• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 30, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இயற்கையுடன் கூடிய பயிற்சி நிலையம் அமைக்கும் செயற்திட்ட முன்மொழிவு.!

Mathavi by Mathavi
April 22, 2025
in இலங்கை செய்திகள், மட்டக்களப்பு செய்திகள்
0 0
0
இயற்கையுடன் கூடிய பயிற்சி நிலையம் அமைக்கும் செயற்திட்ட முன்மொழிவு.!
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாந்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள தொழுநோய் வைத்தியசாலை நடவடிக்கைகள் நிறைவுற்றுள்ள நிலையில் அப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தொகுதி மற்றும் வளாகத்தினை தற்போதைய நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு அதிகரித்தி வரும் மனநிலை ரீதியான பிரச்சினைகளைக் குறைக்கும் முகமாக இயற்கையுடன் கூடிய பயிற்சி நிலையம் ஒன்றை அமைக்கும் விதமான செயற்திட்ட முன்மொழிவு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிமனையினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த திட்ட முன்மொழிவு மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்வரும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய தினம் சுகாதார சேவை பணிமனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை வெளிப்படுத்தியிருந்தார்.

ADVERTISEMENT

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் மற்றும் துறைத்தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்தின் இணைப்பாளர் டாக்டர் அச்சுதன் மற்றும் திணைக்களத்தின் துறைப்பொறுப்பாளர் வைத்தியர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் தற்போது மக்களுக்கு முன்னெடுக்கப்பட்டுவரும் சேவைகள் அதனை பொதுமக்கள் பயன்படுத்தவேண்டிய அவசியங்கள் குறித்தும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

அத்துடன் மாவட்டத்தின் சுகாதார செயற்பாடுகள் மற்றும் பொதுச்சுகாதார செயற்பாடுகள் குறித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன் அவற்றினை மக்கள் மயப்படுத்துவதற்காக ஊடகவியலளார்கள் முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள் குறித்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இதன்போது சுகாதார துறையுடன் இணைந்து பணியாற்றும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையில் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த பிராந்திய சுகாதார பணிப்பாளர் முரளீஸ்வரன்,

மதுபாவனை புனர்வாழ்வு நிலையம், தற்கொலை தொடர்பான விழிப்புனர்வு மையம், மனநலம் சார்ந்த தொடர்பு மையம், பாலியல் ரீதியான விழிப்புனர்வு மையம், பிச்சைக்காரர்களுக்கான மறுவாழ்வு ஏற்பாடுகள், விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான தேவை நிலையம் என்பன அமைக்கப்பட்டுள்ளது. சில நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

கர்ப்பினித் தாய்மாருக்கான அனீமியா பிரச்சினைக்காக வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் நடும் செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளோம். இது பொருளாதர ரீதியிலும் ஒரு நிலையை ஏற்படுத்தும் விதமாக அமையும்.

பாடசாலை மாணவர்களிடையே வயதினை விட அதிக உடற்பருமன் கொண்டுள்ள விடயம் தொடர்பில் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

புற்றுநோய் பிரச்சினைக்கான விசேட ஏற்பாடுகள், இதற்காக ஆலய திருவிழாக்களில் பொலித்தீன் பாவனைகளைக் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம். அது தொடர்பில் அதிகளவான இறுக்கத்தைக் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

தலசீமியா பிரச்சினை அதிகளவாக இருக்கின்றது. சுமார் 200 பிள்ளைகள் இருக்கின்றனர். ஐ.எம்.எச்.ஓ என்ற நிறுவனத்தின் ஊடாக ஆரையம்பதியில் உருவாக்கியுள்ளோம். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலையின் உதவியுடன் இதனை முன்னெடுத்து வருகின்றோம். இன்னும் அதிகமானவர்களுக்கு இனந்தெரியாமல் குறித்த தலசீமியா பிரச்சினை இருக்கும் என்ற சந்தேகம் நிலவுகின்றது. இதன் காரணமாக தற்போது பாடசாலை மாணவர்கள் ரீதியில் இரத்தப் பரிசோதனை செய்து வருகின்றோம். இதன்மூலம் கூடிய வகையில் இதனை இனம்கண்டு குறைத்துக் கொள்ள முடியும்.

இலங்கையில் தொழுநோயில் மட்டக்களப்பு இரண்டு அல்லது மூன்றாவது நிலையில் உள்ளது. இதற்கான நிலையத்தினை முன்முரமாக செயற்படுத்தி வருகின்றோம். காவேரி அமைப்பு இதற்கான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது.

இது தவிர டெங்கு மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற விடயங்களும் எம்மால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பிலுள்ள பிரதான பாடசாலைகள் அனைத்திலும் டெங்கு நிலை அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலைமைகளை குறைக்க வேண்டும்.

டெங்கு மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் பாடசாலை ரீதியில் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.டெங்கு கட்டுப்பாடு தொடர்பில் கழகங்களின் ஒத்துழைப்புகளை நாங்கள் மிகவும் எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.

தற்கொலைகள் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டம் தற்கொலையில் இரண்டாவது நிலையில் உள்ளது. இதனை தடுக்கும் வகையிலான வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. வைத்தியசாலைகள் தோறும் மனநோய் தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கான தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் மனரீதியாக பாதிக்கப்படுபவர்கள் தமக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மனரீதியான தாக்கங்கள் காரணமாக பாடசாலை இடைவிலகல்களும் அதிகரிக்கும் நிலை காணப்படுவதுடன் இளம் வயது திருமணங்களும் அதிகரிக்கும் நிலைமையும் காணப்படுகின்றன. இவற்றினை கட்டுப்படுத்துவதற்கு பாடசாலை ரீதியாகவும் மருத்துவ சோதனைகளும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Mathavi

Mathavi

Related Posts

விசேட அதிரடிப் படையினரால் முற்றுகையிடப்பட்ட பிள்ளையானின் அலுவலகம்.!

விசேட அதிரடிப் படையினரால் முற்றுகையிடப்பட்ட பிள்ளையானின் அலுவலகம்.!

by Mathavi
May 30, 2025
0

முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அலுவலகம் இன்று (30.05.2025) கொழும்பில் இருந்து வந்த குற்றத் தடுப்பு புலனாய்வு மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது,...

வெட்டுக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்பு.!

வெட்டுக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 30, 2025
0

அம்பாறை மாவட்டம் கல்முனை, பெரியநீலாவணையில் இன்று (30) காலை வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 37 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பெரியநீலாவணை...

சீரற்ற காலநிலை காரணமாக 28 குடும்பங்கள் இடம்பெயர்வு.!

சீரற்ற காலநிலை காரணமாக 28 குடும்பங்கள் இடம்பெயர்வு.!

by Mathavi
May 30, 2025
0

நானுஓயாவில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இதுவரை 28குடும்பங்களை சேர்ந்த 120 பேர் தற்காலிகமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்படுள்ளனர்....

ஞானச்சுடர் 329ஆவது மலர் வெளியீடும், உதவிகளும்.!

ஞானச்சுடர் 329ஆவது மலர் வெளியீடும், உதவிகளும்.!

by Mathavi
May 30, 2025
0

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் ஆன்மீக சஞ்சிகை 329 வது இதழ் வெளியீடு இன்று காலை சந்நிதியான் ஆச்சிரமத்தில் சந்நிதியான் ஆச்சிரம...

பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிக்குடியின் 5 ஆய்வு முன்மொழிவுகள் விஞ்ஞான ஆராய்ச்சி மாநாட்டில் தெரிவு.!

பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிக்குடியின் 5 ஆய்வு முன்மொழிவுகள் விஞ்ஞான ஆராய்ச்சி மாநாட்டில் தெரிவு.!

by Mathavi
May 30, 2025
0

தேசிய விஞ்ஞான நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடாத்திய முதலாவது பாடசாலை விஞ்ஞான ஆராய்ச்சி மாநாட்டில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை...

தமிழரசுக் கட்சியின் திருமலை மாவட்ட உறுப்பினர்களுக்கான செயலமர்வு.!

தமிழரசுக் கட்சியின் திருமலை மாவட்ட உறுப்பினர்களுக்கான செயலமர்வு.!

by Mathavi
May 30, 2025
0

இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு திருக்கோணமலை மாவட்டத்தில் தெரிவாகிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் மூலம் கட்சி...

காணாமல்போன தாயைக் கண்டுபிடிக்க உதவுமாறு மகள் உருக்கமான கோரிக்கை..!

காணாமல்போன தாயைக் கண்டுபிடிக்க உதவுமாறு மகள் உருக்கமான கோரிக்கை..!

by Mathavi
May 30, 2025
0

தனது தாயரை கடந்த மாதம் 10 ம் திகதியிலிருந்து முல்லைத்தீவு செல்வபுரத்திலிருந்து காணவில்லை என்றும் தனது தாயாரை கண்டுபிடிக்க ஊடகங்கள் உதவ வேண்டும் என்று காணாமல் போனவரான...

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

by Mathavi
May 30, 2025
0

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்றையதினம் (29) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 2.00 மணிக்கு நிறைவடைந்தது....

தேனீ கொட்டியதில் 78 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு; ரவிகரன் எம்.பி உடனடி நடவடிக்கை.!

தேனீ கொட்டியதில் 78 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு; ரவிகரன் எம்.பி உடனடி நடவடிக்கை.!

by Mathavi
May 30, 2025
0

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் 30.05.2025 இன்று தேனீக்கொட்டிற்கு இலக்காகி 78 இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வன்னி...

Load More
Next Post
ஜே.வி.பியின் சர்வாதிகாரம் தொடர்கிறது; தமிழ் மக்கள் கூட்டணி துவண்டு விடாது சீறிப்பாயும்.!

ஜே.வி.பியின் சர்வாதிகாரம் தொடர்கிறது; தமிழ் மக்கள் கூட்டணி துவண்டு விடாது சீறிப்பாயும்.!

பார்சிலோனா ஓபன் தொடரில் சாம்பியன்: டாப் 10-ல் இடம் பிடித்தார் ஹோல்ஜர் ரூனே

பார்சிலோனா ஓபன் தொடரில் சாம்பியன்: டாப் 10-ல் இடம் பிடித்தார் ஹோல்ஜர் ரூனே

விமானப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பாதை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நடவடிக்கை.!

விமானப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பாதை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நடவடிக்கை.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி