• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 19, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மல்லாவி மத்திய கல்லூரியில் நுண்கலைப்பீடம் திறந்து வைப்பு!

selvan by selvan
June 18, 2026
in இலங்கை செய்திகள்.
0
மல்லாவி மத்திய கல்லூரியில் நுண்கலைப்பீடம் திறந்து வைப்பு!
Share on FacebookShare on Twitter


முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட மல்லாவி மத்திய கல்லூரியில் நுண்கலைப்பீடம் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

இந்த நுண்கலையகமானது பெரும் மதிப்பிற்குரிய மருத்துவக் கலாநிதியும் கொடைவள்ளலுமான விமல் ஜெயரட்ணம் அவர்களின் முழுமையான நிதிப் பங்களிப்புடன், ஜெயரட்ணம் நம்பிக்கை நிதியத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சித்திரம், சங்கீதம், நடனம், நாடகம் ஆகிய நான்கு துறைகளுக்கும் தனித்தனியான வகுப்பறைகளை உள்ளடக்கியதாக இரண்டு மாடிகளைக் கொண்டு இந்த நுண்கலையகம் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.

கல்லூரி அதிபர் த.தர்மராஜா அவர்களின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழா நிகழ்வில், வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் மற்றும் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

இத்திட்டத்தின் கொடையாளரான மருத்துவக் கலாநிதி விமல் ஜெயரட்ணம் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, தேசியக் கொடி மற்றும் பாடசாலைக் கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. புதிய கட்டடத்தின் பெயர்ப்பலகையை ஆளுநர் அவர்கள் திரைநீக்கம் செய்து வைக்க, கட்டடத்தை மருத்துவக் கலாநிதி விமல் ஜெயரட்ணம் நாடா வெட்டித் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசேட மேடை நிகழ்வில், இப்பாடசாலைக்கு கடந்த காலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளை அமைத்துக் கொடுத்ததுடன், தற்போது இந்த நுண்கலையகத்தையும் நிர்மாணித்துக் கொடுத்த மருத்துவக் கலாநிதி விமல் ஜெயரட்ணம் அவர்களின் மகத்தான சேவையைப் பாராட்டி, அவருக்கு ‘வாழும் வள்ளல்’ விருது வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அத்துடன், தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்து மாணவர்களுக்கு மக்கள் இசையைப் பயிற்றுவித்த பாடகரும் நடிகருமான கருங்குயில் அவர்களால், மருத்துவக் கலாநிதி விமல் ஜெயரட்ணம் அவர்களை வாழ்த்தி உருவாக்கப்பட்ட சிறப்புப் பாடலொன்றும் மாணவர்களால் இதன்போது இசைக்கப்பட்டது.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள்,

‘ஒரு பாடசாலைக்கு அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் சமூகம் உதவி செய்வதுதான் வழமை. ஆனால், இந்தப் பாடசாலைக்கு விடுதிக் கட்டடங்கள் மற்றும் நுண்கலையகம் என்பவற்றை அமைத்துக் கொடுத்த விமல் ஜெயரட்ணம் அவர்களுக்கும், இந்தப் பாடசாலைக்கும், ஏன் இந்த மாவட்டத்துக்கும் கூட எந்தவிதத் தொடர்பும் இல்லை.

ஆனாலும் அவர் தனது சொந்த வீட்டைக்கூட விற்று இந்த மிகப் பெரிய உதவிகளைச் செய்திருக்கின்றார். பணம் இருப்பவர்களிடத்தில் மனம் இருக்காது, மனம் இருப்பவர்களிடத்தில் பணம் இருக்காது என்று சொல்வார்கள்.

ஆனால், விமல் ஜெயரட்ணம் அவர்களிடம் அவை இரண்டும் நிறைந்திருக்கின்றது. அவரது தியாகத்தைப் பாராட்டுவதற்கு வார்த்தைகளே போதாது.

தனது உரையில் ஒரு விடயத்தைக் குறிப்பிட்ட மருத்துவக் கலாநிதி விமல் ஜெயரட்ணம், இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் யேசுதானந்தன் அவர்களால்தான் தான் இங்கே இவ்வளவு விடயங்களையும் செய்ததாகக் கூறினார்.

அது முற்றிலும் உண்மை. முன்னாள் அதிபர் யேசுதானந்தன் மிகச் சிறப்பான தலைமைத்துவத்தை இந்தப் பாடசாலைக்கு வழங்கியிருந்தார். அவர் அன்று ‘இந்த மேலதிக வேலைகள் எனக்கேன்?’ என்று எண்ணியிருந்தால், இந்தப் பெரிய திட்டங்கள் பாடசாலைக்குக் கிடைத்திருக்காது. அதனால்தான், எல்லாமே ‘தலைமைத்துவத்தில்’ தான் தங்கியிருக்கின்றது என நான் பல தடவைகள் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றேன்.

எமக்குக் கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தினால் வீணான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுமோ என்ற எண்ணம் அதிகாரிகளிடத்தில் அதிகரித்து வருகின்றமையால், மக்கள் அடைய வேண்டிய பல நன்மைகள் அவர்களைச் சென்றடைவதில்லை.

எனவே, மாணவர்களாகிய உங்களைச் சிறந்த தலைமைத்துவத்துடனும், ஆளுமையுடனும் வளர்த்துக்கொள்ளுங்கள் என்று நான் வலியுறுத்துகின்றேன்.

வெறும் புத்தகப் புழுக்களாக மாத்திரம் இருந்துவிடாமல், இந்தச் சமூகத்துக்குச் சேவை செய்யக்கூடியவர்களாக உங்களை நீங்களே வளர்த்தெடுக்க வேண்டும்.

சமூகத்துக்கு உதவி செய்பவர்களைத் தான் இந்தச் சமூகம் என்றும் மதிக்கும். எத்தகைய உயர் பதவிகளில் இருந்தாலும், சமூகத்துக்காக உழைக்காவிட்டால் அந்தப் பதவியால் எவ்விதப் பயனும் இல்லை.

இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த நுண்கலையகமும், உங்களைப் படிப்புடன் மாத்திரம் சுருக்கிவிடாது இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் உங்களது ஆற்றல்களை வெளிக்கொணரப் பெரிதும் உதவும், எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், துணுக்காய் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், அயற்பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts

கோட்டாவின் ரிட் மனு  எதிர்வரும்
24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

by selvan
June 18, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...

குடிகாரக் கணவனின் கொடூர செயல்!மனைவி கத்தியால் குத்திக் கொலை!!

குடிகாரக் கணவனின் கொடூர செயல்!
மனைவி கத்தியால் குத்திக் கொலை!!

by selvan
June 18, 2026
0

கம்பஹா மாவட்டம், கந்தானையில் நீண்ட நாள்களாக நிலவி வந்த குடும்பத் தகராறு காரணமாக, மதுபோதையில் இருந்த கணவனால் மனைவி கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இன்று வியாழக்கிழமை...

காருடன் மோதிய மோட்டார் சைக்கிள்!இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

காருடன் மோதிய மோட்டார் சைக்கிள்!
இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

by selvan
June 18, 2026
0

காலி, கரந்தெனிய பிரதேசத்தில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேளையிலேயே இந்தக்...

டயகம பாதையில் அரசுப் பேருந்து சேவை தடை – பொதுமக்கள் அவதி!

டயகம பாதையில் அரசுப் பேருந்து சேவை தடை – பொதுமக்கள் அவதி!

by selvan
June 18, 2026
0

ஹட்டன் அரச பேருந்து நிலையத்திலிருந்து போடைஸ் வழியாக டயகம பிரதேசத்திற்குக் காலை 7.00 மணிக்கு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அரசு பேருந்து நேற்றைய...

தமிழகம் சென்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு மகத்தான வரவேற்பு

தமிழகம் சென்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு மகத்தான வரவேற்பு

by selvan
June 18, 2026
0

இந்திய தமிழ் நாட்டுக்கு இன்று (18) வியாழக்கிழமை முற்பகல் விஜயமொன்றை மேற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமிற்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது....

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டம் மன்னாரில் ஆரம்பம்!

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டம் மன்னாரில் ஆரம்பம்!

by selvan
June 18, 2026
0

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் “தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்டத்தில் மேலதிகமாக 98 வீடுகள் அமைக்க...

30 நாட்களுக்குள் மாகாண சபைத் தேர்தலுக்கான திகதியை ஜனாதிபதிஅறிவிக்க வேண்டும் !

30 நாட்களுக்குள் மாகாண சபைத் தேர்தலுக்கான திகதியை ஜனாதிபதிஅறிவிக்க வேண்டும் !

by selvan
June 18, 2026
0

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாண...

யாழில் தொடருந்துடன் மோதிஇராணுவச் சிப்பாய் பலி!

யாழில் தொடருந்துடன் மோதி
இராணுவச் சிப்பாய் பலி!

by selvan
June 18, 2026
0

யாழ்ப்பாணம், அரியாலை - நெளுக்குளம் பகுதியில் தொடருந்துடன் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த பகலகம பகுதியைச்...

முள்ளியவளை நாவலர் வீதியைச் சீரமைக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!

முள்ளியவளை நாவலர் வீதியைச் சீரமைக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!

by selvan
June 18, 2026
0

முல்லைத்தீவு - முள்ளியவளை நாவலர் வீதியைச் சீரமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் குறித்த நாவலர்வீதி சீரமைப்பு வேலையில் ஒப்பந்தப் பிரச்சினை...

கிளிநொச்சியில் யானைகள் அட்டகாசம்!

கிளிநொச்சியில் யானைகள் அட்டகாசம்!

by selvan
June 18, 2026
0

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்மடுநகர் - ரங்கன் குடியிருப்பு மற்றும் பூனகரியின் பல பகுதிகளிலும் மக்கள் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் புகுந்து பெரும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி