சிவனொளிபாத மலைப் பருவக்காலத்தை முன்னிட்டு, புனித பூமியையும் அதன் இயற்கைச் சூழலையும் பாதுகாக்கும் நோக்கில், இளைஞர்கள் குழுவொன்று இணைந்து குப்பைகளை அகற்றும் பாரிய தூய்மைப்படுத்தல் பணியொன்றை முன்னெடுத்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக் காலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் பல்லாயிரக்கணக்கில் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் சில பயணிகள் வீசிச் செல்லும் பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் பைகள் மற்றும் திடக் கழிவுகள் இப்பகுதியின் அரிய பல்லுயிர்ச் சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
சிவனொளிபாத மலைப் பருவக்காலத்தை முன்னிட்டு, புனித பூமியையும் அதன் இயற்கைச் சூழலையும் பாதுகாக்கும் நோக்கில், இளைஞர்கள் குழுவொன்று இணைந்து குப்பைகளை அகற்றும் பாரிய தூய்மைப்படுத்தல் பணியொன்றை முன்னெடுத்துள்ளது.
இந்த சூழல் மாசடைதலைத் தடுப்பதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த தன்னார்வ இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து இத்தூய்மைப் பணியை ஆரம்பித்துள்ளனர்.
சிவனொளிபாத மலையின் நல்லதண்ணிப் பாதை மற்றும் இரத்தினபுரிப் பாதைகளில் சிதறிக்கிடந்த டன் கணக்கிலான பிளாஸ்டிக் மற்றும் உக்காத கழிவுகளை இவர்கள் அசாத்திய முயற்சியுடன் சேகரித்து வருகின்றனர்.
புனித பூமியையும் அதன் இயற்கை அழகையும் ரசிக்க வரும் பயணிகள், தங்களின் குப்பைகளை ஆங்காங்கே வீசாமல், அதற்குரிய இடங்களில் மட்டுமே போட வேண்டும் அல்லது மீண்டும் தங்களுடனேயே எடுத்துச் செல்ல வேண்டும்” என இத்தன்னார்வக் குழுவினர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இளைஞர்களின் இந்த முன்மாதிரியான சமூகப் பணிக்கு அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டுகளையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.









