உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சிறப்பாக இடம்பெற்ற செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழா.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, மக்கள் வெள்ளத்தில் மிகச் சிறப்பாக பக்திப் பரவசத்துடனும் நடைபெற்றது.

இன்று (26) அதிகாலை 6:00 மணியளவில் திருச்செபமாலையுடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து, மாலை 6:30 மணியளவில் செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய அருட்பணி சபையினரின் சிறப்பில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆரம்பமானது.

திருப்பலியின் தொடக்கத்தில், வருகை தந்த அருட்தந்தையர்களுக்கு அருட்பணி சபையினரால் மாலை அணிவித்து ஆலய திருப்பீடத்திற்கு பக்திபூர்வமாக அழைத்து வரப்பட்டனர்.

இவ்விழாத் திருப்பலியானது, அமலமரித்தியாகிகள் சபையின் வடமாகாண முதல்வர், வணக்கத்திற்குரிய பிதா அருட்பணி ஜெயந்தன் பச்சேக் அடிகளாரின் தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கடற்கரை நோக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தேர் பவனி
திருப்பலியின் நிறைவாக, புனித பிலிப்பு நேரியாரின் திருச்சொரூபம் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திரண்டிருந்த மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் தேர் பவனி ஆரம்பமானது.

பக்தர்களின் பக்திப் பரவசக் கோஷங்களுக்கு மத்தியில், செம்பியன்பற்று வடக்கு கடற்கரை பகுதியை நோக்கி தேர் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த தேர் பவனியின் போது தேருக்கு முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்துச் சென்றது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு காட்சியாக அமைந்திருந்தது. பவனியின் இறுதியில் புனிதரின் திருவருள் ஆசீர்வாதம் மக்களுக்கு வழங்கப்பட்டது.

பிரமுகர்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் பங்கேற்பு
இவ்விழாவில் செம்பியன்பற்று பங்கின் மைந்தர்கள், அயல் பங்குத் தந்தையர்கள், செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்பணி ஜஸ்டின் ஆதர், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், அரசியல் பிரமுகர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் இதில் பங்கேற்றனர்.

இவ்வாண்டு திருவிழா திருப்பலியைக் கண்டு ஆசிபெற நாட்டின் பல பாகங்களிலிருந்தும், புலம் பெயர் நாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தமை இப்பகுதியின் ஆன்மீக எழுச்சியைக் காட்டுவதாக அமைந்திருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

34 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0