• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 4, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் நாடக விழா.!

Mathavi by Mathavi
June 4, 2026
in இலங்கை செய்திகள்., நிகழ்வுகள், மட்டக்களப்பு செய்திகள்
0
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் நாடக விழா.!
Share on FacebookShare on Twitter

இன்று வளர்ந்து வருகின்ற இந்த உலகில், ஒரு வேகமான இந்த உலகில், தொழில்நுட்ப மாற்றங்கள், புரட்சிகள் நடக்கின்ற இந்த உலகத்தில் எல்லாரும் ஒரு வேகமான வாழ்க்கையில் இருக்கின்ற இந்த காலப்பகுதியில் நாங்கள் எல்லாருமே இந்த நாடகத்தின் மூலம் எங்களது உணர்வுகளையும் பல்வேறுபட்ட விடயங்களை வெளிப்படுத்துகின்ற அல்லது நாங்கள் ஓய்வாக இருக்கின்ற ஒரு நிகழ்வாக இந்த நாடக தினம் அமைகின்றது என கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் க.சுரேஸ் தெரிவித்தார்.

உலக நாடக நாளினை முன்னிட்டு இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை நடத்தும் நாடக விழா நேற்று வந்தாறுமூலையிலுள்ள பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.

நுண்கலைத் துறைத் தலைவர் திருமதி து.சத்தியஜித் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முதன்மை அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் ப.பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் க.சுரேஸ், பிரதி துணைவேந்தர் பேராசிரியர் சி.றாகல், சௌக்கிய பராமரிப்பு பீட பீடாதிபதி பேராசிரியர் தி.சதானந்தன், விவசாய பீடாதிபதி பேராசிரியர் மு.சுகிர்தரன், பட்டப்பின்படிப்பு பீடத்தின் பதில் பீடாதிபதி பேராசிரியர் ஜெ.கென்னடி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நுண்கலைத்துறையின் பண்பாட்டு இசையணியின் வரவேற்புடன் ஆரம்பமாகிய இவ்விழாவில் உலக நாடக தினத்தினை முன்னிட்டான சஞ்சிகை ஒன்றும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது மூத்த நாடகக் கலைஞர் ‘புதுவை அன்பன்’ என அழைக்கப்படும் நாகமுத்து செல்வம் அவர்களும், மட்டக்களப்பில் கடந்த மூன்று தசாப்தங்களாக நாடக அரங்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ‘பாடினிகள்’ குழுவினரும் கௌரவிக்கப்பட்டனர்.

ஆரம்ப வைபவத்தையடுத்து முதுநிலை விரிவுரையாளர் சு.சந்திரகுமாரின் எழுத்து மற்றும் நெறிப்படுத்துகையில் உருவாக்கம்பெற்றுள்ள ‘போதைத்துரை’ எனும் நாடகமும், பேராசிரியர் சி.ஜெயசங்கர் அவர்களின் ஆற்றுப்படுத்துகையில் உருவாகியுள்ள ‘மூத்தம்மாக்களின் பேரர்கள்’ என்ற நாடகமும், முதுநிலை விரிவுரையாளர் கு.ரவிச்சந்திரனின் நெறிப்படுத்துகையில் உருவாக்கம்பெற்றுள்ள ‘எம்மைப் பிடித்த பிசாசுகள்’, ‘நல்ல மாப்பிள்ளை’, ‘மாறும் பாதை’ ஆகிய நாடகங்களும், விரிவுரையாளர் து.கௌரீஸ்வரன் அவர்களின் நெறியாள்கையில் உருவாகியுள்ள ‘பிள்ளை அழுத கண்ணீர்’ என்ற சிறுவர் நாடகமும் அளிக்கை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வினை கண்டுகளிப்பதற்காக பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பீடாதிபதி,
இந்த உலக நாடக நாள் விழா, குறிப்பாக 1961 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, 1962 இல் தொடர்ச்சியாக உலகளாவிய மக்களின் கலைகள், பண்பாட்டு அம்சங்களை இணைக்கின்ற பிரதானமான மூலமாக இருந்துவருகிறது. அந்த அடிப்படையில், கிழக்கு பல்கலைக்கழகம் குறிப்பாக 1990களின் நடுப்பகுதியிலிருந்து இந்த உலக நாடக நாள் விழாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து, சமூகத்தையும் பல்கலைக்கழகத்தையும் இணைக்கின்ற ஒரு உறவுப்பாலமாகவும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்ற ஒரு தளமாகவும் இந்த நாடக நாள் விழாவை கலை கலாச்சார பீடத்தினுடைய நுண்கலைத்துறை தொடர்ச்சியாக எடுத்து வருவதையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

ஷேக்ஸ்பியரின் கருத்துப்படி நாங்கள் எல்லாருமே நடிகர்கள். இந்த உலகத்தில் நடிகர்களாக இருக்கிறோம். அந்த வகையில், இந்த நாடக நாள் நிகழ்வுகள் பல்வேறுபட்ட செய்திகளைக் கொண்டுசெல்கின்றன.

குறிப்பாக, முதுபெரும் கலைஞர்கள் தங்களுடைய அனுபவங்களை இளைய தலைமுறைக்குக் கடத்துகின்ற ஒரு நிகழ்வாகவும் நான் இதைப் பார்க்கிறேன்.
அதுமட்டுமன்றி, இன்று வளர்ந்துவருகின்ற இந்த உலகில், தொழில்நுட்ப மாற்றங்கள், புரட்சிகள் நடக்கின்ற இந்த உலகத்தில் வந்து எல்லாரும் ஒரு வேகமான வாழ்க்கையில் இருக்கின்ற இந்த காலப்பகுதியில் நாங்கள் எல்லாருமே இந்த நாடகத்தின் மூலம் எங்களது உணர்வுகளையும் பல்வேறுபட்ட விடயங்களை வெளிப்படுத்துகின்ற அல்லது நாங்கள் ஓய்வாக இருக்கின்ற ஒரு நிகழ்வாக இந்த நாடக தினம் அமைந்திருக்கின்றது.

அந்த அடிப்படையில், இந்த நாடக நாள் நிகழ்வுகள் கல்விசார் புல ரீதியாக, குறிப்பாக கலை கலாச்சார பீடத்தைப் பொறுத்தவரையில், அவருடைய அனுபவப் பகிர்வுகள், தங்களுடைய பாடம் தொடர்பான விடயங்களைப் பகிர்கின்ற ஒரு விடயமாக இருக்கின்றது.

இந்த நிகழ்வைத் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லுகின்ற நுண்கலைத்துறையைப் பொறுத்தவரையில், அவருடைய பீடத்தினுடைய துறைத்தலைவர், மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் அனைவரையும் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி என்ற வகையில் பாராட்டுவதோடு, இந்த நிகழ்வு தொடர்ச்சியாக கொண்டுசெல்லப்பட வேண்டும்.

குறிப்பாக நான் ஒரு விடயத்தைச் சொல்ல வேண்டும். இந்தத் துறைத்தலைவி திருமதி. துஷ்யந்தி சத்தியசீலன் அவர்கள், தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் இந்த நிகழ்வுகளை இடைவிடாது, பல்வேறுபட்ட சிரமத்திற்கு, பணிகளுக்கு மத்தியில் இதனை முன்கொண்டு செல்வதையிட்டு நான் பீடாதிபதி என்ற வகையில் பெருமைப்படுகின்றேன். அவருக்கான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். குறிப்பாக இந்த நிகழ்வு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

Related Posts

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

முதியோர் இல்லத் தீ விபத்து – உரிமையாளர் கைது!

by selvan
June 4, 2026
0

ஹொரணை அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் நேற்று (03) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது....

கொவிட் காலத்தில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை சீனா வழங்கியது

கொவிட் காலத்தில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை சீனா வழங்கியது

by selvan
June 4, 2026
0

கொவிட் காலத்தில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை சீன அரசாங்கம் நன்கொடைகளாக வழங்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சீனதூதுவர்...

ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இனவாதமே காணப்படுகின்றது!

ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இனவாதமே காணப்படுகின்றது!

by selvan
June 4, 2026
0

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று  மாலை கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில்  ஊடக சந்திப்பினை   நடாத்தியிருந்தார். இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அருட்தந்தை ஜீவந்த பிரீஸ்...

யாழில் சங்கிலிய மன்னனின் 407 ஆவது சிரார்த்ததின  நிகழ்வுகள்..

யாழில் சங்கிலிய மன்னனின் 407 ஆவது சிரார்த்ததின நிகழ்வுகள்..

by selvan
June 4, 2026
0

இரண்டாம் சங்கிலிய மன்னனின் 407வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு யாழில் அமைந்துள்ள சங்கிலிய மன்னன் அரண்மனையில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற உள்ளதாக சங்கிலிய மன்னன் அறக்கட்டளையின்...

பொலிசார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து A9 வீதியில் சிரமதானம் 

பொலிசார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து A9 வீதியில் சிரமதானம் 

by selvan
June 4, 2026
0

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொலிசார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகம் இணைந்து A9வீதியில் கரடிப்போக்கு சந்தியிலிருந்து இரணைமடு சந்தி வரை சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்...

இனவாதத் தீயை மூட்டி மாணவர்களின் ஒற்றுமையைக் கருக வைக்காதீர் !

இனவாதத் தீயை மூட்டி மாணவர்களின் ஒற்றுமையைக் கருக வைக்காதீர் !

by selvan
June 4, 2026
0

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் சசிந்து பெரேரா, நாட்டில் மீண்டும் ஒரு இனவாத அலையை...

சொல்லிசைக் கலைஞர் சங்கீதன் சார்பில் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு! – சுமந்திரன் அறிவிப்பு

சொல்லிசைக் கலைஞர் சங்கீதன் சார்பில் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு! – சுமந்திரன் அறிவிப்பு

by selvan
June 4, 2026
0

விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதன் சார்பில், உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை...

நினைவேந்தலுக்கு ஏற்பாடு செய்தமை தொடர்பில் வாக்கு மூலம் வழங்கினார் வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர்!

நினைவேந்தலுக்கு ஏற்பாடு செய்தமை தொடர்பில் வாக்கு மூலம் வழங்கினார் வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர்!

by selvan
June 4, 2026
0

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தமை தொடர்பில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிஸாரினால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்....

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

by selvan
June 4, 2026
0

களுத்துறை மாவட்டம், ஹொரணை - அங்குருவத்தோட்ட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது....

வடக்கு ஆளுநருக்கும், இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்துக்கும் இடையே விசேட கலந்துரையாடல்

வடக்கு ஆளுநருக்கும், இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்துக்கும் இடையே விசேட கலந்துரையாடல்

by selvan
June 4, 2026
0

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (04.06.2026) வியாழக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி