• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 6, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மின் விளக்குகள் அமைக்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

Mathavi by Mathavi
May 6, 2026
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள்
0
காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மின் விளக்குகள் அமைக்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு.!
Share on FacebookShare on Twitter

அரசாங்கம் பாராமுகமாக செயற்படாமல் எல்லைப்புற கிராமங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து நிரந்தர யானை வேலியை அமைக்க முன்வரவேண்டும் என போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட எல்லைப்புறக் கிராமங்களில் நிலவி வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாகச் சூரிய சக்தியிலான மின் விளக்குகள் அமைக்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வெல்லாவெளி வட்டாரத்திலுள்ள விவேகானந்தபுரம் உள்ளிட்ட எல்லைக் கிராமங்களில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது.

இதனால் மக்கள் தமது நாளாந்த வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாமலும், இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமலும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

குறிப்பாக, கடந்த 02.05.2026 அன்று சுரவணையடியூற்று கிராமத்தில் யானைத் தாக்குதலுக்கு இலக்காகித் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

யானை – மனித மோதல்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் சொத்து இழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன் அவர்களின் முயற்சியால் இந்த மின்விளக்குத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மின்சார வசதி இல்லாத மற்றும் யானை நடமாட்டம் அதிகம் காணப்படும் விவேகானந்தபுரம் – அம்மன்குளம் போன்ற பகுதிகளில் இன்று இந்தச் சூரிய சக்தி மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.

இதன் மூலம் இரவு வேளைகளில் யானைகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே அவதானித்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய தவிசாளர் வி. மதிமேனன் அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்.

“மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 96 கி.மீ தூரத்திற்கு யானை வேலி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தும், போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு ஒரு கிலோமீற்றர் கூட ஒதுக்கப்படாமை கவலைக்குரியது. இப்பகுதி தொடர்பில் அரசாங்கம் பாராமுகமாகவே செயற்படுகின்றது.

எல்லைப்புற கிராமங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து நிரந்தர யானை வேலியை அமைக்க வேண்டும்.

மேலும், ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் இந்தப் பிரச்சினையை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் வெல்லாவெளி வட்டார அமைப்பாளர் பிரதீப்குமார், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts

வித்தியா கொ*லை வழக்கு; நால்வரின் மரண தண்டனை உறுதி.!

வித்தியா கொ*லை வழக்கு; நால்வரின் மரண தண்டனை உறுதி.!

by Mathavi
May 6, 2026
0

முழு நாட்டையும் உலுக்கிய யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம்...

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது.!

போலி வைத்தியர் ஒருவர் கைது.!

by Mathavi
May 6, 2026
0

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் குருநாகல், பன்னல...

யாழில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்.!

யாழில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்.!

by Mathavi
May 6, 2026
0

யாழ். புங்குடுதீவு பகுதியில் மோட்டார் சைக்கிளும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன்போது புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த ரமணன் நிதுசன்...

மதுபானசாலை திறப்பதற்கு எதிராக போராட்டம்.!

மதுபானசாலை திறப்பதற்கு எதிராக போராட்டம்.!

by Mathavi
May 6, 2026
0

நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது நோர்வூட் நகரில் புதிதாக ஒரு மதுபானசாலை திறப்பதற்கு எதிராக இன்று 06.05.2026 திகதி காலை 9.00.மணி முதல் 10.30. மணி...

முதலுதவிப் பெட்டிகள் கையளிப்பு.!

முதலுதவிப் பெட்டிகள் கையளிப்பு.!

by Mathavi
May 6, 2026
0

இன்றையதினம் Humedica சர்வதேச தொண்டு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட முதலுதவிப் பெட்டிகள் (First Aid Kits), வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்காக இன்று...

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு நற்செய்தி.!

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு நற்செய்தி.!

by Mathavi
May 6, 2026
0

2025/2026 கல்வியாண்டிற்காக அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள், 2026 செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்....

உறுதியான ஆதரவை முதல்வராகவுள்ள விஜய்யிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.!

உறுதியான ஆதரவை முதல்வராகவுள்ள விஜய்யிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.!

by Mathavi
May 6, 2026
0

கடந்த காலங்களில் தமிழ்நாட்டு மக்களும் தலைவர்களும் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்குப் பெரும் அரணாகத் திகழ்ந்திருந்ததுடன் ஈழ விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்றிருந்த தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்...

மின்சாரக் கட்டணத் திருத்தம்; பொதுமக்களின் கருத்துக்கேட்பு ஆரம்பம்.!

மின்சாரக் கட்டணத் திருத்தம்; பொதுமக்களின் கருத்துக்கேட்பு ஆரம்பம்.!

by Mathavi
May 6, 2026
0

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று (06) நடைபெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று காலை...

அர்ச்சுனாவால் கொ*லை மிரட்டலுக்குள்ளான குடும்பப் பெண்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

மகளை துஷ் – பிரயோகம் செய்த கள்ளக்காதலன்; தாய்க்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

by Mathavi
May 6, 2026
0

தனது கள்ளக்காதலன் மகளை துஷ்பிரயோகம் செய்தமையை மறைத்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட தாய், எதிர்வரும் 13 ஆம் திகதி...

மலையக மக்களின் நில உரிமையை உறுதிப்படுத்துங்கள்.!

மலையக மக்களின் நில உரிமையை உறுதிப்படுத்துங்கள்.!

by Mathavi
May 6, 2026
0

இரத்தினபுரி மாவட்டத்தின் காவத்தை - நீலகாமம் தோட்டத்தில் தொழிலாளர்களின் குடியிருப்பு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி