• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 13, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஜனாதிபதிக்கு எதிராக ஐ.நா.வில் முறைப்பாடு.!

Mathavi by Mathavi
May 13, 2026
in இலங்கை செய்திகள்.
0
ஜனாதிபதிக்கு எதிராக ஐ.நா.வில் முறைப்பாடு.!
Share on FacebookShare on Twitter

மே தினப் பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மனோ கணேசன், வே.இராதாகிருஷ்ணன், ஜீவன் தொண்டமான், ரஞ்சித் மத்தும பண்டார, தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட 24 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்கள் சுதந்திரம் தொடர்பான சிறப்பு அறிக்கையாளருக்கு இந்த முறைப்பாட்டுக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டுக் கடிதத்தில்,
“2026 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி சர்வதேச அனைத்துலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பொதுப் பேரணியின் போது, ஜனாதிபதி, 2026 மே 25 ஆம் திகதி வழங்கப்படவிருக்கும் ஒரு நீதித்துறைத் தீர்ப்பு குறித்துப் பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன், பொதுமக்கள் அதனைக் “கைதட்டி வரவேற்க” முடியும் என்றும் ஜனாதிபதி தமது உரையில் குறிப்பிட்டார்.

இந்த அறிக்கை, நிலுவையில் உள்ள நீதிமன்றத் தீர்ப்பு குறித்த முன் அறிவு இருப்பது போன்ற தோற்றம், உணரப்பட்ட அல்லது உண்மையான நிர்வாகத் தலையீட்டின் ஆபத்து, நீதித்துறை நடுநிலைமை மீதான பொதுமக்களின் நம்பிக்கை சிதைவு ஆகிய கடுமையான கவலைகளை எழுப்புகின்றது.

அத்துடன், தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர், வரவிருக்கும் ஒரு குறிப்பிட்ட முடிவைக் குறிப்பிடும் துல்லியத்தன்மை என்பன தீர்ப்பில் முறையற்ற செல்வாக்கு செலுத்தப்படலாம் என்ற நியாயமான அச்சத்தை உருவாக்குகின்றன.

இத்தகைய கருத்துக்கள் நீதித்துறையின் சுதந்திரத்தையும் நம்பகத்தன்மையையும் சீர்குலைக்கக்கூடும் என்று இலங்கை சட்டவாளர்கள் சங்கம் முறைப்படி கவலை தெரிவித்துள்ளது.

இலங்கை அரசமைப்பு, நீதித்துறை சுதந்திரத்தை அரசின் அடித்தளக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கின்றது.

குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கையின் 14 ஆவது பிரிவு, சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற தீர்ப்பாயத்தால் நியாயமான விசாரணை அளிக்கப்படுவதை உறுதி செய்கின்றது.

நீதித்துறையின் சுதந்திரம் குறித்த ஐ.நாவின் அடிப்படைக் கோட்பாடுகள் (1985), நீதித்துறை முறையற்ற தலையீடுகளிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும், அரசு அதிகாரிகள் நீதித்துறை சுதந்திரத்தைக் குலைக்கும் செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன.

ஜனாதிபதியின் கூற்று, அது உள்நோக்கத்துடன் கூறப்படாவிட்டாலும், ஒரு நேரடித் தலையீடாகவும், அனைத்துலக தரநிலைகளின்படி முறையற்ற செல்வாக்காகவும் அமைகின்றது.

நிலுவையில் உள்ள நீதித்துறை நடவடிக்கைகளைப் பாதிக்கக்கூடிய கருத்துகளை நிர்வாகம் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அனைத்துலக சட்டவியல் மற்றும் ஐ.நா. தரநிலைகள், மறைமுகமான அல்லது அடையாளப்பூர்வமான தலையீடு கூட பொது நம்பிக்கையைக் குலைக்கும் பட்சத்தில் அது ஒரு மீறலாக அமையக்கூடும் என்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்துகின்றன.” – என்றும் மேற்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Posts

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்; போக்குவரத்து பாதிப்பு.!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்; போக்குவரத்து பாதிப்பு.!

by Mathavi
May 13, 2026
0

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தற்போது கடும் மூடுபனி நிலவி வருகிறது....

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர்.!

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர்.!

by Mathavi
May 13, 2026
0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவருவதாக கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் நே.விமல்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நேற்று மாலை...

பாடசாலையில் கத்திக்குத்து தாக்குதல்; ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

பாடசாலையில் கத்திக்குத்து தாக்குதல்; ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
May 13, 2026
0

எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐந்து மாணவர்களும் தற்போது எப்பாவலை பிரதேச...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் ஆரம்பமான நாவிதன்வெளி பிரதேச சபை அமர்வு.!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் ஆரம்பமான நாவிதன்வெளி பிரதேச சபை அமர்வு.!

by Mathavi
May 13, 2026
0

முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து, நாவிதன்வெளி பிரதேச சபையில் இன்று புதன்கிழமை(13) உணர்வுப்பூர்வமான நினைவேந்தல் மௌன அஞ்சலியுடன் நிகழ்த்தப்பட்டது. நாவிதன்வெளி பிரதேச சபையின் 11ஆவது...

கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 13, 2026
0

உடப்பு, பூனபிட்டிய களப்பில் இருந்து நேற்று (12) மாலை புதிதாக திருமணமான இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர். கண்டெடுக்கப்பட்ட சடலம், உடப்பு, பெரியபாடு...

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

by Mathavi
May 13, 2026
0

கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியில், திக்வெல்ல - பொல்கஹமுல்ல பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் இன்று புதன்கிழமை (13) காலை பாடசாலை மாணவர்களை...

போதைப்பொருளுடன் இந்திய தொழிலதிபர் கைது.!

போதைப்பொருளுடன் இந்திய தொழிலதிபர் கைது.!

by Mathavi
May 13, 2026
0

சட்டவிரோதமாக "குஷ்" ரக போதைப்பொருளை நாட்டிற்கு கடத்தி வந்த வெளிநாட்டு பயணி ஒருவர், இன்று புதன்கிழமை(13) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு...

சட்டத்துக்கு எவரும் மேலானவர்கள் அல்லர்; வாக்குமூலம் அளிப்பது ஒன்றும் பேரழிவல்ல.!

சட்டத்துக்கு எவரும் மேலானவர்கள் அல்லர்; வாக்குமூலம் அளிப்பது ஒன்றும் பேரழிவல்ல.!

by Mathavi
May 13, 2026
0

நாட்டின் சட்டத்துக்கு அனைவரும் சமமானவர்கள் என்றும், தத்தமது பதவிகளைப் பொருட்படுத்தாது ஒவ்வொருவரும் சட்டத்துக்குத் தலைவணங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட...

நுவரெலியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

நுவரெலியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

by Mathavi
May 13, 2026
0

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் கன மழை பெய்து வருகிறது. காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக...

அம்பாறை மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

அம்பாறை மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

by Mathavi
May 13, 2026
0

தமிழின் அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் செவ்வாய்க்கிழமை(12) அம்பாறை மாவட்டத்திலும் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி