• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 1, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

Mathavi by Mathavi
July 1, 2026
in இலங்கை செய்திகள்.
0
பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.!
Share on FacebookShare on Twitter

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (30) இடம்பெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்த நிகழ்வை, பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

இக்கலந்துரையாடலில் ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதேச மட்ட தலைவர்கள், கிறிஸ்தவ மதகுருமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, தற்காலத்தில் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டிய மிக முக்கிய பொதுச் சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து, கலந்துரையாடப்பட்டதுடன் அது தொடர்பில் பிராந்திய பணிப்பாளர் அவர்களினால் விளக்கக்காட்சிகள் (Presentations) மூலம் விளக்கமளிக்கப்பட்டது.

  • கல்முனை பிராந்தியத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துதல்.
  • தடுப்பூசி (Vaccination) ஏற்றல் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் காணப்படும் தேவையற்ற சந்தேகங்களை களைதல்.
  • முறையற்ற திண்மக் கழிவகற்றலினால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகளைத் தடுத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்.
  • பொதுமக்களுக்குக் கிடைக்கும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல்.
  • பிராந்தியத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என மிக முக்கிய விடயங்கள் குறித்து விளக்கமளித்த பணிப்பாளர், சமூக மாற்றத்தில் மதத் தலைவர்களின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றியும் விவரித்தார்.

மேலும், இது தொடர்பில் பொதுமக்களுக்கு தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை சமூக மட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்க, மக்களிடையே நம்பிக்கையும் மதிப்பும் பெற்றுள்ள மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். மதத் தலைவர்கள் மூலம் வழங்கப்படும் அறிவுரைகள் மக்களை எளிதில் சென்றடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த மதத் தலைவர்கள், பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி, மேற்கொள்ளப்படும் பொதுச் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்னெடுக்கும் சகல வேலைத்திட்டங்களுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கி செயல்பட, தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தனர்.

மேலும், பிராந்தியத்தின் பொதுச் சுகாதார நிலை குறித்து மிகவும் அக்கறையுடன், இத்தகையதொரு கலந்துரையாடலை ஒழுங்கு செய்தமைக்காக பணிப்பாளருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

கல்முனை பிராந்திய வரலாற்றில் சுகாதாரத் துறையினரும், சகல மதத் தலைவர்களும் ஒன்றிணைந்து மக்களுடைய பொதுச் சுகாதாரம் குறித்து கலந்துரையாடிருப்பது இதுவே முதன்முறையாகும். எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான சந்திப்புக்களை ஒழுங்கு செய்து, பிராந்திய மக்களின் பொதுச் சுகாதாரப் பிரச்சினைகளை கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வுகளை வழங்குவதெனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

மட்டக்களப்பில் தீப்பரவல் – பல உணவகங்கள் தீக்கிரை!

by selvan
July 1, 2026
0

மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள உணவகக் கடைத் தொகுதி ஒன்றில் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீப்பரவலில்...

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு.!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு.!

by Mathavi
July 1, 2026
0

தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டாக்டர் கணேசநாதன் கதீஸ்வரன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். சென்னையிலுள்ள தமிழக அரசுத் தலைமைச் செயலகத்தில்...

நோய்வாய்ப்பட்ட யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் தீவிர சிகிச்சை.!

நோய்வாய்ப்பட்ட யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் தீவிர சிகிச்சை.!

by Mathavi
July 1, 2026
0

அம்பாறை பிராந்திய வனவிலங்கு சுகாதார மேலாண்மைப் பிரிவின் கால்நடை அதிகாரி டாக்டர் டி.பி.என். புஷ்பகுமார உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள் குழுவினர் லஹுகல தேசியப் பூங்காவின் செங்கமுவ இஸ்மத்த...

அம்பாறையில் பொசன் திருவிழா.!

அம்பாறையில் பொசன் திருவிழா.!

by Mathavi
July 1, 2026
0

பொசன் விழாவையொட்டி, அம்பாறை நகரில் அமைக்கப்பட்டிருந்த பொசன் வலயத்தின் ஐந்து தோரணங்கள், விளக்குகள் ஒளிர்விக்கப்பட்டு, பொதுமக்கள் அவற்றைக் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை(30) மாலை செய்யப்பட்டிருந்தன. அம்பாறை...

மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு காகிதாதிகள் அன்பளிப்பு.!

மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு காகிதாதிகள் அன்பளிப்பு.!

by Mathavi
July 1, 2026
0

கல்முனை பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்காக காகிதாதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது. இதன்போது கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு...

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை; உரிமையாளருக்கு அபராதம் விதிப்பு.!

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை; உரிமையாளருக்கு அபராதம் விதிப்பு.!

by Mathavi
July 1, 2026
0

அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் வர்த்தக நிலையம் ஒன்றிற்கு, அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட பால் பொன்னி (import Paal...

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர், செயலாளர் மீது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு.!

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர், செயலாளர் மீது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு.!

by Mathavi
July 1, 2026
0

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் ஊடக அடக்குமுறைகள் தொடர்வதாகவும், இதற்கு சபையின் தவிசாளர் மற்றும் செயலாளரே முழுமையான காரணம் என்று தேசிய மக்கள் சக்தியின் (NPP)...

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்.!

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்.!

by Mathavi
July 1, 2026
0

நாவிதன்வெளி பிரதேசத்தின் நீண்டகால வீதிப் பிரச்சினை மற்றும் பேருந்து நிலையப் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு இவ்வருட இறுதிக்குள் தீர்வு காண அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது....

யானை தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்.!

யானை தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்.!

by Mathavi
July 1, 2026
0

யானை தாக்கி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குடும்பஸ்தர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் வளத்தாப்பிட்டி - புத்தங்கல எல்லைப் பகுதியில்...

ஊடகங்களை அடக்குகிறோம் என்பது அப்பட்டமான பொய்.!

ஊடகங்களை அடக்குகிறோம் என்பது அப்பட்டமான பொய்.!

by Mathavi
July 1, 2026
0

"நாம் ஊடகங்களை அடக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் திட்டமிட்டு போலியான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்" என வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி