• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 19, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

குடிகாரக் கணவனின் கொடூர செயல்!
மனைவி கத்தியால் குத்திக் கொலை!!

selvan by selvan
June 18, 2026
in இலங்கை செய்திகள்.
0
குடிகாரக் கணவனின் கொடூர செயல்!மனைவி கத்தியால் குத்திக் கொலை!!
Share on FacebookShare on Twitter

கம்பஹா மாவட்டம், கந்தானையில் நீண்ட நாள்களாக நிலவி வந்த குடும்பத் தகராறு காரணமாக, மதுபோதையில் இருந்த கணவனால் மனைவி கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேளையிலேயே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவத்தில் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 42 வயதுடைய பெண்ணே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபரான 48 வயதுடைய கணவனுக்கும், உயிரிழந்த மனைவிக்கும் இடையே நீண்ட காலமாகத் தொடர்ச்சியாகக் குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இன்றைய தினமும் இவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, அதிகளவில் மதுபானம் அருந்தியிருந்த கணவன், வீட்டில் இருந்த கூர்மையான கத்தியை எடுத்து மனைவியின் உடலின் பல இடங்களில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

கத்திக் குத்துக்கு இலக்காகிப் பலத்த காயமடைந்த அந்தப் பெண், இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அயலவர்கள் வழங்கிய அவசரத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், கொலையாளி எனக் கருதப்படும் 48 வயதுடைய கணவனை உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபர் கடுமையான மதுபோதையில் இருந்தார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு

Related Posts

கோட்டாவின் ரிட் மனு  எதிர்வரும்
24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

by selvan
June 18, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...

காருடன் மோதிய மோட்டார் சைக்கிள்!இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

காருடன் மோதிய மோட்டார் சைக்கிள்!
இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

by selvan
June 18, 2026
0

காலி, கரந்தெனிய பிரதேசத்தில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேளையிலேயே இந்தக்...

டயகம பாதையில் அரசுப் பேருந்து சேவை தடை – பொதுமக்கள் அவதி!

டயகம பாதையில் அரசுப் பேருந்து சேவை தடை – பொதுமக்கள் அவதி!

by selvan
June 18, 2026
0

ஹட்டன் அரச பேருந்து நிலையத்திலிருந்து போடைஸ் வழியாக டயகம பிரதேசத்திற்குக் காலை 7.00 மணிக்கு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அரசு பேருந்து நேற்றைய...

தமிழகம் சென்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு மகத்தான வரவேற்பு

தமிழகம் சென்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு மகத்தான வரவேற்பு

by selvan
June 18, 2026
0

இந்திய தமிழ் நாட்டுக்கு இன்று (18) வியாழக்கிழமை முற்பகல் விஜயமொன்றை மேற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமிற்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது....

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டம் மன்னாரில் ஆரம்பம்!

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டம் மன்னாரில் ஆரம்பம்!

by selvan
June 18, 2026
0

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் “தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்டத்தில் மேலதிகமாக 98 வீடுகள் அமைக்க...

30 நாட்களுக்குள் மாகாண சபைத் தேர்தலுக்கான திகதியை ஜனாதிபதிஅறிவிக்க வேண்டும் !

30 நாட்களுக்குள் மாகாண சபைத் தேர்தலுக்கான திகதியை ஜனாதிபதிஅறிவிக்க வேண்டும் !

by selvan
June 18, 2026
0

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாண...

யாழில் தொடருந்துடன் மோதிஇராணுவச் சிப்பாய் பலி!

யாழில் தொடருந்துடன் மோதி
இராணுவச் சிப்பாய் பலி!

by selvan
June 18, 2026
0

யாழ்ப்பாணம், அரியாலை - நெளுக்குளம் பகுதியில் தொடருந்துடன் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த பகலகம பகுதியைச்...

முள்ளியவளை நாவலர் வீதியைச் சீரமைக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!

முள்ளியவளை நாவலர் வீதியைச் சீரமைக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!

by selvan
June 18, 2026
0

முல்லைத்தீவு - முள்ளியவளை நாவலர் வீதியைச் சீரமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் குறித்த நாவலர்வீதி சீரமைப்பு வேலையில் ஒப்பந்தப் பிரச்சினை...

கிளிநொச்சியில் யானைகள் அட்டகாசம்!

கிளிநொச்சியில் யானைகள் அட்டகாசம்!

by selvan
June 18, 2026
0

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்மடுநகர் - ரங்கன் குடியிருப்பு மற்றும் பூனகரியின் பல பகுதிகளிலும் மக்கள் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் புகுந்து பெரும்...

மல்லாவி மத்திய கல்லூரியில் நுண்கலைப்பீடம் திறந்து வைப்பு!

மல்லாவி மத்திய கல்லூரியில் நுண்கலைப்பீடம் திறந்து வைப்பு!

by selvan
June 18, 2026
0

முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட மல்லாவி மத்திய கல்லூரியில் நுண்கலைப்பீடம் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது இந்த நுண்கலையகமானது பெரும் மதிப்பிற்குரிய மருத்துவக்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி