• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

Mathavi by Mathavi
June 21, 2025
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள்
0
கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டம் ஆரம்பித்து வைப்பு.!
Share on FacebookShare on Twitter

கடந்த காலங்களில் அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியதாகவும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லையென்று பல விடயங்களை எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருந்தார்கள். இன்று நாங்கள் அந்த விமர்சனங்களையும் தாண்டி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

“கிராமிய பாதை அபிவிருத்தி திட்டம்” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டமானது இன்றைய (21)தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் கும்பிலாமடு வீதியினை கான்கிரீட் ரீதியாக மாற்றும் வேலை திட்டம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்த வகையில் வீதியின் ஆரம்ப வேலைகளை ஆரம்பிக்கும் முகமாக வீதிக்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு கிராம அபிவிருத்தி சங்க ஒத்துழைப்புடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டது.

615 மீட்டர் நீளம் கொண்ட இந்த வீதியானது 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மூன்று மாத செயற்பட்டமாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்ததுடன் இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.ஜே.முரளிதரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.சிவப்பிரியா, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் பி.பரதன், தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் திலகநாதன், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி தலைவியும் மாநகர சபை உறுப்பினருமான வனிதா, திணைக்கள அதிகாரிகள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு,

பாதைகள் மற்றும் பாலங்கள் அமைப்பது தொடர்பில் எங்களது முதலாவது கன்னி வரவு செலவுத் திட்டத்தில் இந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக 14 பில்லியன் ரூபாய்களை நாங்கள் ஒதுக்கீடு செய்திருக்கின்றோம். அதன் ஊடாக பல ஆயிரம் வீதிகளை அமைப்பதற்காக குறிப்பாக கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக முன்னாயத்தம் மேற்கொண்டு இருக்கின்றோம்.

அதேபோன்று இன்றைய தினம் எமது வீதி அபிவிருத்தி அமைச்சின் விமல் ரத்நாயக்க அவர்களின் தலைமையின் கீழ் இன்று முதலாவது வேலை திட்டமாக நாடு பூராகவும் இந்த வேலை திட்டத்தினை இன்றைய தினம் ஆரம்பித்து வைத்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட இந்த வீதியினை முதலாவதாக ஆரம்பிப்பதற்காக வேலைகளை முன்னெடுத்திருந்தோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 14 வீதிகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. அதற்கான எதிர்கால வேலைத் திட்டங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மேற்கொண்டு இருக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் நாங்கள் பல வாக்குறுதிகளை வழங்கியதாகவும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று பல விடயங்களை எதிர்க்கட்சியினரும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருந்தார்கள். இன்று நாங்கள் அந்த விமர்சனங்களையும் தாண்டி நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம்.

அந்த அடிப்படையில் கிராமிய வீதிகளை கிராமப்புற மக்கள் எதிர்நோக்குகின்ற வீதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக இந்த திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம். இன்னும் பல விடயங்களை நாங்கள் செயல்படுத்த தயாராக இருக்கின்றோம். வீதி தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இந்த மூன்று வருட காலப்பகுதிக்குள் நாங்கள் அனைத்து வீதிகளையும் புனரமைப்பதற்கும் வீதிகளை அமைப்பதற்காகவும் நாங்கள் வேலைகளை மேற்கொண்டு இருக்கின்றோம்.

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி நிதிகளை நாங்கள் கோரி இருக்கின்றோம். அதனூடாக கூட இந்த வீதிகளை செப்பனிடுவதற்கு விதிகளை அமைப்பதற்கான பாலங்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றோம்.

அரசாங்கம் என்கின்ற செய்தியில் ஜனாதிபதி அவர்கள் கடந்த காலங்களில் அவரது செயற்பாடுகள் மூலமாக மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு பெற்ற ஜனாதிபதியாக இருந்திருக்கின்றார். மக்களின் ஒரு பிரதிநிதியாக மக்களின் ஆதரவை பெற்ற ஒரு ஜனாதிபதியாகவும் அவர் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார். ஆகவே மக்கள் நலம் சார்ந்ததாக இந்த தேசிய மக்கள் சக்தி செயற்பட்டு கொண்டிருக்கின்றது.

உங்களது தேவைகளை நாங்கள் அறிந்து அதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு இருக்கின்றோம். ஆகவே இவ்வாறான வேலைத் திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்த உங்களது ஆதரவு தேவை அதேபோன்று இந்த நாட்டின் மறுமலர்ச்சிக்காகவும் இந்த நாட்டை செழிப்பாக மாற்றி அமைப்பதற்கான ஒரு முயற்சியாகவும் முதல் கட்டமாக இந்த விடயங்களை செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆகவே இந்த நிகழ்வு இன்றிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது இந்த புதிய காலத்திற்குள் இந்த வீதிகள் அனைத்தும் பூரணப்படுத்தப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Related Posts

தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம்; ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனிடம் தீவிர விசாரணை.!

தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம்; ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனிடம் தீவிர விசாரணை.!

by Mathavi
May 30, 2026
0

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு ஊடகங்களில் வெளியானமை தொடர்பில், ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனிடம் முல்லைத்தீவு பொலிஸார் நேற்றையதினம் (29) மீண்டும்...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

by selvan
May 30, 2026
0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், பெருமளவிலான 'குஷ்' போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

ஹட்டன் ஸ்ரீ நிக்கோதாராமய விகாரையில் விசேட நிகழ்வு.!

ஹட்டன் ஸ்ரீ நிக்கோதாராமய விகாரையில் விசேட நிகழ்வு.!

by Mathavi
May 30, 2026
0

2570 வருடத்தை யொட்டியும் வெசாக் பௌர்ணமி தினத்தன்று இன்று காலை முதல் சம் புத்த பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதன்போது அங்கு ஸ்ரீ நிக்கோதாராமய விகாரையின்...

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

by Mathavi
May 30, 2026
0

நெல்லியடி - பருத்தித்துறை பிரதான வீதியில், ரூபின்ஸ் வைத்தியசாலைக்கு அருகில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக...

சத்திர சிகிச்சைக்கு உதவி கோரும் முன்னாள் போராளிகளை கொச்சைப்படுத்தாதீர்கள்.!

சத்திர சிகிச்சைக்கு உதவி கோரும் முன்னாள் போராளிகளை கொச்சைப்படுத்தாதீர்கள்.!

by Mathavi
May 30, 2026
0

"சத்திர சிகிச்சைக்காக உதவி கோரும் முன்னாள் போராளிகளுக்கு உங்களால் உதவ முடியாவிட்டாலும், தயவுசெய்து அவர்களைக் கொச்சைப்படுத்தி உபத்திரம் செய்யாதீர்கள்" என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய...

தமிழ் இனப் படுகொ*லை எங்கும் இடம்பெறவில்லை.!

தமிழ் இனப் படுகொ*லை எங்கும் இடம்பெறவில்லை.!

by Mathavi
May 30, 2026
0

"இலங்கையில் எக்காலத்திலும், எந்தவொரு இடத்திலும் எவ்விதமான தமிழ் இனப்படுகொலையும் இடம்பெறவில்லை என்பதில் சர்வஜன அதிகாரம் கட்சி மிக உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றது. அண்மைக்காலமாக வடக்கில் இவ்வாறான கருத்துகள்...

புயலுக்கும் அசையாத பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதே இலக்கு.!

புயலுக்கும் அசையாத பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதே இலக்கு.!

by Mathavi
May 30, 2026
0

"தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது எப்படியாவது ஐந்து வருட காலத்தைக் கடந்து செல்வதற்காக அல்ல. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படக்கூடிய எந்தவொரு பொருளாதார நெருக்கடிக்கும் வலுவாக முகம் கொடுத்து...

சமூக ஊடகத் தகவல்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்.!

சமூக ஊடகத் தகவல்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்.!

by Mathavi
May 30, 2026
0

"சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களின் உண்மைத்தன்மையையும், அதன் பின்னணியையும் தீர்க்கமாக ஆராய்ந்த பின்னரே அவற்றுக்கு விருப்பம் தெரிவிக்கவோ அல்லது பகிரவோ வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும்...

சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்ட நபர் சிக்கினார்.!

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 30, 2026
0

மஹபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடுபல வீதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (29) வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டபோது பெருமளவிலான சட்டவிரோத...

கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!

கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 30, 2026
0

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி