• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 25, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ஈழத்தின் வலிகளை எழுத்தின் மூலம் வெளிப்படுத்திய ஆளுமையின் இறுதி நிகழ்வு இன்று.!

Mathavi by Mathavi
December 30, 2024
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
ஈழத்தின் வலிகளை எழுத்தின் மூலம் வெளிப்படுத்திய ஆளுமையின் இறுதி நிகழ்வு இன்று.!
Share on FacebookShare on Twitter

“ஈழத்தின் வலிகளை எழுத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்த பல்துறை ஆளுமைமிக்க மூத்த படைப்பாளியும் ஊடகவியலாளருமான நா.யோகேந்திரநாதன் (வயது 80) நேற்று பல கேள்விகளுடன் விடையின்றி இந்த மண்ணை விட்டுச் சென்றமை ஈழ இலக்கியத்துறைக்கு பெரும் இழப்பாகும். அவரின் இழப்பில் எமது ஆழ்ந்த துயரை அனைவருடனும் பகிர்ந்துகொள்கின்றோம்.” – இவ்வாறு யாழ். ஊடக அமையம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“யாழ்ப்பாணம், வடமராட்சி, கரணவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட நா.யோகேந்திரநாதன் கிளிநொச்சி – திருவையாறு தபாலகத்தின் உதவித் தபால் அதிபராகப் பணியாற்றியிருந்தார்.

ADVERTISEMENT

1960 களில் நிலம் புலம் சார்ந்து எழுத்தின் மூலம் ஈழ உலகை வடிவமைக்கும் இலக்கியத் துறைக்குள் அவர் பிரவேசித்தார்.

இலங்கை வானொலியில் நாடக எழுத்தாளராகப் பணியாற்றிய அவர், போர்க்காலத்தில் ‘புலிகளின் குரல்’ வானொலியில் நாடக எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் கடமையாற்றினார்.

உயிர்த்தெழுகை, உயிர் குடிக்கும் பறவைகள், சாம்பல் பறவைகள், காவல் வேலி போன்ற நாடகத் தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

கண்ணீர் மழலைகள், விடுதலை முழக்கம் உட்பட பல தொடர் நவீனங்களை எழுதிய அவர் பல நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் படைத்துள்ளார். போர்க் காலத்தில் பல வீதி நாடகங்களையும் உருவாக்கியிருந்தார்.

1993 இல் ஈழநாதம் நாளிதழ் வன்னிப் பிராந்தியத்துக்கான பதிப்பைத் தொடங்கியபோது 1995 வரை அதன் ஆசிரியராகவும், யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ‘புதுவிதி’ வார இதழின் கௌரவ ஆசிரியராகவும் பணியாற்றினார்.

யாழ்ப்பாணத்தில் வெளிவரும் பத்திரிகைகளில் சந்திரசேகர ஆசாத், யோகநாராயணன், விஷ்ணுபுத்திரன், அக்கினீஸ்வரன் என்ற புனைபெயர்களிலும் நா.யோகேந்திரநாதன் என்ற இயற்பெயரிலும் அரசியல் கட்டுரைகளை அவர் எழுதினார்.

சமூக ஒடுக்குமுறையை வெளிப்படுத்தும் விதமாக இடிபடும் இரும்புக் கோட்டைகள் என்ற நாவலையும் அவர் படைத்திருந்தார்.

அவர் எழுதிய 3 நாவல்கள் தேசிய ரீதியில் விருதுகளை வென்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இலங்கை வானொலியில் ஒலிப்பரப்பான காட்டு நிலா என்ற வானொலி நாடகம் நூலாக வெளியாகியிருந்தது.

தமிழ் மக்களின் விடுதலைப் போரை ஆவணமாக்கும் பெருமுயற்சியில் அளப்பரிய பங்காற்றிய அவர், போராட்ட வரலாற்றை மையமாகக் கொண்டு நீந்திக் கடந்த நெருப்பாறு, (முள்ளிக்குளத்திலிருந்து கிளிநொச்சி வரை), நீந்திக் கடந்த நெருப்பாறு (கிளிநொச்சியிலிருந்து புதுமாத்தளன் வரை), மரண மழையில் நீந்திக் கடந்த நெருப்பாறு போன்ற நாவல்களைப் படைத்திருந்தார்.

கடும் சுகயீனத்தால் பாதிக்கப்பட்டிருந்த வேளையிலும் ஆனையிறவை வெற்றிகொண்ட வரலாற்றை வெளிப்படுத்தும் விதமாக 39 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு என்ற நாவலை அண்மையில் வெளியிட்டிருந்தார்.

யோகேந்திரநாதன் படைப்புத்துறை தவிர்த்து கூத்துக் கலைஞராக, அரங்க நாடக நடிகராக, வீதி நாடகத் தயாரிப்பாளராக, வானொலி நாடக தயாரிப்பாளராக, குரல் வழங்குநராக, சிறந்த விமர்சகராக, பேச்சாளராக எனப் பல்துறை ஆளுமையாளராக மிளிர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடது சாரிக் கொள்கையை மாறாத பற்றுடன் தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றிய சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக அளப்பரிய பங்காற்றினார்.

இதனால் பல்வேறு இன்னல்களுக்கும் அவர் முகம் கொடுத்திருந்தார்.

