• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 19, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

முள்ளியவளை நாவலர் வீதியைச் சீரமைக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!

selvan by selvan
June 18, 2026
in இலங்கை செய்திகள்.
0
முள்ளியவளை நாவலர் வீதியைச் சீரமைக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!
Share on FacebookShare on Twitter


முல்லைத்தீவு – முள்ளியவளை நாவலர் வீதியைச் சீரமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நாவலர்வீதி சீரமைப்பு வேலையில் ஒப்பந்தப் பிரச்சினை காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஐ.சி.டி.பி திட்டத்திற்கு பொறுப்பான பொறியியலாளரால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன், குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டபிற்பாடு குறைந்தபட்சம் மூன்று தொடக்கம் நான்கு மாதத்திற்குள் குறித்த நாவலர் வீதியின் சீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படுமெனவும் பதிலளித்தார்.

முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 17.06.2026நேற்று இடம்பெற்ற வீதி, போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி உபகுழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முள்ளியவளை நாவலர் வீதியைச் சீரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

குறிப்பாக அந்த வீதியை மிக அதிகளவான மக்கள் பயன்படுத்திவருகின்றனர்.

ஏறக்குறைய 2.5கிலோமீற்றர்தூரமான குறித்த நாவலர் வீதியானது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுக் காணப்படுகின்றது.

எனவே குறித்த வீதியைச் சீரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஐ.சி.டி.பி வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் இதன்போது பதிலளிக்கையில்,

குறித்த நாவலர் வீதியானது வீதியானது உலகவங்கியின் நிதி ஒதுக்கீட்டில், ஐ.சி.டி.பி வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டது.

அந்தவகையில் குறித்த வீதியைச் சீரமைப்புச் செய்வதற்காக உரியவகையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அதற்கமைய ஒப்பந்த நிறுவனமொன்றுடன் முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, இந்த வேலைத்திட்டம் அந்த ஒப்பந்த நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது.

குறித்த ஒப்பந்த நிறுவனம் பிறிதொரு ஒப்பந்தவேலையில் முறையற்ற விதத்தில் செயற்பட்டதன் காரணமாக கறுப்புப்பட்டியலில் சேர்க்ப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த ஒப்பந்த நிறுவனத்துடன் மன்னார் மாவட்டத்தில் செய்துகொண்ட ஒப்பந்தமொன்றை முறையான நடைமுறைகளைப் பின்பற்றி முடிவுறுத்தியுள்ளோம். அந்த வேலைத்திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளியை மீளவும் கோருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அதன் பிற்பாடு இந்த நாவலர் வீதிச்சீரமைப்பு விடயத்தில் அந்த ஒப்பந்ததாரர் மிகவும் மந்தகதியில் செயற்பட்டுவருகின்றார்.

எனவே நாவலர் வீதியைச் சீரமைப்பதற்கு நாம் அந்த ஒப்பந்ததாரருடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தினை முடிவுறுத்தி, மீண்டும் உரியவகையில் ஒப்பந்தப்புள்ளியைக் கோரி, வேறு ஒப்பந்ததாரரிடம் குறித்த ஒப்பந்த வேலையைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம்.

ஒரு ஒப்பந்ததாரருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முடிவுறுத்துவதற்கு சில நடமுறைகளை முறையாகப் பின்பற்றவேண்டியிருக்கின்றது. அந்த நடைமுறைகளைப் பின்பற்றியே ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தினை முடிவுறுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அந்த நடமுறைகளைப் பின்பற்றி ஒப்பந்தத்தை முடிவுறுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் ஒப்பந்ததாரர் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. ஆகவே நாம் அந்த நடமுறைகளைப் பின்பற்றியே ஒப்பந்தத்தினை முடிவுறுத்த வேண்டியுள்ளது.

குறிப்பாக நாவலர்வீதி சீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக அந்த ஒப்பந்த நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தினை முடிவுறுத்திக்கொள்வதற்கு 75வீதமான நடவடிக்கைகள் நிறைவடைந்துவிட்டன.

இவ்வாறு அந்த நடைமுறைகளைப் பின்பற்றி ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தை முடிவுறுத்திவிட்டு, மீண்டும் உரியவகையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு புதிய ஒப்பந்ததாரரிடம் இந்த வேலையை கையளிக்கவேண்டும்.

அந்தவகையில் புதிய ஒப்பந்ததாரரின் மூலம் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு ஆகக்குறைந்தது மூன்று தொடக்கம் நான்கு மாதங்களாவது தேவைப்படும் – என்றார்.

Related Posts

கோட்டாவின் ரிட் மனு  எதிர்வரும்
24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

by selvan
June 18, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...

குடிகாரக் கணவனின் கொடூர செயல்!மனைவி கத்தியால் குத்திக் கொலை!!

குடிகாரக் கணவனின் கொடூர செயல்!
மனைவி கத்தியால் குத்திக் கொலை!!

by selvan
June 18, 2026
0

கம்பஹா மாவட்டம், கந்தானையில் நீண்ட நாள்களாக நிலவி வந்த குடும்பத் தகராறு காரணமாக, மதுபோதையில் இருந்த கணவனால் மனைவி கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இன்று வியாழக்கிழமை...

காருடன் மோதிய மோட்டார் சைக்கிள்!இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

காருடன் மோதிய மோட்டார் சைக்கிள்!
இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

by selvan
June 18, 2026
0

காலி, கரந்தெனிய பிரதேசத்தில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேளையிலேயே இந்தக்...

டயகம பாதையில் அரசுப் பேருந்து சேவை தடை – பொதுமக்கள் அவதி!

டயகம பாதையில் அரசுப் பேருந்து சேவை தடை – பொதுமக்கள் அவதி!

by selvan
June 18, 2026
0

ஹட்டன் அரச பேருந்து நிலையத்திலிருந்து போடைஸ் வழியாக டயகம பிரதேசத்திற்குக் காலை 7.00 மணிக்கு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அரசு பேருந்து நேற்றைய...

தமிழகம் சென்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு மகத்தான வரவேற்பு

தமிழகம் சென்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு மகத்தான வரவேற்பு

by selvan
June 18, 2026
0

இந்திய தமிழ் நாட்டுக்கு இன்று (18) வியாழக்கிழமை முற்பகல் விஜயமொன்றை மேற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமிற்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது....

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டம் மன்னாரில் ஆரம்பம்!

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டம் மன்னாரில் ஆரம்பம்!

by selvan
June 18, 2026
0

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் “தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்டத்தில் மேலதிகமாக 98 வீடுகள் அமைக்க...

30 நாட்களுக்குள் மாகாண சபைத் தேர்தலுக்கான திகதியை ஜனாதிபதிஅறிவிக்க வேண்டும் !

30 நாட்களுக்குள் மாகாண சபைத் தேர்தலுக்கான திகதியை ஜனாதிபதிஅறிவிக்க வேண்டும் !

by selvan
June 18, 2026
0

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாண...

யாழில் தொடருந்துடன் மோதிஇராணுவச் சிப்பாய் பலி!

யாழில் தொடருந்துடன் மோதி
இராணுவச் சிப்பாய் பலி!

by selvan
June 18, 2026
0

யாழ்ப்பாணம், அரியாலை - நெளுக்குளம் பகுதியில் தொடருந்துடன் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த பகலகம பகுதியைச்...

கிளிநொச்சியில் யானைகள் அட்டகாசம்!

கிளிநொச்சியில் யானைகள் அட்டகாசம்!

by selvan
June 18, 2026
0

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்மடுநகர் - ரங்கன் குடியிருப்பு மற்றும் பூனகரியின் பல பகுதிகளிலும் மக்கள் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் புகுந்து பெரும்...

மல்லாவி மத்திய கல்லூரியில் நுண்கலைப்பீடம் திறந்து வைப்பு!

மல்லாவி மத்திய கல்லூரியில் நுண்கலைப்பீடம் திறந்து வைப்பு!

by selvan
June 18, 2026
0

முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட மல்லாவி மத்திய கல்லூரியில் நுண்கலைப்பீடம் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது இந்த நுண்கலையகமானது பெரும் மதிப்பிற்குரிய மருத்துவக்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி