தமிழக முதலமைச்சர் விஜயை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பு கருத்துத் தெரிவிக்கையில்,
தனது தம்பியை முதலமைச்சராகப் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது எனக் குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இன்றைய தினம் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நாங்கள் முதலமைச்சரைச் சந்தித்தோம்.
இதன்போது எங்கள் தயாரிப்பாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருமாறு அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
அதற்காகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது” என்று கூறினார்.
திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் பட்ட கஷ்டங்களை இன்னும் மறக்கவில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த குற்றங்களை எவராலும் வெறும் பத்து நாட்களில் சரிசெய்துவிட முடியாது.
இதனை முதலமைச்சர் விஜய் இனிமேல்தான் சரிப்படுத்துவார் என்ற நம்பிக்கை மக்கள் அனைவருக்கும் உள்ளது” என்றும் குஷ்பு தெரிவித்தார்.










