• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 7, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் நாடக விழா.!

Mathavi by Mathavi
June 4, 2026
in இலங்கை செய்திகள்., நிகழ்வுகள், மட்டக்களப்பு செய்திகள்
0
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் நாடக விழா.!
Share on FacebookShare on Twitter

இன்று வளர்ந்து வருகின்ற இந்த உலகில், ஒரு வேகமான இந்த உலகில், தொழில்நுட்ப மாற்றங்கள், புரட்சிகள் நடக்கின்ற இந்த உலகத்தில் எல்லாரும் ஒரு வேகமான வாழ்க்கையில் இருக்கின்ற இந்த காலப்பகுதியில் நாங்கள் எல்லாருமே இந்த நாடகத்தின் மூலம் எங்களது உணர்வுகளையும் பல்வேறுபட்ட விடயங்களை வெளிப்படுத்துகின்ற அல்லது நாங்கள் ஓய்வாக இருக்கின்ற ஒரு நிகழ்வாக இந்த நாடக தினம் அமைகின்றது என கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் க.சுரேஸ் தெரிவித்தார்.

உலக நாடக நாளினை முன்னிட்டு இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை நடத்தும் நாடக விழா நேற்று வந்தாறுமூலையிலுள்ள பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.

நுண்கலைத் துறைத் தலைவர் திருமதி து.சத்தியஜித் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முதன்மை அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் ப.பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் க.சுரேஸ், பிரதி துணைவேந்தர் பேராசிரியர் சி.றாகல், சௌக்கிய பராமரிப்பு பீட பீடாதிபதி பேராசிரியர் தி.சதானந்தன், விவசாய பீடாதிபதி பேராசிரியர் மு.சுகிர்தரன், பட்டப்பின்படிப்பு பீடத்தின் பதில் பீடாதிபதி பேராசிரியர் ஜெ.கென்னடி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நுண்கலைத்துறையின் பண்பாட்டு இசையணியின் வரவேற்புடன் ஆரம்பமாகிய இவ்விழாவில் உலக நாடக தினத்தினை முன்னிட்டான சஞ்சிகை ஒன்றும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது மூத்த நாடகக் கலைஞர் ‘புதுவை அன்பன்’ என அழைக்கப்படும் நாகமுத்து செல்வம் அவர்களும், மட்டக்களப்பில் கடந்த மூன்று தசாப்தங்களாக நாடக அரங்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ‘பாடினிகள்’ குழுவினரும் கௌரவிக்கப்பட்டனர்.

ஆரம்ப வைபவத்தையடுத்து முதுநிலை விரிவுரையாளர் சு.சந்திரகுமாரின் எழுத்து மற்றும் நெறிப்படுத்துகையில் உருவாக்கம்பெற்றுள்ள ‘போதைத்துரை’ எனும் நாடகமும், பேராசிரியர் சி.ஜெயசங்கர் அவர்களின் ஆற்றுப்படுத்துகையில் உருவாகியுள்ள ‘மூத்தம்மாக்களின் பேரர்கள்’ என்ற நாடகமும், முதுநிலை விரிவுரையாளர் கு.ரவிச்சந்திரனின் நெறிப்படுத்துகையில் உருவாக்கம்பெற்றுள்ள ‘எம்மைப் பிடித்த பிசாசுகள்’, ‘நல்ல மாப்பிள்ளை’, ‘மாறும் பாதை’ ஆகிய நாடகங்களும், விரிவுரையாளர் து.கௌரீஸ்வரன் அவர்களின் நெறியாள்கையில் உருவாகியுள்ள ‘பிள்ளை அழுத கண்ணீர்’ என்ற சிறுவர் நாடகமும் அளிக்கை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வினை கண்டுகளிப்பதற்காக பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பீடாதிபதி,
இந்த உலக நாடக நாள் விழா, குறிப்பாக 1961 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, 1962 இல் தொடர்ச்சியாக உலகளாவிய மக்களின் கலைகள், பண்பாட்டு அம்சங்களை இணைக்கின்ற பிரதானமான மூலமாக இருந்துவருகிறது. அந்த அடிப்படையில், கிழக்கு பல்கலைக்கழகம் குறிப்பாக 1990களின் நடுப்பகுதியிலிருந்து இந்த உலக நாடக நாள் விழாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சமூகத்தையும் பல்கலைக்கழகத்தையும் இணைக்கின்ற ஒரு உறவுப்பாலமாகவும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்ற ஒரு தளமாகவும் இந்த நாடக நாள் விழாவை கலை கலாச்சார பீடத்தினுடைய நுண்கலைத்துறை தொடர்ச்சியாக எடுத்து வருவதையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

ஷேக்ஸ்பியரின் கருத்துப்படி நாங்கள் எல்லாருமே நடிகர்கள். இந்த உலகத்தில் நடிகர்களாக இருக்கிறோம். அந்த வகையில், இந்த நாடக நாள் நிகழ்வுகள் பல்வேறுபட்ட செய்திகளைக் கொண்டுசெல்கின்றன.

குறிப்பாக, முதுபெரும் கலைஞர்கள் தங்களுடைய அனுபவங்களை இளைய தலைமுறைக்குக் கடத்துகின்ற ஒரு நிகழ்வாகவும் நான் இதைப் பார்க்கிறேன்.
அதுமட்டுமன்றி, இன்று வளர்ந்துவருகின்ற இந்த உலகில், தொழில்நுட்ப மாற்றங்கள், புரட்சிகள் நடக்கின்ற இந்த உலகத்தில் வந்து எல்லாரும் ஒரு வேகமான வாழ்க்கையில் இருக்கின்ற இந்த காலப்பகுதியில் நாங்கள் எல்லாருமே இந்த நாடகத்தின் மூலம் எங்களது உணர்வுகளையும் பல்வேறுபட்ட விடயங்களை வெளிப்படுத்துகின்ற அல்லது நாங்கள் ஓய்வாக இருக்கின்ற ஒரு நிகழ்வாக இந்த நாடக தினம் அமைந்திருக்கின்றது.

அந்த அடிப்படையில், இந்த நாடக நாள் நிகழ்வுகள் கல்விசார் புல ரீதியாக, குறிப்பாக கலை கலாச்சார பீடத்தைப் பொறுத்தவரையில், அவருடைய அனுபவப் பகிர்வுகள், தங்களுடைய பாடம் தொடர்பான விடயங்களைப் பகிர்கின்ற ஒரு விடயமாக இருக்கின்றது.

இந்த நிகழ்வைத் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லுகின்ற நுண்கலைத்துறையைப் பொறுத்தவரையில், அவருடைய பீடத்தினுடைய துறைத்தலைவர், மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் அனைவரையும் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி என்ற வகையில் பாராட்டுவதோடு, இந்த நிகழ்வு தொடர்ச்சியாக கொண்டுசெல்லப்பட வேண்டும்.

குறிப்பாக நான் ஒரு விடயத்தைச் சொல்ல வேண்டும். இந்தத் துறைத்தலைவி திருமதி. துஷ்யந்தி சத்தியசீலன் அவர்கள், தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் இந்த நிகழ்வுகளை இடைவிடாது, பல்வேறுபட்ட சிரமத்திற்கு, பணிகளுக்கு மத்தியில் இதனை முன்கொண்டு செல்வதையிட்டு நான் பீடாதிபதி என்ற வகையில் பெருமைப்படுகின்றேன். அவருக்கான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். குறிப்பாக இந்த நிகழ்வு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

Related Posts

டொலர் அதிகரிப்பு தற்காலிகமே; நாடு மீண்டும் வீழ்ச்சியடையாது.!

டொலர் அதிகரிப்பு தற்காலிகமே; நாடு மீண்டும் வீழ்ச்சியடையாது.!

by Mathavi
June 7, 2026
0

அண்மைக்காலமாக அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வருவதானது, இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதைக் குறிக்கவில்லை என்றும், தவறான பிரசாரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற...

சுரேஷ் சலேவுக்கு அநீதி; போராட்டம் வெடிக்கும்.!

சுரேஷ் சலேவுக்கு அநீதி; போராட்டம் வெடிக்கும்.!

by Mathavi
June 7, 2026
0

இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் பட்சத்தில், நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள "சட்ட ரீதியாக...

மாகாண சபைத் தேர்தல் ‘ஓகே’ அதிகாரப் பகிர்வு ‘நோ’

மாகாண சபைத் தேர்தல் ‘ஓகே’ அதிகாரப் பகிர்வு ‘நோ’

by Mathavi
June 7, 2026
0

வடக்கு மாகாண சபைக்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என நம்புகின்றோம் என்று முன்னாள் அமைச்சர் சரத்...

இனி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்.!

இனி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்.!

by Mathavi
June 7, 2026
0

தான் இனி ஒருபோதும் தீவிர அரசியலுக்கு வரப்போவதில்லை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, எதிர்காலத்தில்...

சிறுவனைத் தாக்கிய நால்வர் கைது.!

அதிரடி சோதனையில் சிக்கிய 75 இளைஞர்கள்.!

by Mathavi
June 7, 2026
0

அம்பலாங்கொடை இடம்தோட்ட பகுதியில் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருட்களுடன் 75 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (6)...

2029 இற்கு முன் ரணில் மீண்டும் ஜனாதிபதி; ராஜித அதிரடி அறிவிப்பு.!

2029 இற்கு முன் ரணில் மீண்டும் ஜனாதிபதி; ராஜித அதிரடி அறிவிப்பு.!

by Mathavi
June 7, 2026
0

இலங்கையில் 2029ஆம் ஆண்டுக்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாவார் என்றும், நாட்டின் நலனுக்காக அந்தச் சவாலை அவர் ஏற்பார் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன...

கிரியெல்லவில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது.!

விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற காரின் சாரதி கைது.!

by Mathavi
June 7, 2026
0

ஹங்வெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பல்கம - பனாகொட வீதியில் நேற்று (06) சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

கணவனை கொ*லை செய்த மனைவி.!

by Mathavi
June 7, 2026
0

ஹொரணை, அரம்பகந்த பகுதியில் மனைவி ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் அரம்பகந்த, ஹொரணை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய...

மீண்டும் பலம் பெறும் மொட்டு; சானக்க, ஜோன்ஸ்டனுக்கு முக்கிய பொறுப்புகள்.!

மீண்டும் பலம் பெறும் மொட்டு; சானக்க, ஜோன்ஸ்டனுக்கு முக்கிய பொறுப்புகள்.!

by Mathavi
June 7, 2026
0

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்கால அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்கான முழு அதிகாரமும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

by Mathavi
June 7, 2026
0

கம்பஹா மாவட்டம், மீரிகமை பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி 26 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி