சர்ச்சைக்குரிய எயார்பஸ் மோசடி விசாரணைக்காக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பை ஏற்று, குறிப்பிட்ட திகதியில் தாம் ஆஜராகத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் உடலுக்கு நேற்று இறுதி மரியாதை செலுத்துவதற்காகச் சென்றிருந்த போதே, ஊடகங்களுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எயார்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
கபில சந்திரசேனவின் மரணம் மற்றும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் கெடுபிடிகள் குறித்து ராஜபக்ஷ தரப்பினர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் என்று செய்திகள் வெளியான நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் இந்த நேரடிப் பதில் அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமது தரப்பு நியாயங்களை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.










