இன்றையதினம் Humedica சர்வதேச தொண்டு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட முதலுதவிப் பெட்டிகள் (First Aid Kits), வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்காக இன்று உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
மக்களின் பாதுகாப்பு மற்றும் அவசரகால முதலுதவித் தேவைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில், பிரதேச செயலகத்திற்கும் அத்துடன் பின்வரும் கிராம அலுவலர் J/422, J/424, J/427, J/428, J/431 பிரிவுகளுக்கும் முதலுதவிப் பெட்டிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
குறித்த முதலுதவிப் பெட்டிகள் நேற்றையதினம் Humedica நிறுவனத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற நிலையில் மேற்குறிப்பிட்ட கிராம தொகுதிகளின் அந்தந்தப் பிரிவுகளின் கிராம உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டன.
இதன்மூலம் குறித்த கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்கள், அவசர விபத்துக்கள் அல்லது மருத்துவத் தேவைகளின் போது உடனடி முதலுதவிச் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பிரதேச செயலகத்தின் இந்த முன்னெடுப்பு மற்றும் Humedica நிறுவனத்தின் மனிதாபிமான உதவி ஆகியவற்றுக்கு கிராம மட்ட உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.














