காட்டு யானை தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாத்தறை, கிரிந்த, அதகலவெல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
திஸ்ஸமஹாராமை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மீனவரே உயிரிழந்துள்ளார்.
இவர் மீன்பிடித் தொழிலுக்காக மேலும் இரண்டு நபர்களுடன் இணைந்து கிரிந்த துறைமுகத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது வீதியில் இருந்த காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.