ஈரான் நடத்திய தாக்குதல்களில், அமெரிக்க இராணுவம் தனது வான்படைக் கட்டமைப்பில் உள்ள ‘ரீப்பர்’ (Reaper) ரக ஆளில்லா போர் வானூர்திகளின் எண்ணிக்கையில் சுமார் 20 சதவீதத்தை இழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய போர் சூழல் உருவானது முதல் இதுவரை அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்ட 24-க்கும் மேற்பட்ட ஆளில்லா வானூர்திகளை ஈரான் அழித்துள்ளதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இந்த இழப்புகளின் மதிப்பு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது போர் தொடங்குவதற்கு முன்னர் பென்டகன் வசம் இருந்த மொத்த ஆளில்லா வான்வழி வாகனங்களின் இருப்பில் கிட்டத்தட்ட 20 சதவீதமாகும்.
இவற்றில் பெரும்பாலான ஆளில்லா வானூர்திகள், பறந்து கொண்டிருந்த போதே ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
ஏனையவை அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களின் போது தரையிலேயே வைத்து அழிக்கப்பட்டுள்ளன.
சில ஆளில்லா வானூர்திகள் தொழில்நுட்ப பிரச்சினைகள்; மற்றும் விபத்துக்கள் காரணமாகவும் இழக்கப்பட்டுள்ளன.”
அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கைகளின்படி, இந்தப் போரின் போது அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான குறைந்தது 42 வானூர்திகள் சேதமடைந்துள்ளன அல்லது முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஈரானுடனான போரில், அமெரிக்காவின் ஒட்டுமொத்த இராணுவத் தளபாட இழப்பு மட்டும் சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது










