• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

அலட்சியத்தால் உயிரிழந்த 5 வயது சிறுவன் – நீதிக்காகப் போராடும் குடும்பம்!

Bharathy by Bharathy
April 13, 2026
in உலக செய்திகள்
0
அலட்சியத்தால் உயிரிழந்த 5 வயது சிறுவன் – நீதிக்காகப் போராடும் குடும்பம்!
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையின் கடும் அலட்சியம் மற்றும் ஒருங்கிணைப்பு குறைபாடு காரணமாக, 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஐந்து வயதே ஆன சிறுவன் யூசுப் நசீர், சாதாரண டான்சிலைட்டிஸ்(Tonsillitis)) பாதிப்பால் அவதிப்பட்டு வந்தான். முறையான சிகிச்சைக்காக அவனது குடும்பத்தினர் பலமுறை மருத்துவ உதவியை, நாடியும், நான்கு வெவ்வேறு NHS அமைப்புகள் அவனது பராமரிப்பை ஒருங்கிணைக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுவாசக் கோளாறால் அவதிப்பட்ட யூசுப்பிற்கு உரிய நேரத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்படாததால், தொற்றின் தீவிரம் அதிகரித்து அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.’நாங்கள் ஒரு அழகான குழந்தையை இழந்திருக்கிறோம். இது மருத்துவ ரீதியாகத் தடுக்கப்பட வேண்டிய ஒரு மரணம். எங்களைப் போன்ற ஒரு இழப்பு இனி எந்தவொரு குடும்பத்திற்கும் ஏற்படக்கூடாது, ‘ என யூசுப்பின் குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தமது மகனின் மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மருத்துவ சேவையில் மாற்றத்தைக் கொண்டு வரக் கோரியும் அவர்கள் அயராது போராடி வருகின்றனர்.

இதனிடையே உயிரிழந்த சிறுவன் யூசுப்பின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த பிரித்தானிய சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting), அவர்களது விடாமுயற்சியைப் பாராட்டினார். ‘உங்கள் மகனுக்காக நீங்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம், NHS அமைப்பின் கலாச்சாரத்தையே மாற்றிக்கொண்டிருக்கிறது. நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த புதிய விழிப்புணர்வை இது ஏற்படுத்தியுள்ளது’ என்று அவர் உறுதியளித்தார்.

இதேவேளை, மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் இல்லாமை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் தாமதம் ஆகியவை யூசுப்பின் மரணத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்ததுடன் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், NHS-இல் நிர்வாக ரீதியான பாரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி சீனா புதிய சாதனை.

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி சீனா புதிய சாதனை.

by selvan
May 25, 2026
0

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி சீனா புதிய சாதனை படைத்ததுள்ளது. ஷென்சோ-23 (Shenzhou-23) என்ற விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை சீனா அனுப்பி உள்ளது. Shenzhou-23 திட்டம் சீன...

இராட்சத நச்சுத் தாங்கி வெடிக்கும் அபாயம் – 50 ஆயிரம் பொதுமக்கள் இடம்பெயர்வு!

by selvan
May 25, 2026
0

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், ஒரேன்ச் கவுண்டியில் (Orange County) உள்ள விண்வெளி உற்பத்தி ஆலையில் நச்சுத் தாங்கி ஒன்று வெடிக்கும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘மெத்தில் மெதக்ரிலேட்’...

ஹோர்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வதே சிறந்தது!

ஹோர்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வதே சிறந்தது!

by selvan
May 25, 2026
0

ஹோர்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வதே அமெரிக்காவிற்கு மிகச் சிறந்த தேர்வாகும் என ஈரானின் இராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei) தெரிவித்துள்ளார்.ஈரானின் செய்திச்...

உக்ரேனியப் படைகளுடன் இணைந்து பணியாற்றிய பிரித்தானிய வீரர் உயிரிழப்பு!

by selvan
May 25, 2026
0

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனியப் படைகளுடன் இணைந்து பணியாற்றிய பிரித்தானிய தன்னார்வப் போராளி ஒருவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.டெவோனைச் சேர்ந்த 23 வயதான அய்ர்டன் ரெட்ஃபியர்ன்...

பாகிஸ்தானில் இராணுவத்தினர் பயணித்த புகையிரதம் மீது குண்டுத் தாக்குதல்; பலர் உயிரிழப்பு.!

பாகிஸ்தானில் இராணுவத்தினர் பயணித்த புகையிரதம் மீது குண்டுத் தாக்குதல்; பலர் உயிரிழப்பு.!

by Mathavi
May 24, 2026
0

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில், இராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயணித்த விசேட புகையிரதம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 24...

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு.!

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு.!

by Mathavi
May 24, 2026
0

அமெரிக்க நேரப்படி நேற்று (23) மாலை 6 மணியளவில் வெள்ளை மாளிகைக்கு அருகே வந்த நபர் ஒருவர், பாதுகாப்பு அதிகாரிகளை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்....

80 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல் வாழ் வேட்டை விலங்கு கண்டுபிடிப்பு!

80 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல் வாழ் வேட்டை விலங்கு கண்டுபிடிப்பு!

by selvan
May 23, 2026
0

அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் புதைபடிவங்கள் மூலம், ஒரு பிரம்மாண்ட கடல் வேட்டை விலங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.இதற்கு விஞ்ஞானிகள் 'டைலோசாரஸ் ரெக்ஸ்' (Tylosaurus rex)...

மிஸ் வெனிசுவேலா அழகி மீது தாக்குதல்!

மிஸ் வெனிசுவேலா அழகி மீது தாக்குதல்!

by selvan
May 23, 2026
0

பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் (2026) பங்கேற்க வந்திருந்த மிஸ் வெனிசுவேலா அழகி ஆண்ட்ரியா டெல் வால் ஒப்பனையாளரால் தாக்காப்பட்டுள்ளார். தான் தங்கியிருந்த உணவகத்தின்...

பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

by selvan
May 23, 2026
0

பிரித்தானியாவின் நார்ஃபோக் (Norfolk) பிராந்தியத்தில், சிறுமிகளைக் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 7 இளைஞர்கள் மீது 40 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்...

அமெரிக்க புலனாய்வு பிரிவின் பிரதானி இராஜினாமா!

by selvan
May 23, 2026
0

அமெரிக்காவின் புலனாய்வு பிரிவின் பிரதானி துல்சி கப்பார்ட் (Tulsi Gabbard) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது கணவரின் நோய் நிலைமை காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி