமிழர் தாயகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸ் பொலிசாரால் சுட்டுக் கொலை!

by selvan
May 31, 2026
0

பிரான்ஸ், Bobigny பகுதியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈழத்தமிழ் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் அளிக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து...

புதிய தாதியர் நியமனங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

புதிய தாதியர் நியமனங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

by selvan
May 31, 2026
0

இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் மேலும் 2,867 புதிய தாதியர் நியமனங்கள் வழங்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி