• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

யாழ் மாவட்ட கல்வியை சிதைப்பதற்கு தீவிர முயற்சி – ஆளுநரும் உடந்தை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு.!

Mathavi by Mathavi
May 10, 2026
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
யாழ் மாவட்ட கல்வியை சிதைப்பதற்கு தீவிர முயற்சி – ஆளுநரும் உடந்தை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு.!
Share on FacebookShare on Twitter

யாழ் மாவட்ட கல்வியை சிதைப்பது மட்டுமல்லாது வட மாகாண கல்வியை முழுமையாக சிதைக்கும் நிகழ்ச்சி நிரலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதற்கு வடமாகாண ஆளுநர் உடந்தையாக இருக்கிறார் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு ஆசிரியர் இடமாற்றத்தில் பல முறைகேடுகள் இடம்பெற்ற நிலையில் அது தொடர்பில் நீதிமன்றங்களிலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

அண்மையில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றம் முறைகேடாக மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டி இடைக்கால தடையையும் விதித்தது.

அதன் பின்னர் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் மேன்முறையீடுகளை பரிசீலிப்பதாக ஆணைகுழுக்கு வழங்கிய உறுதிப்பாட்டினை அடுத்து இடைக்கால தடை நீக்கப்பட்டு தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருகிறது.

அவ்வாறான நிலையில் தற்போது மேன்முறையீட்டை பரிசீலிக்கிறோம் என்ற போர்வையில் முறையற்ற இடமாற்றங்களை ஆசிரியர்களுக்கு வழங்குவது ஏற்க முடியாது.

யாழ் மாவட்டத்தில் ஆங்கில மொழி மூலம் இரசாயனவியல் பாடத்தை 30 பாட வேளை கற்பிக்கின்ற ஆசிரியர் தனது இடமாற்றத்தில் வெளி மாவட்டத்தை இரண்டு வருடங்கள் ஒத்திவைக்குமாறு கோரிக்கை முன்வைத்தார்.

அவரை தற்போது தென்மராட்சி நிலையத்தில் ஆங்கில மொழி மூலம் இரசாயனவியல் பாடமே இல்லாத வலயத்துக்கு இடமாற்றம் வழங்கியுள்ளார்கள்.

அண்மையில் இடம்பெற்ற உயர்தர பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானத்தில் யாழ் மாவட்டம் முதல் இடத்தை பிடித்த நிலையில் இதனை விரும்பாத தரப்பு யாழ் மாவட்ட கல்வியை அழிப்பதற்கான முயற்சியில் தொடங்கியுள்ளது.

யாழ் வலையத்தில் ஆங்கில மொழி மூலமாக இரசாயனவியல் பாடத்தை கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியரை என்ன தேவைக்காக பாடமே இல்லாத வலயத்துக்கு இடமாற்றம் வழங்குகிறார்கள்.

ஆசிரியர் இடமாற்றத்தை மேற்கொள்வதில் நாங்கள் எந்த இடையூறும் மேற்கொள்ளப் போவதில்லை. ஆனால் சேவையின் தேவை கருதி என முறையற்ற இடமாற்றத்தை மேற்கொள்வதை எம்மால் வேடிக்கை பார்க்க முடியாது.

அதேவேளை வெளி மாவட்ட மாணவர்கள் பாவம் ஆசிரிய இடமாற்றங்களை செய்வதில் எமது சங்கம் இடையூறு விளைவிப்பதாக சிலர் காட்ட முயல்கின்றனர்.

ஆசிரியர் இடமாற்றம் என்பது முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் மேற்கொள்ளும் எந்த ஒரு இடமாற்றத்தையும் நாம் தட்டிக் கேட்க தயங்க போவதில்லை.

யாழ் மாவட்டத்தின் கல்வியை அழிப்பதற்கு திரை மறைவில் பாரிய சதியொன்று இடம்பெற்று வருகிறது. அதனை எல்லோரும் அறிந்து கொள்வதோடு விழிப்பாகவும் இருக்க வேண்டும்.

எமது தமிழ் சமூகத்தின் கல்வி வளர்ச்சியை விரும்பாத தரப்பினர்கள் ஆசிரிய இடமாற்றங்களை முறையற்று வழங்கி மாணவர்களை கல்வியில் பின்னோக்கி நகர்த்துவதே திட்டம்.

அதற்காக உயர் பதவிகளை வகிக்க வேண்டும் என்பதற்காக சில அதிகாரிகள் துணை போவதும் ஆளுநர் ஒத்தாசை வழங்குவதும் எமது இனத்திற்கு கிடைத்த சாபமாக பார்க்கிறோம்.

மக்கள் தெளிவாக ஒன்றை விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது யாழ்ப்பாணத்தின் கல்வியையும் வடக்கு மாகாணத்தினுடைய கல்வியையும் சிதைப்பதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற முயற்சிக்கு ஆளுநரும் உடந்தையாக இருப்பது கவலை தருகிறது.

ஆகவே இதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை விரைவில் மேற்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு; பலர் கைது.!

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு; பலர் கைது.!

by Mathavi
May 10, 2026
0

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை (09) பொலிஸார் விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோது, 589 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 10, 2026
0

கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் உடுதும்பர, நிசருவ பகுதியில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் உந்துருளி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சுமார்...

யாழ்தேவி ரயில் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்.!

யாழ்தேவி ரயில் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்.!

by Mathavi
May 10, 2026
0

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ்தேவி ரயில் நாளை (11) முதல் மீண்டும் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, திங்கள், புதன் மற்றும்...

தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து.!

தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து.!

by Mathavi
May 10, 2026
0

பெலியத்த தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த - கசாகல இடையிலான பகுதியில் 154 ஆவது மைல்கல்லுக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற வாகன விபத்தில் 10...

புதிய தலைமுறையின் எதிர்பார்ப்பே இந்த வெற்றி.!

புதிய தலைமுறையின் எதிர்பார்ப்பே இந்த வெற்றி.!

by Mathavi
May 10, 2026
0

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ச.ஜோசப் விஜய்க்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது...

மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு.!

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 10, 2026
0

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில், நேற்று சனிக்கிழமை (09) சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் சுமார் 05 அடி 06 அங்குலம், குட்டையான தலைமுடி மற்றும் தாடி...

இரு குழுக்களுக்கு இடையே மோதல்; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி.!

இரு குழுக்களுக்கு இடையே மோதல்; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
May 10, 2026
0

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் நேற்றிரவு (09) இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி, யாழ்ப்பாணம், அனுராதபுரம், கொழும்பு...

விஜய்க்கு அநுர வாழ்த்துச் செய்தி.!

விஜய்க்கு அநுர வாழ்த்துச் செய்தி.!

by Mathavi
May 10, 2026
0

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ...

போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது.!

சொக்லேட் வடிவில் கடத்தப்பட்ட ‘ஹசீஸ்’ – இளைஞன் ஒருவர் கைது.!

by Mathavi
May 10, 2026
0

விமான நிலையத்தின் ஊடாகப் பாரியளவிலான 'ஹசீஸ்' போதைப்பொருளைக் கடத்தி வர முயன்ற கொழும்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால்...

மலையகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.!

மலையகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.!

by Mathavi
May 10, 2026
0

மலையக மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலைக்கு அறவழியில் எழும் மக்கள் எழுச்சியே நிலையான தீர்வைப் பெற்றுத்தரும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கண்டி மாவட்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி