யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கொடுக்குளாய் பகுதியில் இன்று (23) காலை புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவர்கள் ஓர் சுற்றி வளைப்பினை மேற்கொண்டு இருந்தனர்.
சுற்றி வளைப்பில் சுமார் 40 கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர்கள் தப்பி ஓடியதாக தெரிய வருகின்றது.
இது சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT