தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:-
“தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு எமது மனப்பூர்வமான பாராட்டுக்கள்.” – என்றுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற ரீதியில், அவர் விடுத்துள்ள இந்த வாழ்த்துச் செய்தி, தமிழகத்தின் புதிய தலைமைக்கும் ஈழத் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் ஆரம்பமாகப் பார்க்கப்படுகின்றது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம், கடல் கடந்திருக்கும் தமிழர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வடக்கு – கிழக்குத் தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழரசுக் கட்சியும் தனது ஆதரவையும் வாழ்த்தையும் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.










