• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 6, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

விவசாயிகள் வீதிக்கு இறங்கினால் இந்த அரசாங்கம் தப்பவே முடியாது.!

Mathavi by Mathavi
May 6, 2026
in இலங்கை செய்திகள்.
0
விவசாயிகள் வீதிக்கு இறங்கினால் இந்த அரசாங்கம் தப்பவே முடியாது.!
Share on FacebookShare on Twitter

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகள் எதிர்கொண்டுள்ள விவசாயம் சார்ந்த சிக்கல்களுக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும். தவறினால், விவசாயிகள் அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்கிப் போராடுவார்கள். அந்தப் போராட்டங்களுக்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவசாய, கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சருக்கான கேள்வி – பதில் அமர்வின் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் அனர்த்தம் காரணமாக இலங்கையின் உள்நாட்டு உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேசிய அரிசி உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு பங்களிப்பை வழங்கும் 2025/2026 பெரும் போகச் செய்கை ஆரம்பத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளது.

வழமையாக 8 இலட்சம் ஹெக்டேயரில் பயிர்ச் செய்கை இடம்பெறும் நிலையில், இம்முறை 6 இலட்சத்து 3 ஆயிரத்து 960 ஹெக்டேயரில் மாத்திரமே செய்கை பண்ணப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக நெல், தேயிலை, தென்னை மற்றும் பழவகைகள் உள்ளிட்ட பெருமளவிலான பயிர்கள் அழிவடைந்துள்ளன.” – என்றார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் 2026 சிறு போகச் செய்கையை ஆரம்பிக்கவுள்ள நிலையில், சாணக்கியன் எம்.பி. அமைச்சரிடம் பின்வரும் கேள்விகளை முன்வைத்தார்.

2025/2026 பெரும் போக நெல் உற்பத்தி மதிப்பீடு எவ்வளவு? 2026 இல் நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதா?

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட விதைகள், உரம் மற்றும் இழப்பீட்டுத் தொகைகள் மாவட்ட ரீதியாக வகைப்படுத்திக் காட்டப்படுமா?

வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் 2026 சிறு போகத்தை உறுதிப்படுத்த நீர்ப்பாசன நீர் விடுவிப்பு மற்றும் விதை நெல் வழங்கல் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை?

சில மாவட்டங்களில் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதமாகியும் உரம் கிடைக்கவில்லை. உரம் விநியோகிக்க ஒப்பந்தம் செய்துள்ள CCC (PVT) LTD மற்றும் அரசாங்க உரக் கூட்டுத்தாபனம் விநியோகத்தைத் தாமதப்படுத்துவது குறித்து எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன?

மணல் கலந்த மண் என்பதால் ஏக்கருக்கு 100 கிலோ யூரியா தேவைப்படும் நிலையில், உர விநியோகத் தாமதம் விவசாயிகளைக் கடும் சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு அரசு உரிய முறையில் பதிலளிக்கத் தவறினால் பாரிய போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

Related Posts

கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 6, 2026
0

இரத்தினபுரி - பெல்மதுளை பகுதியில் இன்று அதிகாலை லொறி - முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் முச்சக்கரவண்டி சாரதி...

தமிழக முதல்வராகும் விஜய் விரைவில் இலங்கை வருவார் என நம்புகின்றோம்.!

தமிழக முதல்வராகும் விஜய் விரைவில் இலங்கை வருவார் என நம்புகின்றோம்.!

by Mathavi
May 6, 2026
0

"தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்த பின்னர் விஜய் இலங்கை வருவார் என நம்புகின்றோம்" என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி....

நீதிமன்றத்தின் மீதான நிறைவேற்று அதிகாரத்தின் தலையீடு; நாடாளுமன்ற விவாதத்தைக் கோரி எதிர்க்கட்சிகள் பிரேரணை.!

நீதிமன்றத்தின் மீதான நிறைவேற்று அதிகாரத்தின் தலையீடு; நாடாளுமன்ற விவாதத்தைக் கோரி எதிர்க்கட்சிகள் பிரேரணை.!

by Mathavi
May 6, 2026
0

நீதிமன்றங்களுக்கு நிறைவேற்று அதிகாரத்தால் விடுக்கப்படும் அழுத்தங்களைக் கண்டித்தும், இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவசர விவாதத்தை நடத்துமாறு கோரியும் எதிர்க்கட்சிகளினால் தயாரிக்கப்பட்ட விசேட பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது....

மன்னார் நகர மீன் விற்பனை நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும்.!

மன்னார் நகர மீன் விற்பனை நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும்.!

by Mathavi
May 6, 2026
0

மன்னார் நகர மீன் விற்பனை நிலையம் உடனடியாக நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும் என மன்னார் நரக சபை உறுப்பினர் சோமநாதன் பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்....

வித்தியா கொ*லை வழக்கு; நால்வரின் மரண தண்டனை உறுதி.!

வித்தியா கொ*லை வழக்கு; நால்வரின் மரண தண்டனை உறுதி.!

by Mathavi
May 6, 2026
0

முழு நாட்டையும் உலுக்கிய யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம்...

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது.!

போலி வைத்தியர் ஒருவர் கைது.!

by Mathavi
May 6, 2026
0

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் குருநாகல், பன்னல...

யாழில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்.!

யாழில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்.!

by Mathavi
May 6, 2026
0

யாழ். புங்குடுதீவு பகுதியில் மோட்டார் சைக்கிளும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன்போது புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த ரமணன் நிதுசன்...

காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மின் விளக்குகள் அமைக்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மின் விளக்குகள் அமைக்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

by Mathavi
May 6, 2026
0

அரசாங்கம் பாராமுகமாக செயற்படாமல் எல்லைப்புற கிராமங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து நிரந்தர யானை வேலியை அமைக்க முன்வரவேண்டும் என போரதீவுப்பற்று பிரதேச...

மதுபானசாலை திறப்பதற்கு எதிராக போராட்டம்.!

மதுபானசாலை திறப்பதற்கு எதிராக போராட்டம்.!

by Mathavi
May 6, 2026
0

நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது நோர்வூட் நகரில் புதிதாக ஒரு மதுபானசாலை திறப்பதற்கு எதிராக இன்று 06.05.2026 திகதி காலை 9.00.மணி முதல் 10.30. மணி...

முதலுதவிப் பெட்டிகள் கையளிப்பு.!

முதலுதவிப் பெட்டிகள் கையளிப்பு.!

by Mathavi
May 6, 2026
0

இன்றையதினம் Humedica சர்வதேச தொண்டு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட முதலுதவிப் பெட்டிகள் (First Aid Kits), வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்காக இன்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி