36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான மாவட்ட மட்ட பூப்பந்து (Badminton) போட்டிகள் நேற்றையதினம் (10/05/2026) ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் உள்ளக விளையாட்டரங்கில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
யாழ். மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த சிறந்த வீரர்கள் பங்கேற்ற இப்போட்டிகளில், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி முக்கிய இடங்களைக் கைப்பற்றினர்.
ஆண்கள் பிரிவு முடிவுகள்
ஆண்களுக்கான தனிநபர் பிரிவில் நல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்த வீரர்கள் முதல் இரண்டு இடங்களைப் பகிர்ந்து கொண்டனர்:
முதலாம் இடம்: M. அன்ரன்வவீசன் (நல்லூர்), இரண்டாம் இடம்: K. லிஜிந்தன் (நல்லூர்), மூன்றாம் இடம்: S. றமநீதன் (கரவெட்டி)
பெண்கள் பிரிவு முடிவுகள்
பெண்களுக்கான பிரிவிலும் நல்லூர் பிரதேச வீராங்கனைகள் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.
முதலாம் இடம்: S. சங்கவி (நல்லூர்), இரண்டாம் இடம்: R. றாகவி (பருத்தித்துறை), மூன்றாம் இடம்: Y. கீர்த்தனா (நல்லூர்) வெற்றி பெற்றனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடங்களைக் கைப்பற்றிய வீரர்கள், அடுத்து நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிகளில் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.












