• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 31, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தாயகம் திரும்பிய 75 வயது முதியவர் சிறையில் அடைப்பு..!

admin by admin
May 30, 2025
in இலங்கை செய்திகள்.
0
தாயகம் திரும்பிய 75 வயது முதியவர் சிறையில் அடைப்பு..!
Share on FacebookShare on Twitter

போர்க் காலத்தில் உயிரைக் காக்க இலங்கையில் இருந்து தமிழகத்துக்குத் தப்பிச் சென்ற முதியவர், சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியமைக்காக ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

1987 ஆம் ஆண்டு தாயகத்தில் இருந்து உயிர் தப்பி தமிழகத்துக்கு அகதியாகச் சென்றவர் முதுமையில் நாடு திரும்பியபோது சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சின்னையா சிவலோகநாதன் எனும் யாழ். ஏழாலையைச் சேர்ந்த 75 வயது முதியவரே இவ்வாறு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் முற்படுத்தப்பட்ட சந்தேகநபர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் 5 சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

இதன்போது 1997 ஆம் ஆண்டு ஏழாலையில் இருந்து மன்னார் சென்று அங்கிருந்து 12 ஆயிரம் ரூபா படகுக்குச் செலுத்தி சட்டவிரோதமாக கடல் வழியாகவே சந்தேகநபர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார். இருந்தபோதும் இந்தக் காலத்தில் சட்டபூர்வமாகப் பயணிக்கும் வாய்ப்பும் இருந்தமையால் இவர் எதற்காகச் சட்டவிரோதமாக பயணித்தார் என்பது தொடர்பில், தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதனால் சந்தேகநபரைப் பிணையில் விடுவிக்காது விளக்கமறியலில் வைக்க வேண்டும் எனக் கேட்டு குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் 45/01 கீழ் குற்றம் சாட்டப்படுவதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், “இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக உயிரைக் காக்கும் நோக்கில் இலட்சக்கணக்கானோர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றபோது இந்த நபர் 1987 ஆம் ஆண்டு தமிழகத்துக்குச் தப்பிச் சென்றார்.

இவர் தமிழகத்தின் திருவண்ணாமலைப் பகுதியில் கண்ணகிபுரம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி வாழ்ந்து தற்போது ஏழாலையில் வசிக்கும் தனது மகனுடன் முதுமைக் காலத்தில் வாழ்வதற்காக உரிய முறைகளின் கீழ் விண்ணப்பித்து சட்டபூர்வமாக நாடு திரும்பினார்.

முகாமில் அகதியாக வாழ்ந்தார் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகம் வழங்கிய (யு.என்.எச்.சி.ஆர்.) பதிவுச் சான்றிதழ், இலங்கை திரும்ப தமிழ்நாடு பொலிஸுக்குத் செய்த விண்ணப்பம், அதற்கு தமிழ்நாடு பொலிஸார் அவர் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என வழங்கிய சான்றிதழ்களுடன், சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு விண்ணப்பித்து இலங்கை திரும்புவதற்காகப் பெற்றுக்கொண்ட பிரயாண அனுமதி ஆகியவற்றைச் சரி பார்த்து ஐ. நா. அமைப்பே இலவச விமானச் சிட்டையையும் வழங்கியது. அவற்றின் பிரதிகள் மன்றுக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே, குற்றஞ்சாட்டப்படுபவரை முழுமையாக விடுவிக்க வேண்டும்.

இலங்கை அகதிகள் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் தமிழகத்தில் இருப்பது உலகின் சகல நாடுகளுக்கும் தெரியும். ஆனால் இலங்கைப் பொலிஸாருக்குத் தெரியாமல் இருப்பது வேடிக்கையானது. அகதி என்றால் அவர் சொல்லாமல்தான் போவார். அவரை அகதியாக ஏற்றுக்கொண்டால் அவர் பயணித்தமை குற்றமாகாது. அது மட்டுமல்ல ஒரு குற்றவியல் நடவடிக்கையாக இருந்தால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்குள் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். இங்கே 30 வருடங்கள் கடந்துவிட்டன.

இதேநேரம் இலங்கையில் இருந்து அகிகளாகச் சென்றவர்கள் நாடு திரும்ப வேண்டும் என அரசு உத்தியோகபூர்வமாக அழைக்கின்றது ஆனால், திரும்பியவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதற்குக் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டி வரும். தப்ப முடியாது.

இதேநேரம் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் சட்டப் பிரிவு 45/01 இன் கீழ் வழக்குத் தாக்கல் செய்தால் நீதிவான் 47/ஏ பிரிவின் கீழ் பிணை வழங்க முடியும். அதனால் முழுமையாக விடுவிக்க முடியாத பட்சத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவரைப் பிணையில் விடுவிக்க வேண்டும்” என்றார்.

இவற்றை ஆராய்ந்த மல்லாகம் நீதிவான் ஜே.சுபராஜினி சந்தேகநபரை எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related Posts

எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்!

எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்!

by selvan
May 30, 2026
0

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒட்டோ டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 407...

தொலைபேசிக்காக தனது சகோதரியை கொலை செய்த சிறுவன்! – ஏறாவூரில் சம்பவம்

தொலைபேசிக்காக தனது சகோதரியை கொலை செய்த சிறுவன்! – ஏறாவூரில் சம்பவம்

by selvan
May 30, 2026
0

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த 11 வயது சகோதரி வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தர மறுத்த காரணத்தால் அவரை கழுத்தை நெரித்து கொலை...

ஹம்பாந்தோட்டையில் கடலில் நீராடச் சென்ற 3 மாணவர்கள் மாயம்!

ஹம்பாந்தோட்டையில் கடலில் நீராடச் சென்ற 3 மாணவர்கள் மாயம்!

by selvan
May 30, 2026
0

ஹம்பாந்தோட்டை, ஹுங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடச் சென்ற 3 பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,bஅவர்களை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியா வழக்கின் கொ*லையாளி ஜெயக்குமாரின் சடலம் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது

வித்தியா வழக்கின் கொ*லையாளி ஜெயக்குமாரின் சடலம் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது

by selvan
May 30, 2026
0

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யாவின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமாரின் இறுதி கிரியை இன்று நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கோம்பையன் இந்துமயானத்தில்,...

மஸ்கெலியாவில் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன

மஸ்கெலியாவில் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன

by selvan
May 30, 2026
0

மஸ்கெலியாவில் இன்றைய தினம் சிறப்பு வெசாக் ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2570 வது வைசாத்தி மங்கள்ய வருடத்தை முன்னிட்டு சுமனாராம விகாரையின் பௌத்த மத குரு தப்போவன...

தமது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி தையிட்டியில் போராட்டம்!

தமது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி தையிட்டியில் போராட்டம்!

by selvan
May 30, 2026
0

யாழ். தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அமைந்துள்ள தங்களது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி, நேற்றும் இன்றும் காணி உரிமையாளர்கள் தொடர்...

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக இருவருக்கு சுமந்திரன் நிதியுதவி

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக இருவருக்கு சுமந்திரன் நிதியுதவி

by selvan
May 30, 2026
0

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி கோரியிருந்த முன்னாள் போராளி எதிர்மன்னசிங்கம் கிரேசியனை, இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் நேரில்...

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

by selvan
May 30, 2026
0

இலங்கையின் பல பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோர வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கேகாலையின் ருவன்வெல்ல பொலிஸ்...

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

by selvan
May 30, 2026
0

இலங்கை இராணுவத்தின் 69ஆவது பதவி நிலை பிரதானியாக இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசேட உயர் பதவி நியமனமானது...

தையிட்டி விகாரையை படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது.!

தையிட்டி விகாரையை படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது.!

by Mathavi
May 30, 2026
0

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை பலாலி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி