அமெரிக்க விண்வெளிக் கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோவுடன் இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் அக்ஸ் – 4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பியது.
இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு சென்றுள்ளார். இவருடன் 3 விண்வெளி வீரர்கள் சென்றுள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் ட்ராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்பக் கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், ஆக்சியம் 4 திட்டம் நேற்று வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது.
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் நேற்று விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டனர். புளோரிடாவில் இருந்து பால்கன் – 9 மூலம் ட்ராகன் விண்கலத்தில் நால்வரும் விண்வெளிக்கு பயணித்தனர்.
இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற ட்ராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட குழு சரியாக 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் விண்வெளி வீரர்கள் சென்றனர். அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஹூ சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களான அமெரிக்காவின் பெக்கி விட்சன், சுபான்ஷூ சுக்லா, ஹங்கேரியின் திபோர், போலந்தின் ஸ்லாவேஜ் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.










