ஆழியவளை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினருக்கு கடந்த வருடம்(2024) வழங்கப்பட்ட 297000/- பெறுமதியான 15 இரட்டைவலைகள் பயனாளிகளுக்கு கொடுக்காமல் மோசடி செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் நிதியில் இருந்து 297000/-. ரூபா ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்திற்கு ஒதுக்கப்பட்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக 15 இரட்டைவலைகள் ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த வருடம் (2024) ஒப்படைக்கப்பட்ட வலைகளை ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் இரகசியமாக பெற்று பயனாளிகளுக்கு கொடுக்காமல் மோசடி செய்தது தற்பொழுது அம்பலமாகியுள்ளது.
வலைகளை பெற்றுக் கொண்ட பயனாளிகளின் விபரத்தை கோரி பிரதேச செயலகம் அனுப்பிய கடிதத்தின் பின்னரே குறித்த மோசடி வெளிப்பட்டுள்ளது.
ஆழியவளை கிராம சேவகரும் கடந்த வருடம் (2024) ஆழியவளை கடற்தொழிலாளர் சங்கத்தினரிடம் 297000/-.பெறுமதியான வலைகள் ஒப்படைக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார்.
ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகத்தினர் மக்களுக்கு தெரியாமல் பல இலட்சம் ரூபாய் கூட்டுறவு திணைக்களத்தில் கடனாக பெற்று தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தியமை சில நாட்களுக்கு முன்பு அம்பலமாகிய நிலை வலை மோசடி சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாரிய மோசடியில் ஈடுபட்ட ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க நிர்வாகம் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஆழியவளை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