தனது கனதியான படைப்புகள் மூலம் தமிழ்த் தேசிய எழுச்சிக்கு வலுச் சேர்த்த அவர், விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனால் மதிப்பளிக்கப்பட்டார்.

யாழ். ஊடக அமையம் தமிழ்த் தேசியத்தின் அர்ப்பணிப்பு மிக்க ஆளுமைகளை வாழ்நாளில் கௌரவிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் அவரின் ஊடக பணிக்காக விருது வழங்கிக் கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.” – என்றுள்ளது.

யோகேந்திரநாதனின் பூதவுடல் நீர்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நீர்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

Mathavi

Mathavi

Related Posts

திருகோணமலையில் எனது விவசாயக் காணியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் எனது விவசாயக் காணியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

by Mathavi
May 25, 2025
0

அரசாங்கத்திற்கு, இந்த நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு ஐந்து இலட்சம் மெற்றிக்தொன் அரிசி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எனவே நாட்டினுடைய நன்மை கருதியும் விவசாயிகளின் நன்மை கருதியும் அரசாங்கம் காணிகளை...

ஊழலில்லாத அபிவிருத்தி செயற்பாடுகளை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க உறுதிபூண வேண்டும்.!

ஊழலில்லாத அபிவிருத்தி செயற்பாடுகளை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க உறுதிபூண வேண்டும்.!

by Mathavi
May 25, 2025
0

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடனான நேரடி சந்திப்பு இன்று(25) அலரிமாளிகையில் நடைபெற்றது. குறித்த சந்திப்பில் ஐனாதிபதியும் தேசிய மக்கள் சக்தியின்...

கல்முனை மாநகரசபை தீ அணைப்பு பிரிவு ஊழியர் Masters Athletics போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்.!

கல்முனை மாநகரசபை தீ அணைப்பு பிரிவு ஊழியர் Masters Athletics போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்.!

by Mathavi
May 25, 2025
0

இலங்கையில் இடம்பெறும் Masters Athletics போட்டி இவ் ஆண்டிற்கான போட்டி கொழும்பு சுகததாச மைதானத்தில் 24,25ம் திகதிகளில் இடம்பெற்றது. இப் போட்டி நிகழ்ச்சியில் கல்முனை மாநகரசபை தீ...

கட்டைக்காட்டில் பொதுக் காணி சுவீகரிப்பு – சுமந்திரன் நேரடி விஜயம்.!

கட்டைக்காட்டில் பொதுக் காணி சுவீகரிப்பு – சுமந்திரன் நேரடி விஜயம்.!

by Mathavi
May 25, 2025
0

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் பொதுக் காணி ஒன்றை அத்துமீறி சுவீகரித்துள்ளமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குறித்த இடத்தை இன்று(25) நேரடியாக...

உயிலங்குளம் 542 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

உயிலங்குளம் 542 வது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

by Mathavi
May 25, 2025
0

மன்னார் உயிலங்குளம் 542 படைப் பிரிவின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 542 ஆவது படைப் பிரிவு அதிகாரி மேஜர்...

வெற்றிலைக்கேணியில் இலவச சட்ட ஆலோசனை முகாம்.!

வெற்றிலைக்கேணியில் இலவச சட்ட ஆலோசனை முகாம்.!

by Mathavi
May 25, 2025
0

2025.03.28 ஆம் திகதி அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி இல. 2430 இற்கமைய சுவீகரிக்கப்படவுள்ள நிலங்களை பாதுகாப்பதற்காக வெற்றிலைக்கேணியில் மக்களுக்கான நீதி அமைப்பினால் சட்ட ஆலோசனை முகாம் இன்று(25)...

அப்பாவி மக்களின் நில ஆக்கிரமிப்பு தொடர்பான இரு குறுந்திரைப்படங்கள் வெளியீடு.!

அப்பாவி மக்களின் நில ஆக்கிரமிப்பு தொடர்பான இரு குறுந்திரைப்படங்கள் வெளியீடு.!

by Mathavi
May 25, 2025
0

திருகோணமலை மாவட்ட மக்களின் நில அபகரிப்புக்களை எடுத்துக் காட்டும் வாழ்வியலுடன் தொடர்புடைய "சம்பூர் மின் உற்பத்தி நிலையம் முதல் சக்தியற்ற வாழ்க்கை" மற்றும் "திரியாயின் ஆத்திக்காடு" என்ற...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் நெருக்கடி.!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் நெருக்கடி.!

by Mathavi
May 25, 2025
0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு அந்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான பிரதிநிதிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிறைந்த சூழ்நிலை காரணமாக, அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு...

வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

by Mathavi
May 25, 2025
0

வல்வெட்டித்துறையில் வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை(24) உயிரிழந்துள்ளார். மாவடி சமரபாகுவைச் சேர்ந்த 60 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார்....

Load More
Next Post
இடை நிறுத்தப்பட்டிருந்த வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவு.!

இடை நிறுத்தப்பட்டிருந்த வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவு.!

ஜெனரல் சவேந்திர சில்வா ஓய்வு.!

ஜெனரல் சவேந்திர சில்வா ஓய்வு.!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்.!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி